tag:blogger.com,1999:blog-51557500010307764962024-03-12T22:38:20.446-07:00மஸ்ஜிதுர் ரஹ்மான் வடக்கு மாங்குடிmangudi mailhttp://www.blogger.com/profile/02988972105039050840noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-5155750001030776496.post-71867521868564163272012-02-12T19:41:00.000-08:002012-02-12T19:41:16.653-08:00காதலா?உறவா?...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<table class="contentpaneopen"><tbody>
<tr><td class="contentheading" width="100%"></td><td align="right" class="buttonheading" width="100%"><br /></td><td align="right" class="buttonheading" width="100%"><br /></td></tr>
</tbody></table>
<table class="contentpaneopen"><tbody>
<tr><td valign="top"><div class="itp-share">
<div class="itp-share-fbl">
<span></span></div>
</div>
<div dir="ltr">
<img src="http://nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2045%20%208%2098.png" style="float: left;" /><strong><span style="background-color: #d72859; color: white;"> காதல் முக்கியமா? உறவு முக்கியமா? </span></strong></div>
<br /><div dir="ltr">
இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.</div>
<div dir="ltr">
பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
ஒரு காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை அவர்கள் அதிகமாக வீட்டில்தான் இருப்பார்கள். பொழுதுபோக்கு என்பது ரேடியோ மட்டும்தான் இருக்கும். டிவி இருக்கும் வீடு விரலைவிட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கும். இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தப்படியே எல்லாம் பார்க்கலாம் ,பேசலாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண்ணை படிக்கவைத்து, படிப்புக்கு பிறகு அவளுக்கு திருமணம் செய்வதற்கு பேசி முடித்து, பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில், அந்த பெண் திடிரென்று யாரோ ஒருவனுடன் ஓடிவிடுகிறாள் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது உண்மைதானே?</div>
<div dir="ltr">
<br /></div>
<br /><blockquote class="tr_bq">
<div dir="ltr">
உறவை விட காதல் தான் முக்கியம் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் சில நாட்கள் பழகிய ஒருவனுடன் இப்படி ஓடும் எதனை பெண்கள் ,அந்த குடும்பத்தின் நிலை என்ன? அந்த குடுபத்தில் இன்னுரு பெண் இருந்தால் அவள் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா? அன்பு சகோதரிகளே! <b style="color: red;">அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்! பெற்றோரை கண்ணிய படுத்துங்கள்! ஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் என்று சொல்வார்கள். வேண்டாம் இந்த காதல். விபரிதம் தெரியாமல் இந்த காதலில் சிக்கி விடாதீர்கள்!</b></div>
</blockquote>
<div dir="ltr">
உங்கள் குடும்பத்தை தலை குனிய வைத்துவிடாதீர்கள், உறவு தான் முக்கியம் அது தான் கடைசி வரை வரும் என்பதை மறந்து விடாதீர்கள்! அந்த காதல் இந்த காதல் கள்ள காதல் சொல்லாத காதல் சுகமான காதல் ஊரை சுற்றும் காதல் இப்படி பலவகை காதல் இருக்கிறது. உண்மையான காதல் என்பது எது என்று புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப்பிறகு உங்கள் துணையுடன் கொள்ளும் காதலே உண்மையானது, நிலையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.பள்ளிக்கு போனால் படிப்பை மட்டும் கவனியுங்கள். பெறோர்கள் உங்களை நம்ம்பி அனுப்புகிறார்கள் அவர்களுக்கு மோசம் செய்யாதீர்கள்! மாற்று மத பெண்களுடன் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கு உங்கள் செல் போன் நம்பரை கொடுக்காதீர்கள்! அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் நற்கிருபை செய்வானாக, ஆமீன்.</div>
</td></tr>
</tbody></table>
<br />
<a href="http://www.marhum-muslim.com/">http://www.marhum-muslim.com/</a></div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-14484265685606305102012-02-12T19:39:00.001-08:002012-02-12T19:39:51.127-08:00நல்ல அனுபவமுண்ணே....!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<table class="contentpaneopen"><tbody>
<tr><td class="contentheading" width="100%"></td><td align="right" class="buttonheading" width="100%"></td><td align="right" class="buttonheading" width="100%"><a href="http://nidur.info/component/mailto/?tmpl=component&link=87f6b0df677e5e1c33c6476d9fbb84845a4cc68e" title="E-mail"><img alt="E-mail" src="http://nidur.info/templates/rt_vertigo_j15/images/emailButton.png" /></a></td></tr>
</tbody></table>
<table class="contentpaneopen"><tbody>
<tr><td valign="top"><div class="itp-share">
<div class="itp-share-fbl">
<span></span></div>
</div>
<div dir="ltr">
<img src="http://nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2043%20%2051.jpg" style="float: left;" /><strong><span style="color: #cd3157;"><span style="color: #385dc7;"></span> (உண்மைக் சம்பவம்) </span></strong></div>
<br /><div dir="ltr">
அஸ்ஸலாமு அலைக்கும்,</div>
<div dir="ltr">
மயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய கேள்வியை என் ஓனர் கேட்டார். (அனைத்து பிரிவிலும் நல்ல அனுபவம் இருந்தாலும் டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் அதாங்க புடவை, கட்பிஸ் பிரிவில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக) அண்ணே எனக்கு ரெடிமேடு லைனில் நல்ல அனுபவமுண்ணே எண்றேன். அதிலும் வந்தது சோதனை.</div>
<div dir="ltr">
சுடிதார் செக்ஷனில் நின்னுக்கே அந்த செக்ஷனில் தான் ஆள் இல்லை என்று அதில் தள்ளி விட்டார் Free size சுடிதார் செக்ஷன் அதற்கு புடவை பிரிவே எவ்வளவோ மேல் அங்கு வருகிற பெண்கள் கூட்டம் இங்கும் வருவார்கள் சரி சமாளிப்போம் என்று கவுண்டருக்குள் இறங்கினேன்.</div>
<div dir="ltr">
2001ல் சாரி மெட்டீரியல் வகை சுடிதார்கள் புதிய மாடலாக அறிமுகமாகிய காலகட்டம் சாரியை பிரிச்சு காட்டுகிற மாதிரியே சுடிதார்களையும் பிரித்து கையில்,கழுத்தில் என்ன டிசைன் வருகிறது என்று விளக்க வேண்டும்.</div>
<div dir="ltr">
இரண்டே மாதத்தில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பெண்கள் எந்த வகையான மாடல் சுடிதார்கள் விரும்புகிறார்கள், அவர்களிடம் எப்படி பேச வேண்டும் எந்தவகையான சுடிதார்கள் அதிக சேல்ஸ் இப்படி அனைத்தையும் கவணித்து நல்ல சேல்ஸ்மேனாக மாறினேன். எப்படிப்பட்ட் நல்ல சேல்ஸ்மேன் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். அதிலே நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்.</div>
கல்லூரியில் படிக்கும் பெண்கள் ஒரு குரூப்பாக சுடிதார் எடுக்க வந்தார்கள். இவர்களிடம் விற்க வேண்டும் என்றால் துணியின் தரம், டிஷைன் மெட்டீரியல் இவைகளை விடிய விடிய சொன்னாலும் வேலைக்காகாது. அந்த வருடம் வந்த திரைப்படத்தின் பெயரைச் சொல்லி இந்த படத்தில் இந்த காட்சியில் அந்த நடிகை அனிந்திருந்த சுடிதார் என்று ஒரு பொய்யை அடித்து விட்டால் போதும் விழுந்தடித்து வாங்கி விட்டு போவார்கள். அன்றும் அதே கதை தான். இதை பாருங்க இது ரன் படத்தில் மீரா ஜாஸ்மீன் போட்டிருந்த சுடிதார் என்று ஆரம்பித்தேன்.<br /><div dir="ltr">
இந்த கலரில் ரன் படத்தில் ஒரு கட்டத்தில் கூட மீரா ஜாஸ்மீன் சுடிதார் போடவில்லை என்று அந்த குரூப்பில் கொஞ்சம் விவரமான பெண்ணிடமிருந்து குரல் வந்தது . அடுத்த விநாடியே யோசிக்காமல் மாதவன் கூட கையை பிடிச்சுகிட்டு ஓடிப்போகிற சீனை மறுபடிக்கும் நல்ல பாருங்க. லைட் வைலட் கலரில் இந்த கலரில் சுடிதார் போட்டு இருப்பார் என்று மடக்கி விற்று நல்ல சேல்ஸ்மேன் என்று பெயரெடுத்தேன்.</div>
<br /><div dir="ltr">
நல்ல விற்பனையாளர் என்று பெயரெடுக்காத பலர் அந்த கடையில் வேலை பார்த்தார்கள். அவர்களில் ஒருவர்தான் புடவை பிரிவில் இருந்த அண்ணன் காதர் அவருக்கு 65 வயதிற்கும் மேலிருக்கும். நேர்மையாக விற்பனை செய்ய நினைப்பவர் புடவையின் தரம், ரகம், முந்தியில் பாருங்க, அழகான டிசைன் இப்படித்தான் பேசுவாரே தவிர நடிகைகளை இழுக்க மாட்டார். அதனால் அவர் முதலாளியின் பார்வையில் திறமையற்ற சேல்ஸ்மேன்.</div>
<div dir="ltr">
ஒரு முறை இப்படித்தான் ரொம்ப காஸ்ட்லியான வாடிக்கையான கஸ்டமர் புடவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவரும் சளைக்காமல் இறக்கி ரகங்களை காட்டிக் கொண்டும் அதன் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்கள் திருப்தியடையாமல் போய் விடக்கூடிய சூழலை உணர்ந்த சூப்பர்வைசர் (முதலாளியின் மச்சான்) வேகமாக என்னிடம் வந்து டேய் கஸ்டமர் போயிருவாங்க போல நீ போ என்றார்.</div>
<div dir="ltr">
பழைய சேல்ஸ்மேனை நம்பாமல் நம்மை கூப்பிடுகிறார் என்றால் ம்ம்ம் நீ பெரிய ஆளுடா என்ற அகம்பாவம் தலைக்கு ஏற உள்ளே போய் புதுசா வந்திருக்கிற சேலை ரகங்கள் உள்ளே இருக்கு. இந்தா எடுத்து தருகிறேன். மெளனம் பேசியதே திரைப்படத்தில் த்ரிஷா கட்டின சேலை இருக்கு, பாபாவில் மனீஷா கொய்ராலா கட்டுன டிசைன் சேலை இருக்கு பாருங்க என்றதும் எங்கே எங்கே காட்டுங்கள் பார்ப்போம் என்று அந்த பெண்களிடம் பரபரப்பு பற்றிக் கொண்டது. கொஞ்சம் நேரத்தில் வெற்றிகரமாக பல சேலைகளை வாங்கி செல்ல வைத்தேன்.</div>
<div dir="ltr">
வாடிக்கையாளர் வெளியே போனதும் நேராக சூப்பர்வைஸர் காதர் பாயிடம் வந்து திட்ட ஆரமித்தார். அவன பாருங்க சின்ன பையன் அவனுக்கு இருக்குற புத்தி ஒங்களுக்கு ஏன் இல்லை. அவனுடைய ''.......'' வாங்கி குடிங்க என்று அசிங்கமாக ஏசியதை எதிர்த்து பேசமால் தலைகுனிந்து திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அப்பதான் எனக்கு அறிவு வந்தது. ஒரு நேர்மையான பெரிய மனிதரை திட்டு வாங்க வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மனதை அறுத்தது. தணிப்பட்ட முறையில் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். விடுடா நான் மனதில் எதுவும் நினைக்கவில்லை என்று சாதாரணமாக சொன்னார். அப்போது தான் அவரைப் பற்றி விசாரிக்க தோன்றியது.</div>
<div dir="ltr">
''அண்ணே எத்தனை வருஷமாக இங்கு வேலை பார்க்கிறீர்கள். இதற்கு முன் எங்கிருந்தீர்கள்?''</div>
<div dir="ltr">
''அஞ்சு வருஷமாக இங்கு வேலை பார்க்கிறேன். 28 வயசுலே சவூதிக்கு போனேன் 60 வயது வரை அங்குதான் வேலை பார்த்தேன்'' என்றார்.</div>
<div dir="ltr">
32 வருடம் சவூதியில் சம்பாதிக்கவில்லையா? பணத்தை சேர்க்கவில்லையா? ஏன்ணே 32 வருடம் உழைத்த பணத்தை வைத்து வீட்டில் பேரன் பேத்தியோடு நிம்மதியாக இருக்குறத விட்டுபுட்டு இவிய்ங்ககிட்ட வந்து திட்டு வாங்கிட்டு கெடக்குறீகளே?'' என்றேன்.</div>
<div dir="ltr">
அதற்கவர் ''அடப் போடா 32 வருடம் சம்பாதித்தேன். பசங்களை நல்ல பெரிய படிப்பு படிக்க வைத்தேன். குமர்களை கட்டிக் கொடுத்தேன், வீடு கட்டினேன். அவ்வளவுதான் கையிலே சல்லி காசு இல்லே.கல்யாணம் ஆகி பசங்க வெளிநாட்டில் இருக்குற நாளே மனைவிமார்கள் அம்மா வீட்டில் இருக்க விரும்புறாங்கன்னு சொல்லி அங்கே விட்டுட்டு போயிட்டாய்ங்கே. எனக்கு பணமும் அனுப்புவதில்லை. 32 வருடம் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வரும்போது சர்க்கரை வியாதி,பிளாட் பிரஷர் இப்படி பல வியாதிகளையும் கொண்டு வந்திட்டேன். மருந்துக்கே எனக்கும் என் மனைவிக்கும் மாதம் 2500 ரூபாய் வேண்டும். நான் எங்கே போவேன் அதான் இங்கு இவிய்ங்ககிட்ட திட்டு வாங்கி கொண்டு குப்ப கொட்டிக் கிட்டு இருக்கிறேன்'' என்று சொல்லிக் கொண்டே விரக்தியான சிரிப்பை உதிர்த்தார்.</div>
<div dir="ltr">
சத்தியமாக என்னால் அந்த சிரிப்பை ரசிக்க முடியவில்லை அதற்கு பிறகு 2004ல் விசா கிடைத்து சவூதிக்கு போகிறேன் என்று அவரிடம் போனில் சொன்னபோது அடுத்த பலிஆடா என்று சிரித்தார். என்னிடமிருந்தும் விரக்தியான ஒரு சிரிப்பு அத்துமீறி வெளிப்பட்டது.</div>
<div dir="ltr" style="color: #660000;">
<b>நன்றி: வலையுகம் Dr. ஹைதர் அலி</b></div>
<div dir="ltr">
<span style="color: #b82845;">( </span><span style="color: #b82845;">கட்டுரையின் முகப்பில் உள்ள <span style="color: #333399;">புகைப்படத்தில் உள்ளது </span>மயிலாடுதுறை மணிக்கூண்டு )</span></div>
</td></tr>
</tbody></table>
<br />
<a href="http://www.marhum-muslim.com/">http://www.marhum-muslim.com/</a></div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-63087029952080031962012-02-12T19:38:00.000-08:002012-02-12T19:38:01.229-08:00பிஞ்சு மனம் நஞ்சானதே...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="post-body entry-content">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong><span style="color: #c53a50;">சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய இரண்டு கொலைகள்.</span></strong><br /><br />ஒன்று: சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம்.<br />அடுத்தது: மதுரை, திருப்பாலையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் மனைவியே, கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம். <br />இரண்டுமே திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல என்று தெரியவருகிறது<br />முதலாவதாக; சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம். கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கும் செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொலை நிகழ்ந்தது. அந்த பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரிடம் படிக்கும் 9-வது வகுப்பு மாணவனே இந்த கொடூரத்தை செய்துவிட்டான்.<br />அந்த பள்ளி மாணவன் தற்போது கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பிஞ்சு மனது நஞ்சாகி கொலை செய்யும் அளவுக்கு அவன் எவ்வாறு தூண்டப்பட்டான் என்பது அவனது வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.<br /><br />அந்த மாணவன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு தற்போது புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அதே சீர்திருத்த இல்ல வளாகத்தில் செயல்படும் சீர்திருத்த நீதிமன்றம் அவன் மீதான வழக்கை விசாரிக்க உள்ளது.<br />பொதுவாக அறியாத வயதில் புரியாமல், தெரியாமல் சிறுவர்- சிறுமிகள் குற்றங்களில் ஈடுபட்டு இந்த இல்லத்தில் அடைக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் விரும்பிய நேரத்தில் இவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.<br />சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டவுடன் அவன் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 3 பெண் அதிகாரிகள் அவனிடம் அன்பாக பேசினார்கள். அவனது மனம்கோணாத வகையில் நடந்த சம்பவம் பற்றி அவனிடம் அன்பாக பேசி கேட்டறிந்தார்கள். முதலில் இல்லத்துக்கு சென்றவுடன் மாணவன் வருத்தத்தோடும், மனஇறுக்கத்தோடும் காணப்பட்டான். பெண் அதிகாரிகளின் அரவணைப்பான பேச்சால், இயல்பான அவன் நடந்த சம்பவம் பற்றி விளக்கி கூறியுள்ளான்.<br />கொலை செய்தது ஏன்? எனக்கேட்டதற்கு, ''ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர்.அதே நேரத்தில் கண்டிப்பாக பேசுவார். முதலில் அவரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. வீட்டில் நான் ஒரே பிள்ளை. அப்பா-அம்மா, என்னை செல்லமாக வளர்த்தார்கள்.<br />வீட்டில் எனக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும். நான் அந்த அறையில் இருந்துதான் படிப்பேன், படுத்து தூங்குவேன். கொலை, வெட்டுக்குத்து, வில்லனை கதாநாயகன் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சிகள் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில படங்களையே நான் விரும்பி பார்த்தேன். கடைசியாக `அக்கினி பத்' என்ற இந்தி படத்தை நான் பார்த்தேன். அதில், கதாநாயகன், வில்லனை கத்தியால் நெற்றியில் குத்துவான். அந்த காட்சி எனது மனதில் ஆழமாக பதிவானது.<br />நான் இந்தி பாடத்தை சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி என்னை கண்டிப்பார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3 முறை எனது `ரிப்போர்ட்' கார்டில் என்னைப்பற்றி தவறாக எழுதிவிட்டார். என்னிடம் பாசத்தை கொட்டும் எனது தந்தைகூட இதை பார்த்துவிட்டு என்மீது கோபப்பட ஆரம்பித்தார். எனக்கு தினமும் செலவுக்காக நான் கேட்கும் பணத்தை என் அப்பா கொடுப்பார். ரிப்போர்ட் கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்தவுடன் எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பதை இனிமேல் தரமாட்டேன் என்று எனது தந்தை கண்டிப்பாக கூறினார்.<br />இது, மனதுக்கு ஒரு கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆசிரியை மீது கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த புதன்கிழமை அன்று இந்தி பாடம் சரியாக படிக்காத என்னைப் போன்ற 7 மாணவர்களை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு வகுப்புக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி வரச்சொன்னார். அப்போது அவர் என்னை திட்டினார். இனி ஒழுங்காக படிக்காவிட்டால், பெயிலாகி விடுவாய் என்று சொன்னார். இது, எனது மனதில் ஏற்கனவே இருந்த கோபத்தோடு பயத்தையும் உண்டாக்கியது.<br />ஆசிரியை இவ்வாறு சொன்னதை பார்த்து, எனது சகமாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இது, எனக்கு அவமானத்தையும், மேலும் கோபத்தையும் தூண்டியது. அப்போதுதான் இந்தி படத்தில் வரும் காட்சியைப்போல, ஆசிரியையை கத்தியால் குத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியை செத்துப்போவார். போலீசார் பிடிப்பார்கள். நம்மை இப்படி இல்லத்தில் அடைப்பார்கள் என்று எதுவும் எனக்கு தெரியாது. இப்போது வருத்தமாக உள்ளது," என்று கூறியுள்ளான்.<br />அந்த மாணவனுக்கு கவுன்சலிங் கொடுத்து இயல்பாக இருக்க வைத்துள்ளனர் போலீசார். நேற்று காலையிலும், நேற்று முன்தினம் காலையிலும் அவனுக்கு ஒரு மணி நேரம் யோகா சொல்லிக்கொடுக்கப்பட்டது. மற்ற மாணவர்களோடு விளையாடவும் அனுமதிக்கப்பட்டான்.<br />டிவி பார்க்கவும், விளையாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் தெரிந்த 2 ஆசிரியைகள் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். அந்த மாணவனுக்கு புதிய சீருடை தைத்து வழங்கப்பட்டது.<br />ஒரு குற்றவாளி என அந்த மாணவனுக்கு நினைப்பு வராத அளவுக்கு பார்த்துக் கொள்கின்றனர் அந்த இல்லத்தில். அவனுக்கு என்ன தண்டனை என்பதை சீர்திருத்த நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.<br /><strong><span style="color: #d52956;">மற்றொன்று :</span></strong><br /><strong><span style="color: #d52956;">வேலியே பயிரை மேய எத்தனித்த சம்பவம் </span></strong><br /><img src="http://nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2043%20%2022.jpg" style="float: left;" /><strong><span style="color: purple;">மதுரை, திருப்பாலையில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் மனைவியே, கணவரை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றார்.</span></strong><br /><br />இந்த சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து உஷாராணியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.<br />இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கொலையுண்ட ஜோதிபாசு என்ற வீரண்ணன் தனது மகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி உஷாராணி மகளின் மானத்தை காப்பதற்காகவே வீரணனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்றார். இதனை உறுதிப்படுத்திக் கொள்ள உஷாராணியின் 2-வது மகள் பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.<br />அவரது உடலில் பல இடங்களில் கீறல்கள் மற்றும் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஜோதிபாசு தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றதும், அதிலிருந்து மகளை காப்பாற்றவே உஷாராணி தனது கணவரை கொலை செய்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.<br />இந்திய தண்டனை சட்டம் 100, 120 பிரிவுகளின் படி பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்வதற்காக கொலை செய்தால் அது சட்டப்படி குற்றமாகாது.<br />எனவே அதன்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. தங்கவேலு, இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் உஷாராணியை விடுதலை செய்தனர்.<br />கொலை வழக்குகளில் இதுபோல விடுவிக்கப்படுவது மிக அரிய நிகழ்வாகும். போலீசாருக்கு ஜோதிபாசு பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதாலும், பல காவல் நிலையங்களின் குற்றவாளிகள் பட்டியலில் அவர் இருப்பதாலும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.<br />ஏற்கெனவே இவர் மனைவி மற்றும் மகள்களை துன்புறுத்துவதாக போலீசில் புகார் இருந்தது. இந்தப் புகார் குறித்து விசாரித்த போலீசாரிடம், இனி மனைவியை அடிக்கவே மாட்டேன் என உறுதி அளித்துவிட்டுப் போனாராம். அடுத்த 15 தினங்களில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கேவலத்தை அரங்கேற்றியுள்ளார். அதன் விளைவாகவே உஷா ராணி அடித்துக் கொன்றுவிட்டார்.<br />இந்த மாதிரி வழக்குகளில் போலீசாருக்கு உண்மை முழுமையாகத் தெரிந்தால், அவர்களே முடிவெடுக்க அதிகாரம் உள்ளது.<br />இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் கூறுகையில், "பெண்களின் தற்காப்புக்காக அரசியல் சட்டம் அளிக்கும் உரிமை இது. குற்றத்துக்கான முகாந்திரம் உறுதியாகத் தெரிந்ததால் இந்த முடிவை மேற்கொண்டோம்," என்றார்</div>
<div style="clear: both;">
<a href="http://www.marhum-muslim.com/">http://www.marhum-muslim.com/</a></div>
</div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-79357751447527032592012-02-11T02:06:00.000-08:002012-02-11T02:06:32.625-08:00கோபக்காரக் கணவனை சமாளிப்பது எப்படி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: #339966; color: white;"><strong><img height="304" src="http://nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%2001%20%207%20%20-%20%202%2068.jpg" style="float: left;" width="320" />மவ்லவி, எஸ். லியாகத் அலீ மன்பஈ . </strong></span>கணவன் நற்குணம் கொண்டவனாக இருந்து விட்டால் அந்தப் பெண் பெரும் பாக்கியசாலி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. <span style="color: blue;">‘ஒருவர் உங்களிடம் பெண் கேட்கின்றார். அவரது மார்க்க ஒழக்கமும், குணமும் உங்களுக்குத் திருப்தியாக இருந்தால் அவருக்கு உடனடியாக உங்கள் பெண்ணை மணமுடித்துவிடுங்கள்’</span> என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆண்மகனிடம் - மணமகனிடம் நாம் எதிர்பார்க்க வேண்டிய மிக முக்கியமான பண்புகள் மார்க்க ஒழுக்கமும், நற்குணமும்தான் என்பதை உணரமுடியும். <br />
<br />
<div dir="ltr">
கோபமுள்ள கணவன்மார்களைப் பெற்ற இல்லத்தரசிகள் தங்கள் வாழ்வை இனிமையானதாக ஆக்கிக்கொள்ள மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கலாம்.</div>
<br />
<div dir="ltr">
ஒன்று தமது குணத்தை அழகாக்கிக் கொள்வது. இரண்டு, மார்க்க அறிவைப் பெருக்கிக் கொண்டு தம் கணவருக்கு அடிக்கடி நல்லுபதேசம் செய்து அதன் மூலம் திருத்த முயற்சித்தல். மூன்று, வல்ல ரஹ்மானிடம் தம் கணவரின் நற்குணத்திற்காக பிரார்த்திப்பது. இம்மூன்றின் மூலம் எவ்வளவு கோபமான கணவனையும் சமாளித்து விடலாம். </div>
<div dir="ltr">
நல்ல மனைவிக்குரிய இலக்கணத்தைச் சொன்ன நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவளது கணவன் அவளைப் பார்த்தால் அவனுக்கு அவள் மகிழ்ச்சியூட்டுவாள். அவன் அவளுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் உடனே கீழ்ப்படிவாள். அவன் அவளை விட்டு வெளியே சென்றுவிட்டால் தனது கற்புக்கும் அவனது உடமைகளுக்கும் காவலாக இருப்பாள்’ என்று கூறினார்கள்.</div>
<br />
<div dir="ltr">
இந்த அற்புதமான மணிமொழியை ஒரு பெண் நடைமுறைப்படுத்தினால் எவ்வளவு கொடிய கணவனாக இருந்தாலும் நிச்சயம் திருந்திவிடுவான் என்பது நிதரிசனமான உண்மையாகும். (ஊருக்கும் உலகத்திற்கும் பெரிய ரவுடியாக, எல்லோரும் பயப்படக்கூடிய ஆளாக இருக்கும் சிலர் தனது மனைவியிடம் பெட்டிப்பாம்பாக அடங்கிப் போவதை மிகவும் எதார்த்தமாக அன்றாட நடைமுறையில் காணத்தானே செய்கிறோம்!)</div>
<br />
<div dir="ltr">
<strong><span style="background-color: #666699; color: white;">ஸலாம் கூறுங்கள் </span></strong></div>
கணவன் வீட்டுக்குள் வந்தவுடன் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படும் வகையில் நடந்து கொள்வது நல்ல மனைவியின் நற்பண்பு மட்டுமல்ல, கெட்டகணவனைத் திருத்துவதற்கும் சிறந்த வழிகாட்டலாகும். <br />
<br />
<div dir="ltr">
இல்லத்தரசிகளே! கணவனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருங்கள். அவன் வந்தவுடன் அகமும் முகமும் மலர்ந்து அன்புடன் வரவேற்புக் கொடுங்கள். வந்ததும் வராததுமாக வீட்டின் குறைகளையும் பிள்ளைகளின் குற்றங்களையும் உடனே எடுத்துரைக்காதீர்கள். வீட்டுக்குள் நுழையும் கணவன் ஸலாம் சொன்னால் புன்னகையுடன் பதில் ஸலாம் கூறுங்கள். இல்லையென்றால் நீங்களே முந்திக்கொண்டு ஸலாம் சொல்லுங்கள். உங்கள் ஸலாம் அவரை அமைதிப்படுத்த உதவும்.</div>
<br />
<div dir="ltr">
'உங்கள் மீது சாந்தி<i>யு</i>ம், சமாதானமும், இறைவனின் அருளும் அபிவிருத்தியும் உண்டாகட்டும்' என்ற அழகிய பொருளைக்கொண்ட ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு’ எனும் ஸலாம் அவரை நிச்சயம் அமைதிப்படுத்தாமல் இருக்காது.</div>
<div dir="ltr">
<strong><span style="background-color: #666699; color: white;">உடனே மறுப்பு வேண்டாம்! </span></strong></div>
<div dir="ltr">
<span style="color: black;">நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அடுத்த போதனைப்படி கணவனுடைய கட்டளை எதுவாயினும் அது உங்களுக்குப் பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை உடனே செயல்படுத்துங்கள். இதுவும் கணவனின் கோபம் குறைந்து அன்பு பெருக வழி வகுக்கும். கணவனின் கருத்துக்கு மதிப்பளிப்பது இதற்கு முதற்படியாகும். கணவன் என்ன சொன்னாலும் முதலில் அதை ஆமோதித்து விடுங்கள். அவர் சொல்லி முடித்த பிறகு அது பற்றிய உங்கள் கருத்தை அமைதியாக எடுத்துக் கூறுங்கள். சூழ்நிலையறிந்து, சுற்றம் புரிந்து செயல்படுங்கள்.</span></div>
<div dir="ltr">
ஒரு பெண் தமது அன்பான நடவடிக்கையினால் தமது அழகிய குணத்தால் எந்தக் கணவனையும் வெல்ல முடியும்.</div>
<div dir="ltr">
<strong><span style="background-color: #666699; color: white;">நல்லுபதேசம் </span></strong></div>
<div dir="ltr">
<span style="color: black;">மார்க்க ஞானம் கற்ற பெண்ணாக இருந்தால் அந்த ஞானத்தை வைத்து கணவனைத் திருத்துவதும் சுலபமே. கடும் கோப குணம் கொண்டிருந்த முரடரான உமர் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை திருக்குர்ஆனின் வசனங்கள்தானே திருத்தின! அதே வசனங்களும், அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு மொழிகளும் எந்த மனிதரையும் மாற்ற வல்லவை என்பதில் ஏது ஐயம்?</span></div>
<div dir="ltr">
இமாம் பாகிர் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் அடிமைப்பெண் ஒருத்தி அவர்களின் மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கி வரும்போது கால் இடறிக் கீழே விழுந்தாள். கை நழுவிய குழந்தை படிக்கட்டுகளில் உருண்டு உருண்டு கீழே வந்தது. இமாம் அவர்கள் ஓடிப்போய்த் தூக்கினார்கள். ஆனால் அக்குழந்தையின் உயிர் பிரிந்திருந்தது. இமாம் அவர்கள் கடுமையான கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். அந்த அடிமைப்பெண் உடனே திருக்குர்ஆனின் வசனமொன்றை ஒத ஆரம்பித்தார். பயபக்தி மிக்கோரின் பண்புகளைப் பட்டியலிட்டுக் கூறும் வசனம் அது.</div>
<br />
<div dir="ltr">
‘அவர்கள் இன்பத்திலும், துன்பத்திலும், வளமான நிலையிலும், வறுமையான நேரத்திலும் தாராளமாகச் செலவு செய்வார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மனிதர்களை மன்னிப்பார்கள். அத்தகைய உபகாரிகளை அல்லாஹ் நேசிக்கின்றான்’ என்பது அந்த வசனத்தின் கருத்தாகும். கடும் கோபத்தில் இருந்த இமாம் அவர்களின் செவியில் இந்த வசனம் விழுந்ததுதான் தாமதம்! மகுடிக்கு மயங்கிய பாம்பு போல் அப்படியே சினத்தை விழுங்கினார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னார்கள், ‘அடிமைப்பெண்ணே! உன்னை நான் மன்னித்தேன். உன் மீது ஏற்பட்ட கோபத்தை மென்று விழுங்கி விட்டேன். உன்னை அடிமைத்தளையிலிருந்து நீக்கி உரிமை விட்டு விட்டேன். அல்லாஹ் என்னை நேசிப்பானாக’.</div>
<br />
<div dir="ltr">
<strong><span style="background-color: #666699; color: white;">துஆ - பிரார்த்தனை தான் இறுதி ஆயுதம் </span></strong></div>
<div dir="ltr">
இது போன்ற சந்தர்ப்பங்களில் மார்க்க ஞானம் கற்றவளாக இருந்தால் அந்தப் பெண், தனது கணவனின் கோபத்தை சமாளித்திட இயலும். இதற்கும் அவன் அசைந்து கொடுக்காதவனாக இருந்தால், அப்பொழுது அல்லாஹ்விடம் அழுது துஆ செய்வதைத் தவிர வேறு வழியில்லை.</div>
<br />
<div dir="ltr">
முரண்டு செய்யும் மனைவியைத் திருத்த மூன்று வழிகளைக் கற்பித்த வான்மறை குர்ஆன், தானாகத் திருத்த முடியாத சூழ்நிலையில் இரு குடும்பத்தையும் சார்ந்த நடுநிலையாளர்களை வைத்து சமாதானம் செய்யுமாறு கட்டளையிடுகின்றது. அது கணவன் விஷயத்தில் மனைவிக்கும் பொருந்தும். தமது நற்குணத்தினாலும், அழகிய உபதேசத்தாலும், அற்புத துஆவினாலும் கணவனைத் திருத்த முடியாது போனால் இரு குடும்பத்தையும் சார்ந்த பெரியவர்களை வைத்து சமாதானம் செய்விக்க முயற்சிக்க வேண்டும்.</div>
<br />
<div dir="ltr">
<strong><span style="background-color: #666699; color: white;">இல்லறம் சிறக்க.... </span></strong></div>
<div dir="ltr">
<span style="color: white;"><span style="color: black;">அல்லாஹ்வையும், அவனது திருத்தூதரையும் முன்னிருத்தி வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது கோபக்காரக் கணவனும் முரண்டு செய்யும் மனைவியும் தத்தமது நடவடிக்கைகளில் நிதானத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் வாழ்ந்த வாழ்வில் மிக்க அழகிய முன் மாதிரி ஏராளமாக அமைந்துள்ளன. அதை நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாகக் கொண்டு இல்லறத்தை நல்லறமாக்கிட முயல்வோம். அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்.</span></span></div>
<div dir="ltr">
<span style="color: black;"><i></i></span><a $included="null" href="http://nidur.info/undefined/"><span style="color: black;">www.nidur.info</span></a></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-60288166579486321662012-02-11T01:43:00.000-08:002012-02-11T01:43:33.842-08:00ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்பது என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="color: #e11d7b;"><strong><img src="http://www.nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2043%20%2041.jpg" style="float: left;" />ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்பது என்ன? </strong></span><br />
<div dir="ltr">
<span style="background-color: teal; color: white;"><strong> RASMIN M.I.Sc (India) </strong></span></div>
<i></i><br />
<div dir="ltr">
பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.]</div>
<div dir="ltr">
<strong><span style="background-color: teal; color: white;"> ஆலிமாக்கள் என்றால் யார்? </span></strong></div>
<br />
<div dir="ltr">
இரண்டு வருடம், மூன்று வருடம், நான்கு வருடம், சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்து வெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.</div>
<div dir="ltr">
இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில் கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.</div>
<div dir="ltr">
இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.</div>
<div dir="ltr">
1. தாய், தந்தை, அண்ணன், தம்பி என்று குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் வீட்டை விட்டு விடுதிகளில் தங்க வேண்டிய கட்டாயக் கஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.</div>
<div dir="ltr">
2. ஒரு கைக்குட்டையைக்(கர்ச்சிப்) கூட துவைக்கத் தெரியாத காலத்தில் தங்கள் ஆடைகள் அனைத்தையும் தாங்களே துவைக்க வேண்டிய நிலை.(ஆண்களும் இதே கஷ்டத்தை அனுபவித்தாலும் பெண்கள் படும் கஷ்டத்திற்கும் ஆண்கள் படும் கஷ்டத்திற்கும் பல வேறுபாடுகள் காணப்படுகிறது).</div>
<div dir="ltr">
3. பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தை அர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.</div>
<div dir="ltr">
4. வீட்டில் எத்தனையோ விஷேசங்கள் நடந்தாலும் இவர்கள் அத்தனையையும் தவிர்ந்து கொள்ளும் ஒரு நிலை.</div>
<div dir="ltr">
இப்படி பல தியாகங்களைச் செய்துதான் இந்த ஆலிமாச் சகோதரிகள் தங்கள் மார்க்கப் படிப்பை நிறைவு செய்கிறார்கள்.</div>
<div dir="ltr">
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்கும் இந்தச் சகோதரிகள் தங்கள் படிப்பு முடிந்தபின் என்ன நிலையில் இருக்கிறார்கள்?</div>
<div dir="ltr">
மார்கத்தில் அவர்களின் நிலை என்னவாகிறது?</div>
<div dir="ltr">
அவர்களின் எதிர்கால கணவு என்னாகின்றது?</div>
<div dir="ltr">
குடும்ப வாழ்க்கைக்கும் இஸ்லாமிய நெறிக்கும் தொடர்பு இருக்கிறதா?</div>
<div dir="ltr">
திருமணத்தின் பின் இந்தச் சகோதரிகளின் நிலை மாற்றம் என்ன? எப்படி அமைகிறது?</div>
<div dir="ltr">
ஆடை விஷயத்தில் இவர்களின் நடை முறை செயல்பாடு எப்படி அமைகிறது?</div>
<div dir="ltr">
மற்றவர்களுக்கு மார்க்கத்தை சொல்லும் நிலை இருக்கிறதா? இல்லையா?</div>
அதிகமான ஆலிமாக்களை தஃவாக் களத்தில் காணமுடியவில்லையே அது ஏன்?<br />
<br />
<div dir="ltr">
ஆலிமாக்களிடம் இஸ்லாமிய சமுதாயம் எதிர்பார்பது என்ன? உலக வரலாற்றை கொஞ்சம் பின் நோக்கிப் பார்த்தால் இந்த உலக மக்களின் முன்னேற்றத்திற்கு ஆண்களுக்கு சமனாக பெண்கள் செய்த சேவைகள் கண்முன் கொண்டு வந்து நிருத்தப்படும்.</div>
<br />
<div dir="ltr">
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடங்கி நாம் வாழும் இந்தக் காலம் வரை இந்த உலகத்தின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் தியாகம் மறைந்திருப்பதை நாம் தெளிவாக அறிய முடிகிறது.</div>
<div dir="ltr">
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் பெண்களின் நிலை என்ன?</div>
<div dir="ltr">
பெண் என்றால் போதைக்காக பயண்படுபவள் என்ற மாயையை உடைத்தெரிந்தது இஸ்லாம்.</div>
<div dir="ltr">
பெண்களுக்கும் ஆண்மா உண்டென்று உலகுக்குக் காட்டியது இஸ்லாம்.</div>
<div dir="ltr">
வீட்டினுல் முடங்கிக் கிடந்தவர்களை உத்தமர்களாக இந்த உலகுக்கு படம் பிடித்துக் காட்டியது இஸ்லாம்.</div>
<div dir="ltr">
பெண்கள் சமுதாயத்தில் இடம் பிடிக்கக் கூடாது என்று பல மார்கங்களும், மதங்களும், சித்தாந்தங்களும் கருத்துச் சொன்ன நேரத்தில்ஸஸ..</div>
<div dir="ltr">
பெண்கள் சமுதாயத்தின் கண்கள் என்று பெண்விடுதலைக்கு வித்திட்டது இஸ்லாம்.</div>
<div dir="ltr">
வீடு, கணவன், பிள்ளைகள் என்றிருந்தவர்களை கல்வித் துறையில் கல்லூரி வரை உயர்தியது இந்த இஸ்லாம்.</div>
<div dir="ltr">
ஆனால் இன்றைய இஸ்லாமிய பெண்களின் கல்வி நிலை, ஒழுக்கம், நன்நடத்தைகள் என்று அனைத்தும் கேள்விக்குறியாகியிருப்பதை நாம் காண முடிகிறது.</div>
<br />
<div dir="ltr">
<strong><span style="background-color: teal; color: white;"> நாங்களும் சாதித்துக் காட்டுவோம் : </span></strong></div>
<br />
<div dir="ltr">
ஆண்கள் கூட கல்வியைப் பற்றிக் கண்டு கொள்ளாத இக்காலத்தில் பெண்கள் தங்கள் கல்விக்காக செய்யும் தியாகங்கள் அதிகம்.</div>
<div dir="ltr">
இந்த தியாகங்களை செய்வதற்கு அவர்களுக்கு பின்னனியாக இருப்பது இரும்புக் கோட்டையின் பலத்திற்கு நிகரான ஒரு எண்ணம் தான்.</div>
<div dir="ltr">
அதாவது நாங்களும் சாதித்துக் காட்டுவோம் எங்களாலும் முடியும் எங்களை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை நாங்களும் கல்விக்கு வித்திட்டவர்கள் தான் இது தான் ஆலிமாவாக மாறுவதற்கு அவர்களின் உள்ளத்தில் இருக்கும் முதல் எண்ணம்.</div>
<div dir="ltr">
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெருவார்கள். (அல்குர்ஆன் 39:09)</div>
<div dir="ltr">
கல்வியை கற்பதில் எங்களுக்கும் தகுதியுண்டு ஜாஹில்யத்தை துடைத்தெரிந்த நபிக்கு இறக்கிக் கொடுக்கப்பட்ட வேதத்தில் கற்றவர்களுக்கு கல்வி கற்காதவர்களை விட மிகப் பெரியதொரு அந்தஸ்த்து இருக்கிறது.</div>
<div dir="ltr">
அந்த அந்தஸ்த்து எங்களுக்கும் கிடைக்க வேண்டும் நாங்கள் எதையும் கேட்டுத் தெரிந்து அறிந்து அதன்படி தான் நடப்போம்.</div>
<div dir="ltr">
கண்மூடிக் கொண்டு எதையும் ஏற்றுக் கொள்ள நாங்கள் அபலைகளும் அல்ல எங்கள் அண்னையர் எங்களுக்கு அப்படி வழிகாட்டவும் இல்லை.</div>
<div dir="ltr">
இதுதான் அவர்களின் திடமான கொள்கை.</div>
<div dir="ltr">
நபியிடத்திலேயே தட்டிக் கேட்டவர்கள் அல்லவா?</div>
<div dir="ltr">
இப்னு அபீமுலைக்கா (அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:</div>
<div dir="ltr">
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தமக்குப் புரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை (அதையொட்டி) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.</div>
<div dir="ltr">
(ஒருமுறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''எவர் (மறுமை நாளில் துருவித் துருவி) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்'' என்று கூறினார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ''அல்லாஹ் (குர்ஆனில்) 'வலக்கரத்தில் தமது வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்' (84:8) என்றல்லவா கூறுகின்றான்?'' என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்இ ''இது (கேள்விக் கணக்குத் தொடர்பானது அன்று: மாறாக மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார்'' என்று கூறினார்கள். (புகாரி 103)</div>
<div dir="ltr">
நபியவர்கள் ஒரு செய்தியைச் சொல்கிறார்கள் அதனை ஒட்டி ஒரு எதிர்க் கேள்வியைக் கேட்டு நபியவர்கள் சொன்ன செய்தியின் உண்மை விளக்கத்தை அவர்களின் வாயிலிருந்தே சொல்ல வைக்கிறார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்.</div>
<div dir="ltr">
(ஒருசமயம்) பெண்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''(நாங்கள் தங்களை அணுகி மார்க்க விளக்கங்கள் கேட்க முடியாதபடி) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே எங்களுக்காக (தனியாக) ஒரு நாளை ஒதுக்குங்கள்'' எனக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அப்பெண்களுக்கென ஒரு நாளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்களித்து அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்; (மார்க்கக் கட்டளைகளை) வலியுறுத்தினார்கள். ''உங்களில் ஒரு பெண் (தனது மரணத்திற்கு) முன்பாக தம் குழந்தை களில் மூவரை (இறப்பின் மூலம்) இழந்து (இறைவனிடம்) அனுப்பிவைத்துவிடுகிறாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திரி ருந்து காக்கும் திரை (தடை)யாக இருப்பார்கள்'' என்று கூறினார்கள். உடனே ஒரு பெண்மணி 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்...?' என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''(ஆம்) இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்'' என்றும் அவ்வுரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 101)</div>
<div dir="ltr">
நபியவர்களின் வார்த்தைகளில் கூட மேலதிக விளக்கம் வேண்டி கேள்வி கேட்ட அண்ணையர்களின் வாரிசுகள் எப்படி இருப்பார்கள்?</div>
<div dir="ltr">
கேள்வி கேட்டாயினும் நாம் மார்க்கத்தை தெளிவாக அறிய வேண்டும் என்ற எண்ணம் உயிரில் ஊரியிருக்காதா என்ன?</div>
<div dir="ltr">
பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவள் அல்ல சமுதாயத்தை சீர்திருத்தும் மிகப் பெரும் பொருப்புக்கு சொந்தக்காரி.</div>
<div dir="ltr">
(மார்க்கத்திற்கு முரனாக செயல்பட்டு பித்அத்களை ஆதரித்து ஒழுக்கம் கெட்டு படித்ததற்கு முற்று முழுதாக மாறு செய்யும் ஆலிமாக்கள் பற்றி தொடரில் தெளிவாக விளக்கப்படும். எதிர்பார்ப்புகள் தொடரும் இன்ஷா அல்லாஹ்........)</div>
<br />
<div dir="ltr">
[ இரண்டு வருடம், மூன்று வருடம், நான்கு வருடம், சில இடங்களில் ஐந்து வருடம் என்று மத்ரஸாக்களில் மார்கத்தை படித்து வெளிவரும் பெண் சகோதரிகளை ஆலிமாக்கள் என்று நமது வழக்கில் சொல்கிறோம்.</div>
<div dir="ltr">
இந்தச் சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை மத்ரஸாக்களில் கழிக்கின்ற காலகட்டத்தில் கடுமையாக கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள்.</div>
<div dir="ltr">
இவ்வளவு கஷ்டப் பட்டு பல வருடங்களை விடுதிகளில் (ஹாஸ்டல்களில்) கழிக்கும் இந்த சகோதரிகள் அவர்களின் இந்த காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.</div>
<div dir="ltr">
.பெண்களைப் பொருத்தவரை பெரும்பாலும் தங்கள் தூக்கத்தை அர்பணிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். இந்தச் சகோதரிகள் தங்கள் தூக்கத்தை கல்விக்காக தியாகம் செய்கிறார்கள்.</div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-15951163150910897492012-02-10T03:29:00.001-08:002012-02-10T04:02:28.612-08:00நிச்சயிக்கப்படும் திருமணங்கள். – இஸ்லாமியத் தீர்வு என்ன?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="Apple-style-span" style="color: blue;"><b>Rasmin M.I.Sc</b></span><br />
<div style="text-align: center;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-kdLvr8_cUllGMvAYEw0ZIDs4PA5sbxjVgw_mjsSusE6cfdHUcHbhyphenhyphenifh8q54QiIgLXUvLCq0E5uJdEG1BmLGF44cjKyBhN-o4AcGhN-ej-YYUNMYa4jxz7wNkbwp1wWVLxnqymEQOcGc/s1600/marriage.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" closure_uid_5c6u0k="5" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-kdLvr8_cUllGMvAYEw0ZIDs4PA5sbxjVgw_mjsSusE6cfdHUcHbhyphenhyphenifh8q54QiIgLXUvLCq0E5uJdEG1BmLGF44cjKyBhN-o4AcGhN-ej-YYUNMYa4jxz7wNkbwp1wWVLxnqymEQOcGc/s400/marriage.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<a href="http://www.rasminmisc.blogspot.com/"><b><span style="color: #2350ad;">இஸ்லாமிய மார்க்கம் என்பது இவ்வுலக மக்களுக்குறிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளிலும் நுழைந்து தெளிவான தீர்வை சொல்லும் மிகச் சிறப்பான வழிகாட்டியாகும். இம்மார்க்கத்தில் எந்தவொரு செயல்பாட்டுக்கும் வழிகாட்டுதல் இல்லாமல் இல்லை.</span></b></a></div>
</div>
<div style="text-align: justify;">
<span style="color: #2350ad;"><br /></span></div>
<div style="text-align: justify;">
இப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமது காலத்தில் பெரும்பாலும் எல்லா இடத்திலும் திருமணங்கள் பல நிச்சயிக்கப்பட்டு வருடக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. ஆனால் இது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு மிகத் தெளிவானதாகும். அதைப் பற்றியே கட்டுரை ஆராய்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span class="Apple-style-span" style="color: blue;">திருமணம் - தவிர்க்கக் கூடாத நடை முறை.</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் (24 : 32))</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள். (நூல் புகாரி (5066))</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் திருணம் செய்துகொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். தனக்கு திருமணம் செய்துகொள்ள சக்தியிருந்தும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்களிடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள். </b><b>(நூல் - புகாரி 5063)</b></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b>உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.(அல்குர்ஆன் (13 : 38))</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்கண்ட நபி மொழிகளும், திருமறை வசனங்களும் திருமணம் என்பது யாரும் தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத ஒரு செயல்பாடாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளதை தெளிவாக உணர்த்துகின்றன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிச்சயிக்கப்படும் திருமணங்களும், கொச்சைப்படுத்தப்படும் இஸ்லாமிய குடும்பவியலும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று நமக்கு மத்தியில் நடத்தப்படுகின்ற பல திருமணங்கள் வருடக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு நிச்சயம் செய்யப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது அல்லது மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கும் போது திருமணத்திற்கான தேதியை ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் சில இடங்களில் ஐந்து வருடம் வரை தள்ளி வைத்து விடுவார்கள் கேட்டால் நாங்கள் பேசி வைத்திருக்கிறோம் என்பார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span class="Apple-style-span" style="color: blue;">திருமணத்திற்கு பிறகு தான் கணவன், மணைவி பந்தம்.</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தன்னை மணந்து கொள்ளுமாறு வேண்டினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இப்போது எனக்கு (மணப்) பெண் தேவையில்லை' எனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்மிடம் (மஹ்ர் செலுத்த) என்ன உள்ளது?'' என்று கேட்டார்கள். அவர், "என்னிடம் எதுவுமில்லை'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "இரும்பாலான மோதிரத்தையேனும் இவளுக்கு (மஹ்ராகக்) கொடு!'' என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "சரி, குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் (மனனமாய்) உள்ளதா?'' என்று கேட்டார்கள். அவர், "இன்னது இன்னது (மனனமாய்) உள்ளது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு உரியவளாக்கி விட்டேன்'' என்று சொன்னார்கள். (புகாரி- 5141)</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே திருமணத்துக்குப் பிறகு தான் பெண் ஆணுக்கு உரியவளாகிறாள். மேலும் ஆணுடைய காதலுக்கும் அவனுடைய கொஞ்சலுக்கும் உரியவள் மனைவி தான் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30 : 21)</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே நாம் பெண் பேசியிருந்தாலும் அப்பெண்ணை மணந்து கொள்ளாதவரை அவள் நமக்கு அந்நியப் பெண் தான். ஒரு அந்நியப் பெண்ணிடம் நாம் எந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமோ அதே போன்று தான் நமக்கு பேசி முடிக்கப்பட்ட பெண்ணிடமும் நடந்து கொள்ள வேண்டும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span class="Apple-style-span" style="color: blue;">ஆண், பெண் தனிமை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதே!</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம்; (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போது தவிர; ஒரு பெண் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் (தமது) சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (முஸ்லிம் 2611)</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனிமை என்பது இருவரும் நேரடியாகச் சந்திப்பதை மட்டும் குறிக்காது. தொலைபேசியில் இருவர் மட்டும் உரையாடினாலும் அதுவும் தனிமை தான். ஏனெனில் நேரில் தனியாக இருக்கும் போது பேசும் எல்லாப் பேசுக்களையும் தொலை பேசி உரையாடலும் பேச வழிவகுக்கும். எனவே தன்னுடன் மற்றொருவரை வைத்துக் கொண்டே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் பேசக் கூடாது. திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவினரை அருகில் வைத்துக் கொள்ளச் சொல்வதற்குக் காரணம் எந்த வகையிலும் வரம்பு மீறிவிடக் கூடாது என்பதற்காகத் தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த வரம்பை மீறி சேர்ந்து ஊர் சுற்றுவது தனிமையில் இருப்பது, கணவன் மனைவிக்கிடையே மட்டும் பேசத்தக்கவைகளைப் பேசிக் கொள்வதற்கு எந்த விதமான அனுமதியும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனால் பாரதூரமான் விளைவுகள் ஏற்படுவதையும் இளைஞர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திரும்ணத்துக்கு முன்பே எல்லை மீறிவிட்டால் ஆண்களுக்கு இயல்பாகவே குடும்ப வாழ்வில் ஈடுபாடு குறைந்து விடும். இதனால் திருமணம் நின்று போய்விடும். அப்போது பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவர்கள் உடலால் நெருங்காமல் தனியாக இருந்து பின்னர் திருமணம் தடை பட்டாலும் அதுவும் பெண்களைப் பாதிக்கும். ஏனெனில் எல்லாம் நடந்திருக்கும் என்று தான் மற்றவர்கள் நினைப்பார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அல்லது மனதார விரும்பிய பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று தெரிய வரும் போது அல்லது சந்தேகம் ஏற்படும் போது அவன் அப்பெண்ணை மறுக்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தனிமையில் இருப்பதை இஸ்லாம் தடை செய்யக் காரணம், இருவரும் தனிமையில் இருக்கும் போது ஷைத்தானிய செயல்களில் ஈடுபட்டு விடக்கூடும் என்பதற்காகத் தான். திருமணம் பேசிவைக்கப்பட்ட ஒரு பெண்ணுடன் ஒருவர் தொலைபேசியில் தனிமையில் உரையாடும் போது அதற்கான வாசல்கள் இன்னும் அதிகமாகத் திறந்து விடப்படுகின்றன என்பதையும் நாம் கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டும்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தீய பேச்சுக்களை பேசுவது நாவு செய்யும் விபச்சாரம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். </b>(நூல் : புகாரி 6612)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிச்சயம் செய்யப்பட்ட எத்தனையோ திருமணங்கள் பல காரணங்களால் இடையில் முறிந்து விடுகின்றது. இந்நேரங்களில் ஆணையும் பெண்ணையும் பிரித்து வைப்பதற்கு தலாக் குலாஃ போன்ற மணவிலக்குச் சட்டங்களை நாம் இங்கே கடைபிடிப்பதில்லை. இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதேப் போல் ஒரு பெண்ணுக்கு பேசப்பட்ட ஆண் திருமணத்துக்கு முன்பு இறந்துவிட்டால் இப்போது அப்பெண் இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் தேவையில்லை என்று கூறுவோம். இவர்களுக்கிடையே கணவன் மனைவி உறவு ஏற்படவில்லை என்பதே இதற்குக் காரணம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே இந்த பிரச்சனைகளில் எல்லாம் இவ்விருவருக்கும் இடையே கணவன் மனைவி உறவு இருக்கின்றதா? என நாம் பார்ப்பது போல தனக்குப் பேசப்பட்ட பெண்ணிடம் நெருங்கி பழகுவதற்கும் அவளிடம் ஃபோனில் கொஞ்சி குலாவுவதற்கும் இந்த உறவு உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நிச்சயிக்கப்பட்டவனுடன் எல்லை மீறி பழகி இருந்த நிலையில் திருமணம் தடைப்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும். திருமணத்துக்கு முன்பே இவள் எப்படி நடந்து கொண்டால் என்ற விமர்சனம் எழும். இதனால் அவளுக்கு வேறு திருமணம் நடைபெறுவது பாதிக்கப்படும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆண் தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசுவதை இன்றைய சமுதாயம் தவறாக நினைப்பதில்லை. இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்வதில்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் ஒரு அந்நியப் பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இஸ்லாம் வழிகாட்டி இருக்கின்றதோ அதே ஒழுங்கு முறைகளை தனக்கு பேசிமுடிக்கப்பட்ட பெண்ணிடமும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இது நடை முறைப்படுத்தப்படுவதில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண் பேசுதல் என்றால் அதன் பொருள் திருமணத்துக்கு பெண்ணிடம் அனுமதி வேண்டுதல் என்பது தான் அர்த்தம். பெண் அனுமதி கொடுத்து விட்டால் பெண் பேசச் சென்ற அதே இடத்தில் கூட சாட்சிகளுடன் பெண்ணுடைய பொறுப்பாளர் முன்னிலையில் திருமணத்தை முடித்து விடலாம். இதைத் தான் நாம் முன்பு சுட்டிக் காட்டிய ஹதீஸ் கூறுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண் பேசி வைக்கிறோம் என்ற பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் குறைய வேண்டுமானால் நபியவர்களின் வழிகாட்டுதலைப் போல் பெண் பேசினால் திருமணத்தை செய்து விடுவதுதான் சிறந்த நடை முறையாகும். காலம் தாழ்த்தும் போது நாம் ஏற்கனவே சொன்னதைப் போன்ற அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்படுவது மட்டுமன்றி பெண் பிள்ளையும் அவள் தரப்பும் கடுமையான முறையில் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதைச் சமுதாயம் புரிந்து கொண்டால் பெண் பேசிவிட்டு ஆணையும் பெண்ணையும் நீண்ட காலம் பிரித்து வைக்கும் நிலை ஏற்படாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span class="Apple-style-span" style="color: blue;">இறுதியாக…………………</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே! இஸ்லாம் காட்டிய வழியில் நமது திருமணங்களை உடனுக்குடன் நாம் அமைத்துக் கொண்டால் நமது வாழ்வில் ஏற்படும் பல சிக்கள்களுக்கும் தீர்வாக அது அமைந்து விடும் என்பதை மனதில் நிறுத்தி இஸ்லாமியக் குடும்பவியலைச் சரியான முறையில் புரிந்து வாழ்ந்து இம்மை மறுமையில் வெற்றி பெருவோமாக! <a href="http://rasminmisc.blogspot.in/">http://rasminmisc.blogspot.in/</a></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-77468625928742607452012-02-10T03:21:00.000-08:002012-02-10T03:22:30.049-08:00நபியுடன் வாதிட்டு இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="long-title" dir="ltr" id="eow-title" title="நபியுடன் வாதிட்டு இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்"></span><br />
<div style="font-family: arial; text-align: justify;">
<a href="http://www.rasminmisc.blogspot.in/" target="_blank"><span style="color: blue;">இஸ்லாத்தில் பல கேள்விகளைத் தொடுத்து இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்பதை ஆன்மீகம் மற்றும் அறிவியல் ரீதியாக ஒத்துக் கொண்டு இஸ்லாத்தைத் தழுவிய பாதிரியார் அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கேட்ட கேள்விகளும் நபியவர்கள் அதற்கு வழங்கிய பதில்களும் அடங்கிய உரை. </span></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/wKxElTsKNPo?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-59633273601041959692012-02-10T03:16:00.001-08:002012-02-10T04:03:17.951-08:00குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: center;">
<b><span style="color: blue; font-family: "Times New Roman", serif;">RASMIN M.I.Sc</span></b><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpapwV7SK9Ws6wzq0ko48u_w6AvwRRTtv8QWBrbkWS1ckCTBfqYKblJwgzMzW_pWzwC5g_0qhASllwhxnK24KQEnp6hZS6OZADQVnsjo2sgOD5Y2QiDFxaBCrzSd1hiJ41l97AL7fennnG/s1600/untitled.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" closure_uid_xn6yk1="2" height="267" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpapwV7SK9Ws6wzq0ko48u_w6AvwRRTtv8QWBrbkWS1ckCTBfqYKblJwgzMzW_pWzwC5g_0qhASllwhxnK24KQEnp6hZS6OZADQVnsjo2sgOD5Y2QiDFxaBCrzSd1hiJ41l97AL7fennnG/s400/untitled.JPG" width="400" /></a></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span style="font-family: "Times New Roman", serif;"><a href="http://www.rasminmisc.blogspot.com/" target="_blank"><span lang="TA" style="color: blue; font-family: Latha;">உலகில் மக்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறி சிறப்பானவேதங்கள் என்று பலரும் பல வேதங்களை தங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு வழிபாடுசெய்கிறார்கள். ஆனால் அந்த வேதங்களில் தவறுகளும்</span><span style="color: blue;">, </span><span lang="TA" style="color: blue; font-family: Latha;">அசிங்கங்களும்</span><span style="color: blue;">, </span><span lang="TA" style="color: blue; font-family: Latha;">ஆபாசங்களும்நிறைந்து காணப்படுவதை பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும்.</span></a></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">இன்றைய உலகில் பல தரப்பினராலும் பல வகையான விமர்சனங்களுக்கும் உற்படுத்தப்படும் ஒரு வேதமாக திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியையும்</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">வேகத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத பலர் இஸ்லாத்திற்கெதிராக தங்கள் விஷமக் கருத்துக்களை பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">ஆனாலும் இந்த அனைத்து விமர்சனங்களையும் தாண்டி இஸ்லாம் தான் தூய்மையான மார்க்கம் என்று உலகமே ஒத்துக் கொள்ளும் அளவிற்கு தன்னைத் தானே உண்மைப் படுத்தும் வேதமாக புனித மிக்க திருமறைக் குர்ஆன் காணப்படுகின்றது.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">முஸ்லீம்களும்</span></b><b><span style="color: blue; font-family: "Times New Roman", serif;">, </span></b><b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">திருமறைக் குர்ஆனும் ஓர் சமூகவியல் ஒப்பீடு.</span></b><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">இன்றைய நாட்களில் திருமறைக் குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கும் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை சிந்திக்கும் போது அவர்களின் நிலை மிகவும் கவலைக்குறியதாகவே காணப்படுகின்றது.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">ஏன் என்றால் இறைவனிடமிருந்து வந்த வஹியை தம் கரங்களில் வைத்துக் கொண்டிருக்கும் நமது சமுதாய சொந்தங்கள் அதைப் பற்றிய உண்மையான கண்ணியத்தைப் புரிந்து அதற்குறிய உரிமையைக் கொடுப்பதாகத் தெரியவில்லை.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"># வயதில் மூத்த பலருக்கு இன்றும் குர்ஆன் ஓதத் தெரியாத அவல நிலை காணப்படுகின்றது.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"># வருடத்தில் ஒரு தடவை கூட குர்ஆனைத் திறக்காத பலர் நம் சமுதாயத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"># ரமழான் மாதத்தில் மாத்திரம் குர்ஆனை முற்படுத்தி விட்டு மற்ற 11 மாதங்களும் அதை மறந்து வாழ்வோர் நம்மில் பலர்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"># மரணித்தவர்களுக்கு மாத்திரம் குர்ஆனை ஓதி (பித்அத்தை செய்து பாவத்தை சுமந்து) விட்டு காலம் கழிப்பவர்கள் பலர்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"># குர்ஆன் சாதாரண மக்களுக்கு புரியாது 64 கலைகள் படித்த அறிஞர்களுக்குத் தான் புரியும் என்று கூறி இன்றும் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் இருக்கிறார்கள்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"># குர்ஆனை உழு செய்து விட்டுத்தான் தொட வேண்டும்</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">உழூ இல்லாதவர்கள் தொடக் கூடாது என்று கூறி ஓத நினைப்பவர்களுக்கும் தடை போடுபவர்கள் நிறையவே உள்ளனர்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">ஆனால் திருமறைக் குர்ஆனும் நபியர்களின் வாழ்வும் திருமறைக் குர்ஆனின் முக்கியத்துவம் தொடர்பாக பல ஆழமான கருத்துக்களை முன்வைத்திருப்பதை ஏனோ இந்த இஸ்லாமிய சமுதாயம் புரிந்து கொள்வதில்லை</span><span style="font-family: "Times New Roman", serif;">?</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">திருமறைக் குர்ஆன் தொடர்பாகவும்</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">அதனை ஓதுவது தொடர்பாகவும் இஸ்லாம் முன்வைக்கம் கருத்துக்களைப் பாருங்கள்.</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">ஒட்டகங்களுக்கு ஈடாகும் வசனங்கள்.</span></b><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தின் பெருமானத்தைப் பற்றியும் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் மிகவும் அருமையாக தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">நாங்கள் பள்ளியின் திண்ணையில் இருக்கும் போது</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். "உங்களில் ஒருவர் பாவத்திலும் உறவைத் துண்டிப்பதிலும் ஈடுபடா வண்ணம்</span><span lang="CS" style="color: red; font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">புத்ஹான் அல்லது அகீக் என்ற இடத்திற்குச் சென்று கொழுத்த திமில் உடைய இரு பெண் ஒட்டகங்களைக் கொண்டு வர விரும்புவாரா</span><span lang="CS" style="color: red; font-family: "Times New Roman", serif;">?'' </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">என்று கேட்டார்கள்.</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="font-family: Latha;">அதற்கு நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் விரும்புகின்றோம்</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">'' </span><span lang="TA" style="font-family: Latha;">என்று பதிலளித்தோம்.</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">"உங்களில் ஒருவர் அதிகாலையில் பள்ளிக்குச் சென்று மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை விளங்கவோ அல்லது ஓதவோ கூடாதா</span><span lang="CS" style="color: red; font-family: "Times New Roman", serif;">? </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">அவ்வாறு சென்று இரு வசனங்களை ஓதுவது இரு பெண் ஒட்டகங்களை விடவும் சிறந்தது. மூன்று வசனங்கள் மூன்று பெண் ஒட்டகங்களை விடச் சிறந்தது. நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்தது. இந்த அளவுக்கு வசனங்கள் இதே அளவுக்கு ஆண் ஒட்டகங்களை விடச் சிறந்தது</span><span lang="CS" style="color: red; font-family: "Times New Roman", serif;">'' </span><span lang="TA" style="font-family: Latha;">என்று சொன்னார்கள்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">நூல் : முஸ்லிம்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">ஒவ்வொரு வசனத்தை ஓதுவதற்கும் ஒவ்வொரு ஒட்டகங்கள் கிடைப்பது சமனானது என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">இவ்வளவு நிறைவான பலன்கள் கிடைக்கும் திருமறைக் குர்ஆனை ஓதுவதற்கு நம்மில் எத்தனை பேர் ஆர்வம் காட்டுகின்றோம். அதன் வசனங்களை படித்து விளங்க வேண்டும்</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">அதன் மூலம் இம்மை மறுமை பயன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது</span><span style="font-family: "Times New Roman", serif;">?</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">வேதப் புத்தகமாக</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">வாழ்கை வழிகாட்டியாக இறக்கப்பட்ட திருமறைக் குர்ஆன்</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">பக்திப் பரவசத்தோடு பார்க்கப்படுகிறதே தவிர படிக்கப்படவில்லை. தூசு தட்டி கண்ணாடிப் பெட்டிகளில் வைத்துப் பாதுகாப்பவர்கள்</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">தூய்மையான வேதத்தை படித்துணர ஆசைப்படுவதில்லையே</span><span style="font-family: "Times New Roman", serif;">?</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span style="font-family: "Times New Roman", serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">எந்த வேதத்திற்கும் இல்லாத </span></b><b><span style="color: blue; font-family: "Times New Roman", serif;">“</span></b><b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">எழுத்துக்குப் பத்து நன்மை</span></b><b><span lang="TA" style="color: blue; font-family: "Times New Roman", serif;">”</span></b><b><span style="color: blue; font-family: "Times New Roman", serif;"> </span></b><b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">என்ற பெருமை.</span></b><b><span style="font-family: "Times New Roman", serif;"></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha;">திருமறைக் குர்ஆனை ஓதுபவருக்கு வசனத்திற்கு ஒரு ஒட்டகம் கிடைப்பதைப் போல் ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகளையும் இறைவன் அள்ளித் தர தயாராக இருப்பதாக நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;"><br /></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">"</span></b><b><span lang="TA" style="font-family: Latha;">அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப்</span></b><b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">லாம்</span></b><b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">மீம் - என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக</span></b><b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">அலிஃப் ஓரெழுத்து</span></b><b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">லாம் ஓரெழுத்து</span></b><b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்</span></b><b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">'' </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">நூல் : திர்மிதி.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">ஒரு எழுத்தை ஓதினால் கூட பத்து நன்மைகளை இறைவன் அதன் மூலம் நமக்கு வழங்குவதாக நபியவர்கள் கூறுகின்றார்கள். உதாரணமாக ஓரிடத்தில் இருக்கும் போது திருமறைக் குர்ஆனின் பத்து வசனங்களை நாம் ஓதினால் அந்த வசனங்களில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திற்கும் பத்து நன்மைகள் என்ற அடிப்படையில் பல்லாயிரக் கணக்கான நன்மைகளை அள்ளித் தருவதற்கு இறைவன் தயாராக இருக்கிறான்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">இந்த நன்மைகளையெல்லாம் பெற்றுக் கொள்வதற்கு நாம் எத்தனை தடவைகள் முயற்சி செய்திருப்போம்</span><span style="font-family: "Times New Roman", serif;">?</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">வானவர்களுடன் இருக்கும் மனிதராக.............</span></b><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">இறைவனின் தூதர்களான வானவர்கள் (மலக்குகள்) நம்முடன் இருக்கும் பாக்கியம் கிடைப்பது என்பது உண்மை முஃமினுக்கு எவ்வளவு சந்தோஷமான செய்தியாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாலே உள்ளம் குளிர்ந்து விடும்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">நபியவர்களின் நற்செய்தியைப் பாருங்கள்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: Latha;">குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></b><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">நூல்கள் : முஸ்லிம்</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">திர்மிதி</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">நீங்கள் எழுமிச்சையானவரா</span></b><b><span style="color: blue; font-family: "Times New Roman", serif;">? </span></b><b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">பேரிச்சையானவரா</span></b><b><span style="color: blue; font-family: "Times New Roman", serif;">? </span></b><b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">அல்லது குமட்டிக் காயானவரா</span></b><b><span style="color: blue; font-family: "Times New Roman", serif;">?</span></b><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும்</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">நல்லவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதாமல் இருப்பவருக்கும்</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">தீயவராக இருந்து கொண்டு குர்ஆனை ஓதுபவருக்கும்</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">தீயவராகவும் இருந்து கொண்டு குர்ஆனையும் ஓதாமலும் இருப்பவருக்கும் உவமானம் என்னவென்பதை பிரித்துப் பிரித்து உதாரணம் கூறி நபியவர்கள் தெளிவுபடுத்தும் காட்சியைப் பாருங்கள்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும்.</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="font-family: Latha;">அதன் சுவையும் நன்று! வாசனையும்நன்று!</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">(நல்லவராக</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">இருந்து)</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">குர்ஆன்</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">ஓதாமல்</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">இருப்பவர்</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">பேரீச்சம் பழத்தைப்</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">போன்றவராவார்</span><span lang="TA" style="font-family: Latha;">. அதன் சுவை நன்று அதற்கு வாசனை கிடையாது.</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதிவருகின்றவனின் நிலை துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது</span><span lang="TA" style="font-family: Latha;">. அதன் வாசனைநன்று</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">சுவையோ கசப்பு!</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">தீமையும்</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">செய்து</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">கொண்டு</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">குர்ஆனையும்</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">ஓதாமல்</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">இருப்பவனின்</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">நிலை</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">குமட்டிக்</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">காயின்</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">நிலையை</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="color: red; font-family: Latha;">ஒத்திருக்கின்றது</span><span lang="TA" style="font-family: Latha;">. அதன் சுவையும் கசப்பு</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">அதற்கு வாசனையும் கிடையாது.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">அறிவிப்பவர் : அபூமூஸல் அஷ்அரீ (ரலி)</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">நூல் : புகாரி (</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">5020)</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">பொறாமைப் பட்டு நன்மை செய்யுங்கள்.</span></b><b><span style="font-family: "Times New Roman", serif;"></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">இஸ்லாம் பொறாமை என்ற கெட்ட குணத்தை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இரண்டு விஷயங்களில் தாராளமாக பொறாமைப் படலாம்</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">பொறாமைப்பட வேண்டும்</span><span style="font-family: "Times New Roman", serif;"> </span><span lang="TA" style="font-family: Latha;">என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அதில் ஒன்றாக திருமறைக் குர்ஆன் ஓதப்பட வேண்டும் என்பதையும் நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.</span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: Latha;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</span></b><b><span style="font-family: "Times New Roman", serif;"> </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.</span></b><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">1. </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.</span></b><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">2. </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு</span></b><b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.</span></b><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">நூல் : புகாரி (</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">5025)</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">திருமறைக் குர்ஆனுடன் ஒட்டி வாழ்பவர்களைப் பார்த்து நாமும் பொறாமைப் பட்டு அவர்களைப் போல் திருமறைக் குர்ஆனை நமது வாழ்வில் இணைத்து குர்ஆனிய வாழ்க்கை வாழ முற்பட வேண்டும்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="TA" style="color: blue; font-family: Latha;">அமைதி இறங்கும். அருள் வானவர்களும் சூழ்ந்து கொள்வார்கள்.</span></b><b><span style="font-family: "Times New Roman", serif;"></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">அல்லாஹ்வின் ஆலையமான பள்ளியில் திருமறைக் குர்ஆனுடன் தொடர்பு வைப்பவர்கள் தொடர்பாக விரிவாகப் பேசும் ஒரு செய்தியைப் பாருங்கள்.</span><b><span style="font-family: "Times New Roman", serif;"></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;"><br /></span></b></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">"</span></b><b><span lang="TA" style="font-family: Latha;">அல்லாஹ்வுடைய வீடுகளில் ஒரு வீட்டில் மக்கள் கூடி அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி தங்களுக்கு மத்தியில் அதை ஓதிக் காட்டி</span></b><b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">பாடம் படிக்கும் போது அமைதி அவர்கள் மீது இறங்காமல் இருக்காது. அவர்களை அருள் அரவணைத்துக் கொள்கின்றது. மலக்குகள் அவர்களைச் சூழ்ந்து விடுகின்றனர். குர்ஆன் ஓதும் அவர்களை அல்லாஹ் தன்னிடம் உள்ள மலக்குகளிடம் நினைவு கூர்கின்றான்</span></b><b><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">'' </span></b><b><span lang="TA" style="font-family: Latha;">என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span><span lang="CS" style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">நூல் : முஸ்லிம்.</span><span style="font-family: "Times New Roman", serif;"></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0pt; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">திருமறைக் குர்ஆனை கற்றுக் கொள்வது</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">கற்றுக் கொடுப்பது</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">அதனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற விஷயங்கள் அனைத்தும் இம்மை</span><span style="font-family: "Times New Roman", serif;">, </span><span lang="TA" style="font-family: Latha;">மற்றும் மறுமையில் அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும் செயல்பாடுகளாகும். இதனடிப்படையில் இறைவனின் இறுதி வேதமான புனித திருக் குர்ஆனை நமது வாழ்வில் எடுத்து நடந்து குர்ஆனிய சமுதாயமாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.. <a href="http://rasminmisc.blogspot.in/">http://rasminmisc.blogspot.in/</a></span></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-75578490563990025112012-02-10T02:37:00.000-08:002012-02-10T02:37:40.150-08:00நோயாளியைக் காணச் செல்பவன் சுவனப்பூங்காவில் இருப்பவன் போலாவான்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: #666699;"><strong><span style="color: white;"> </span></strong></span> <br />
<br />
<img src="http://www.nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2043%20%2050.jpg" style="float: left;" />ஒருவன் நோயாளியைக் கானச்சென்று நலம் விசாரித்து வரும்வரை அவன் சுவனப் பூங்காவில் இருப்பவன் போலாவான் என்றும், <br />
<div dir="ltr">
அவனுக்கு எழுபதாயிரம் வானவர்களைக் கொண்டு இறைவன் நிழல் வழங்குவான் என்றும்,</div>
<br />
<div dir="ltr">
அவன் எழுநூறு நாட்கள் நோன்பு நோற்ற பலனைப் பெறுவான் என்றும்,</div>
<div dir="ltr">
அவன் காலையில் நோயாளியின் நலன் விசாரிக்கச் சென்றால் மாலைவரை அவனுக்காக வானவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவர் என்றும்,</div>
<br />
<div dir="ltr">
மாலையில் சென்றால் அடுத்த நாள் காலைவரை அவ்விதம் செய்வர் என்றும்,</div>
<div dir="ltr">
அவன் நோயாளியின் நலம் விசாரிக்கத் தன் இல்லம் விட்டுப் புறப்பட்டுவிட்டால் அவனையும் நோயாளியையும் அல்லாஹ்வின் அருள் சூழ சூழ்ந்துகொள்ளும் என்றும்,</div>
<br />
<div dir="ltr">
நோயாளி அர்ஷின் நிழலில் இருக்குங்கால் நலன் விசாரிக்கப் போனவர் ஹளீரத்துல் குதுஸெனும் இடத்திலிருப்பான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.</div>
<div dir="ltr">
நோயாளியை நலம் விசாரிக்க செல்பவரை நோக்கி உன் நிலைமை நல்லதாகட்டும், நீ நடந்த தொலை தூரங்கள் நன்மையாகட்டும், அதனால் நீ சுவனபதியில் நுழைவாயாக என்று வானவர்கள் வாழ்த்துகிறார்கள் என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (நூல்: முஸ்லிம்)</div>
<br />
<div dir="ltr">
சுற்றத்தாரும் அண்டைவீட்டாரும் அவர்கள் விரோதிகளாகவே இருந்தாலும் அவர்களிடம் சென்று நலன் விசாரிப்பது சுன்னத்தாகும் (நபிவழியாகும்). தன்னை வெறுத்து தன்மீது குப்பை கொட்டிய கிழவி நோயால் பீடிக்கப்பட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த கிழவியை நலம் விசாரிக்கச் சென்ற வரலாறு நம் மனதில் என்றென்றும் இருக்கட்டும்.</div>
<br />
<div dir="ltr">
நோயாளியை சந்திக்கும்போது ஸலாம் சொல்லி ஆறுதல் கூறுவது விரும்பத்தக்கச் செயலாகும். நோயாளியை நலம் விசாரிக்கும்போது நோயாளியை நோக்கி "நீங்கள் நலம் குன்றியிருக்கிறீர்கள். நீங்கள் இறைவனிடம் கேட்கும் ஒவ்வொரு ''துஆ''வும் இறைவனால் அங்கீகரீகப்படக்கூடும், எனவே எனக்காகவும் நீங்கள் இறைவனிடம் வேண்டுங்கள்" என்று கூறுதல் வேண்டும். இப்படிக் கூறுவதால் அவர் மனச் சாந்தி பெறுகிறார்.</div>
<br />
<div dir="ltr">
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: "நோயாளிகளை நீங்கள் நலம் விசாரிக்கச் சென்றால் உங்களுக்காகவும் து ஆ செய்யும்படியும் நோயாளிகளிடம் வேண்டுங்கள். நோயாளி கேட்கும் ''துஆ'' நிச்சயமாக கபூலாகும். ஏனெனில் அவர் பாவம் மன்னிக்கப்பட்டவராய் இருக்கிறார். (நூல்: தப்ரானி)</div>
<br />
<div dir="ltr">
நோயாளி தனக்கேற்பட்ட நோய் நீங்க மருந்துண்பது சுன்னத்து. நோயாளி தனக்கு உயிர் பிரியப்போக இருப்பதாக எண்ணி மருந்தேதும் உண்ணாமல் இருப்பது விரும்பத்தக்கதல்ல. நோயின் துன்பத்தைப் போக்கி போதிய சுகம் காண மருந்துண்ண வேண்டும்.</div>
<br />
<div dir="ltr">
ஏனெனில்,</div>
<div dir="ltr">
"இறைவன் நோயையும், மருந்தையும் நிச்சயமாக இறக்கி ஒவ்வொரு நோய்க்கும் ஒரு மருந்தை உண்டுபண்ணியுள்ளான். எனவே, நீங்கள் மருத்துவம் செய்யுங்கள். ஆனால், ஹராமானவற்றைக் கொண்டு மருத்துவம் செய்யாதீர்கள்." என்று</div>
<div dir="ltr">
அண்னல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பாளர்: அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், நூல்ள் அபூதாவூது)</div>
<div dir="ltr">
நோய் பீடிக்கப்பட்டவர்கள் கையாள வேண்டிய விதிமுறைகள்:</div>
<div dir="ltr">
o வியாதியின் கடுமையைப் பொருத்துக் கொள்ளுதல்.</div>
<div dir="ltr">
o அதைப் பற்றிப் பிறரிடம் பிதற்றுவது, மூறையிடுவது சரியல்ல.</div>
<br />
<div dir="ltr">
o இறைவா! என்ன சோதனை இது! என மனம் வருந்தாதிருத்தல்.</div>
<br />
<div dir="ltr">
o முணக்கத்தை விடுதல்.</div>
<div dir="ltr">
o அல்லாஹ்வை ஏற்றிப்போற்றி அதிகமாக அவனை தஸ்பீ ஹ் செய்தல்.</div>
<div dir="ltr">
நோயாளி தனக்கேற்பட்டுள்ள வியாதியின் தன்மை பற்றி நெருங்கிய உறவினர், மருத்துவர்கள், உயிர்த் தோழர்கள் போன்றொரிடம் கூறி தகுந்த பரிகாரம் தேடலாம்.</div>
<br />
<div dir="ltr">
''நோயைக் கொடுப்பவனும் அல்லாஹ், சுகத்தைக் கொடுப்பவனும் அல்லாஹ்வே" என்பதை மறந்திட வேண்டாம்.</div>
<br />
<a $included="null" href="http://www.nidur.info/www.nidur.info"><i><span style="text-decoration: underline;">www.nidur.info</span></i></a></div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-88509099596832146632012-02-10T02:32:00.001-08:002012-02-10T02:32:46.931-08:00உம்மி நபியை மாமேதையாக்கியது எது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div dir="ltr">
''அல்லாஹ்வையும் அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர் வழி பெறுவீர்கள்.'' (அல்குர்ஆன் 7:158)</div>
<div dir="ltr">
இந்த அல்குர்ஆன் வசனத்தில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் அதாவது உம்மி நபி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜாஹிலியாக் காலத்திலேயே பிறந்தார்கள்.</div>
<br />
<div dir="ltr">
ஜாஹிலியாக் காலம் என்பது அறியாமைக் காலம். மக்கள் படிப்பறிவில்லாமல் நாகரீகமற்று மூட நம்பிக்கையால் மூழ்கியிருந்த காலம். பெண் பிள்ளைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்த காலம். இப்படிப் பட்ட கொடூர குணம் கொண்ட மக்கா நகர அரபிகள் மத்தியில் தான் நபியவாகளின் இளமைக் காலம் இருந்த்து.</div>
<div dir="ltr">
<span style="color: blue;">இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:</span></div>
<br />
<div dir="ltr">
அரபுகளின் அறியாமையை அறிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமென்றால் 'அல் அன்ஆம்' (என்னும் 6-வது) அத்தியாயத்தில் நூற்றி முப்பதாவது வசனத்திற்கு மேல் ஓதுங்கள். அந்த வசனம் இதுதான்: அறியாமையினாலும் மூடத்தனத்தினாலும் தம் குழந்தைகளை கொன்றுவிட்டு அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி தங்களுக்கு வழங்கியிருந்தவற்றைத் தாங்களாகவே தடை செய்தவர்கள் நிச்சயமாகப் பேரிழப்புக்கு ஆளாகியும்விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வழிதவறிப் போய்விட்டார்கள். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாய் இல்லை. (திருக்குர்ஆன் 06:140) (புஹாரி 3524)</div>
<div dir="ltr">
இவர்களிடத்தில் அல்லாஹ்விற்கு இணை வைக்கும் சிலை வணக்கம் உட்பட விபச்சாரம், மது அருந்துதல், கொலை, கொள்ளை, சூதாட்டம், வட்டி இன்னும் பல பாவச் செயல்கள் குடிகொண்டிருந்தன. மனிதர்கள் மாக்களாக உலா வந்து கொண்டிருந்த காலம். அரேபியா முழுவதும் அறியாமை எனும் இருள் சூழ்ந்த காலம்.</div>
<div dir="ltr">
இக்காலகட்டத்திலேயே முஹம்மதென்னும் ஒளி அரபு தேசத்தில் உண்டாயிற்று பிறக்கும் முன் தன் தந்தையையும்இ பிறந்து ஆறு வருடத்தில் தன் தாயையும் இழந்த நிலையில் வளர்த்தெடுக்கப்பட்டார்கள்.</div>
<div dir="ltr">
இயற்கையிலேயே ஒரு மனிதனது சூழல் அவனது வாழ்க்கையின் அனைத்து ஏற்றத் தாழ்வுகளுக்கு முன்னோடியாக இருக்கின்றது. சமூகவியலாளர்களின் ஆய்வுகளின் படிஇ ஒரு மனிதனது வாழ்க்கை அவனது பெற்றோர்இ குடும்பம்இ சுற்றுப்புறச்சூழல்இ வருமானம் ஆகிய நிலைகளைக் கொண்டு வெவ்வேறு வடிவங்களில் அவனது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளனர்.</div>
<div dir="ltr">
இந்த வகையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறு பிராயத்தை எடுத்துக் கொண்டால் பெற்றோரின் அரவணைப்பு அவர்களுக்கு மிகக் குறைவாகவே கிடைத்திருக்கும். தந்தையின் அரவணைப்பு அறவே கிடைக்கவில்லை.</div>
<div dir="ltr">
''உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?'' (அல்குர்ஆன் 93:6)</div>
<div dir="ltr">
அவர்களது சுற்றுப்புறச்சூழல் கூட பெரிதாக மதிக்கத்தக்க அளவில் இருந்ததில்லை. குடும்ப சூழ்நிலையும் பெரும்பாலாக அல்லாஹ்விற்கு இணை வைக்கும் நபர்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. இவ்வனைத்து மோசமான நிகழ்வுகளுக்கு மத்தியில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறு பிராயத்திலிருந்து நல்ல பண்புகளோடுஇ சிறந்த ஒழுக்க விழுமியங்களோடு நம்பிக்கையும்இ நாணயமும் உடையவராக காணப்பட்டனர்.</div>
<div dir="ltr">
"நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்." (அல்குர்ஆன் 68:4)</div>
<div dir="ltr">
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையில் அவர்களது சுற்றுப்புறச் சூழல் அவர்களது நடத்தையில் எந்தவித கெட்ட பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தவில்லை. இதற்கான காரணத்தை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகின்றான்.</div>
<div dir="ltr">
''(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.'' (அல்குர்ஆன் 3:159)</div>
<br />
<div dir="ltr">
<span style="color: blue;">அல்லாஹ்வின் பேரருள் அவர்களுக்கு இருந்தமையினால் அவர்கள் ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டார்கள்.</span></div>
<br />
<div dir="ltr">
''(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருளும் அன்பும் உம் மீது இல்லாதிருந் தால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மை வழி கெடுக்க முயன்றிருப்பார்கள். அவர்கள் தம்மையே வழி கெடுத்துக் கொள்கின்றனர். அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உமக்கு வேதத்தையும் ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது''. (அல்குர்ஆன் 4:113)</div>
<div dir="ltr">
''இவ்வாறே நமது கட்டளையில் உயிரோட்டமானதை உமக்கு அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? நம்பிக்கை என்பது என்ன என்பதை (முஹம்மதே!) நீர் அறிந்த வராக இருக்கவில்லை. மாறாக நமது அடியார்களில் நாம் நாடியோருக்கு நேர் வழி காட்டும் ஒளியாக இதை ஆக்கினோம். நீர் நேரான பாதைக்கு அழைக்கிறீர்.'' (அல்குர்ஆன் 42:52)</div>
<div dir="ltr">
''உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழி காட்டினான்.'' (அல்குர்ஆன் 93:7)</div>
<div dir="ltr">
மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ்வே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிற்கு அனைத்து கல்வி ஞானங்களையும் கற்று தந்ததாகவும்இ வழிகெட்ட அந்த ஜாஹிலிய மக்களின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பதாகவும்இ நேர்வழி காட்டியதாகவும் குறிப்பிடுகின்றான்.</div>
<div dir="ltr">
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வின் வஹீ ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களினூடாக அறிவிக்கப்படுவதன் மூலம் அல்லாஹ் ஒரு மனிதனது சீரான வாழ்க்கைக்கான அனைத்து வழிமுறைகளையும்இ சட்டதிட்டங்களையும் அறிவித்தான்.</div>
<div dir="ltr">
வஹீயின் மூலமோ திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன் ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51)</div>
<div dir="ltr">
எழுதப் படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அருளால்இ வழிகாட்டுதலால் அவன் வழங்கிய கல்வி ஞானத்தால் ஒரு பேரரசையே நிர்வகிககும் அளவிற்கு ஆளானார்கள்.</div>
<div dir="ltr">
ஜாஹிலிய மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர அயராது முயற்சி செய்தார்கள். அல்லாஹ்வே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் முன்மாதிரி உள்ளதாகக் கூறுகின்றான்.</div>
<div dir="ltr">
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)</div>
<div dir="ltr">
எழுதப் படிக்கத் தெரியாத ஒரு மனிதர் பிற்காலத்தில் உலகையே ஆளும் ஒரு மிகப் பெரும் ஆட்சியாளராக மாறியதற்கும் இன்று வரை உலகில் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் அவரைப் பின்பற்றுவதற்கும் உரிய காரணம் என்ன தொடராக ஆராய்வோம்.</div>
<div dir="ltr">
<br /></div>
<br />
<img src="http://www.nidur.info/இஸ்லாம்/கட்டுரைகள்/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2043%20%2048.jpg" style="float: right;" /><br />
<div dir="ltr">
முதலில் உம்மி என்பதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உம்மி என்றால் தாய் என்பது பொருள். அதாவது தாயை சார்ந்திருப்பவன். கைக்குழந்தைகளே தாயை சார்ந்திருப்பார்கள். எனவே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதுகின்ற, படிக்கின்ற விஷயங்களில் தாயை சார்ந்திருப்பவராக அதாவது உம்மி நபியாக இருந்தார்கள்.</div>
<div dir="ltr" style="text-align: left;">
சிலர் இவ்விஷயத்தில் முரண்படுகின்றனர். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று சொல்வதை விரும்புவதில்லை. ஏனெனில் இது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இழிவுபடுத்துவதாகக் கருதுகின்றனர். எனவே முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியும் என்று இட்டுக் கட்டிக் கூறுகின்றனர். இப்படிக் கூறுபவர்கள் உண்மைக்குப் புறம்பாகவே கூறுகின்றனர்.</div>
<br />
<div dir="ltr">
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மி நபியாக இருந்தது அவர்களுக்கு ஒருபோதும் தரக் குறைவை ஏற்படுத்தவில்லை. மாறாக அவர்களுக்கு மேன்மையையே ஏற்படுத்தியது.</div>
<div dir="ltr">
அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆன் உயர்ந்த இலக்கியத் தரமுடையது. இதுபோன்ற ஒன்றை யாராலும் இயற்ற முடியாது என்று அல்குர்ஆனிலே அல்லாஹ் சவால் விடுகின்றான</div>
<div dir="ltr">
நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்); நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!</div>
<div dir="ltr">
உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:23,24)</div>
<div dir="ltr">
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்திருந்தால் அல்லாஹ் அருளிய குர்ஆனை மக்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே இட்டுக்கட்டி உள்ளனர் என நினைப்பர். அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என அறிந்திருந்தும் அக்கால மக்கள் நபியவர்கள் மீது குர்ஆனை அவரே இட்டுக் கட்டியுள்ளார் என வீணாகக் கதையளந்தனர்.</div>
<div dir="ltr">
"இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!" என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 10:38)</div>
<div dir="ltr">
அதுமட்டுமில்லாது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எழுதத் தெரியாது என்பதை அந்த மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்த காரணத்தினால் நபியவர்கள் வேறொருவரின் துணையுடன் அல்குர்ஆனை எழுதினார்கள் எனக் கூறத் தொடங்கினர்.</div>
<div dir="ltr">
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதை அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றது. அவற்றுள் சில,</div>
<div dir="ltr">
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இன்ஞீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர்ஸஸஸ (அல்குர்ஆன் 7:157)</div>
<div dir="ltr">
(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 29:48)</div>
<div dir="ltr">
எழுதப் படிக்கத் தெரியாது என்பது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தஸ்தை அதிகரிக்கும் காரணியாகவே அமைந்திருக்கின்றது. அவர்கள் உம்மி நபியாக இருந்து அத்தனை சாதனைகளையும் நிறைவேற்றியது என்பது சாதாரண விஷயமல்ல. அல்லாஹ்வின் வசனங்களே இவ்வனைத்திற்கும் காரணமாக அமைந்தன.</div>
<div dir="ltr">
குர்ஆன் எனும் கடலில் ஒருவன் மூழ்குவானேயானால் முத்திலும் பார்க்க விலைமதிப்பற்றவைகளை தமது வாழ்வில் பெற்றுக் கொள்வான். குர்ஆனைப் படிக்கப் படிக்க மனிதன் வாழ்வின் யதார்த்த நிலையை உணர்வான். குர்ஆன் உலகிலுள்ள எந்த புத்தகத்திற்கும் ஒப்பாகாது. அதன் உரை நடையும் ஏனையவற்றிலிருந்து வித்தியாசப்படும். அதைப் மீண்டும் படிக்கப் படிக்க ஒருபோதும் சளிப்பு எற்படுவதில்லை. அல்குர்ஆனை ஓதும்போது அல்லாஹ் ஒவ்வொரு எழுத்திற்கும் 10 நன்மையைத் தருகின்றான். அப்படியாயின் அல்குர்ஆன் காட்டித் தந்த வழியைக் கடைப்பிடிப்போமேயானால் அல்லாஹ் எவ்வளவோ நன்மைகளை எமக்கு அருளுவான்.</div>
<div dir="ltr">
அநேகமானோரின் வீடுகளில் குர்ஆன் காட்சிப் பொருளாகவே இருக்கின்றது. தூசி துடைத்து வைப்பார்களே ஒழிய திறந்து பார்ப்பது கூட இல்லை. குர்ஆன் வீட்டில் இருந்தால் சரி. அதன் போதனைகளை அறிய ஒரு துளியளவேனும் ஆர்வம் இல்லை. முதலில் குர்ஆன் எதற்காக அருளப்பட்டது என்பது கூட தெரியாத முஸ்லிம்களாக நம்மில் பெரும்பாலானோர் இருக்கின்றனர். இது வேதனைப்பட வேண்டிய விஷயம்.</div>
<div dir="ltr">
அல்குர்ஆன் மக்களை சிந்திக்கத் தூண்டுகிறது பல ஆராய்ச்சிகளுக்கு வழி வகுக்கின்றது. நல்வழிப்படுத்துகின்றது நன்மை தீமைகளை பிரித்தறிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக மனிதனின் சீரான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றது.</div>
<div dir="ltr">
இப்படிப் பட்ட திருமறையை தினமும் படித்து நல்வழியை அடைவோமாக.</div>
<br />
<i></i><br />
<br />
<div dir="ltr">
source: <a $included="null" href="http://rasminmisc.blogspot.in/2010/07/02.html"><i><span style="text-decoration: underline;">http://rasminmisc.blogspot.in/2010/07/02.html</span></i></a></div>
<br />
<div dir="ltr">
- ஃபாத்திமா ஷஹானா கொழும்பு.</div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-48689282492051265292012-02-08T19:34:00.001-08:002012-02-08T22:03:36.276-08:00அல்லாஹ்வின் வீடான பள்ளிவாசல்களில் பாரபட்சமான நிலை ஏன்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<em></em><br />
<div dir="ltr">
<em><img src="http://www.nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2043%20%2075.jpg" style="float: left;" /></em><strong><span style="background-color: #e03d5a; color: white;"> ஃபாத்திமா ஷஹானா </span></strong></div>
<br />
<div dir="ltr">
[ இன்று பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்காக அல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன.</div>
<div dir="ltr">
அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்கு கட்டப்படும் பள்ளிவாசல்கள் பெரும்பாலானவற்றில் இன்று அல்வாஹ்வைத் தவிர வேறு நபர்களை வணங்கக்கூடியதான வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஏன் பள்ளிவாசல்களில் தர்ஹாக்களை வைத்துக் கொண்டு, மரணித்த அந்நபரிடம் பிரார்த்தித்தால் தமது தேவைகள் நிறைவேறும் என அல்லாஹ்வின் பண்புகளை இவ்வுலகில் வாழ்ந்து மரணித்த ஒரு மனிதருக்கு வழங்கி அல்லாஹ்விற்கு அவனது பள்ளிவாசல்களிலேயே இணை கற்பிக்கின்றனர்.</div>
<div dir="ltr">
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அல்லாஹ்விற்கே இணை கற்பிக்கும் நிர்வாகிகள் அல்லாஹ்விற்கு தாம் இணை கற்பிப்பதையே பெரும் பாவமாகக் கருதாத நிலையில் பள்ளிவாசல் சுத்தத்தைப் பற்றியா கவனம் செலுத்தப்போகிறார்கள்?</div>
<div dir="ltr">
இன்று பெரும்பாலான பள்ளிவாசல்களின் நிர்வாகம் முஸ்லிம் பெண்களையே மறந்துவிட்டது. ஒரு சிறிய இடமாவது பெண்களுக்கு ஒதுக்கியதாகத் தெரியவில்லை.</div>
<div dir="ltr">
''பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்.என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: புகாரி 900, 873, 5238)</div>
<br />
<div dir="ltr">
இன்று வெளியூருக்கு பிரயாணம் செய்யும் பலர் தம்முடைய வீட்டுப் பெண்கள் தொழுவதற்கு பள்ளிகளில் இடம் கேட்டால் அவர்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தையை பகிரங்கமாக புரக்கணிப்பதாகும்.]</div>
<img src="http://www.nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2043%20%2075.jpg" style="float: left;" /><br />
<strong><span style="background-color: #333399; color: white;"> அல்லாஹ்வின் வீடான பள்ளிவாசல்களில் பாரபட்சமான நிலை ஏன்? </span></strong><br />
<div dir="ltr">
உலகில் பல நாடுகளில் வாழ்கின்ற முஸ்லீம்களுக்கு பல வகைகளிலும் அவர்களின் உரிமைகள் பரிக்கப்படும் நிலையில் இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கு அதிகமான உரிமைகளையும் சழுகைகளையும் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளதையும்,வழங்கிக் கொண்டிருப்பதையும் நாம் அன்றாடம் காணக்கூடியதாக உள்ளது.</div>
<br />
<div dir="ltr">
அந்த உரிமைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் நமது மத கிரியைகளை சுதந்திரமாக பின்பற்றும் உரிமையாகும்.</div>
<div dir="ltr">
ஆனால் கவலைக்குறிய விஷயம் என்னவென்றால் மதத்தை பின்பற்றுவதிலும் மதம் தொடர்பான இடங்களை பயன்படுத்துவதிலும் ஆண்,பெண் என்ற பாகுபாடு காட்டப்படுகிறது.அது போல் பள்ளிகளை நிர்வகிப்பவர்களும் இந்த விஷயத்தில் பொடு போக்காகவே நடந்து கொள்கிறார்கள்.</div>
<div dir="ltr">
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 2:114)</div>
<div dir="ltr">
இந்த இறைவசனத்திலிருந்து பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்குரியனவென்று அல்லாஹ்வே தெளிவாகக் கூறுகின்றான்.அது போல் அல்லாஹ்வை பயந்து கொண்டுதான் அவற்றுக்குள் நுழைய வேண்டும் என்றும் அல்லாஹ் மிகத் தெளிவாக இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.</div>
<div dir="ltr">
அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகைக்காக பள்ளிகளுக்கு வருகிறார்கள் அந்த சந்தர்பங்களில் சில பள்ளிகளில் அவர்களால் தொழுவதற்கு விருப்பம் வருவதில்லை ஏன் என்றால் அந்த பள்ளிகளில் தூய்மை பேணப்படுவதில்லை.மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவாக குறிப்பிடுகிறான். அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? யார் அல்லாஹ்வின் பள்ளிகளை பாழாக்க முனைகிறார்களோ அப்படிப்பட்டவர்கள் பெரும் அநீதி இழைத்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.</div>
<div dir="ltr">
இன்று சில பள்ளிவாசல்களைத் தவிர்த்து பல பள்ளிவாசல்களை எடுத்துக்கொண்டால் தொழுமிடத்தை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டு சுற்றிவர இருக்கும் வுழூ செய்யும் இடம், கழிவறை, பள்ளிவாசலை சுற்றியுள்ள வளாகம் இன்னும் கழிவறையில் வைக்கப்பட்டிருக்கும் வாளி போன்றவை தொடுவதற்கும் ஏன் பார்ப்பதற்குக் கூட அருவருப்பான நிலையில் உள்ளது. கழிவறையிலுள்ள துர்நாற்றம் தொழ வருபவர்களை மீண்டும் பள்ளிவாசல்களுக்கு வருவதையே தடுக்கின்றது. பள்ளிவாசல் கழிவறைகளில் வைக்கப்பட்டிருக்கும் வாளிகளிலும், கழிவறைகளிலுமுள்ள அசுத்தம் நம் உடம்பிலிருந்து வெளியாக்கும் கழிவுகளை விட அசுத்தமாகவுள்ளது. சில பள்ளிவாசல்களில் மேல் மாடிகளிலுள்ள தொழும் பாய்கள் கூட தூசி படிந்தவைகளாக உள்ளன. உண்மையில், நகர்ப்புற பள்ளிவாசல்களைவ விட ஏனைய பள்ளிவாசல்களிலேயே இந்த நிலை பெரும்பாலும் நிலவி வருகின்றது.</div>
<div dir="ltr">
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும். (அல்குர்ஆன் 9:17,18)</div>
<div dir="ltr">
பள்ளிவாசல்களை நிர்வகிப்பதற்குரிய நிர்வாகிகளின் முதலாவது தகுதி இறையச்சமுள்ளவர்களாக இருக்க வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகிகள் அல்லாஹ்விற்கு மட்டும் பயந்து அவனுடைய கட்டளைகளை யாருக்கும், எதற்கும் விட்டுக் கொடுக்காது நடைமுறைப்படுத்தக்கூடியவர்களாக இருக்க வேண்டும். மேலுள்ள குர்ஆன் வசனத்திலிருந்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் என்று அல்லாஹ்வே கூறுகின்றான்.</div>
<div dir="ltr">
ஆனால், அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்கு கட்டப்படும் பள்ளிவாசல்கள் பெரும்பாலானவற்றில் இன்று அல்வாஹ்வைத் தவிர வேறு நபர்களை வணங்கக்கூடியதான வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஏன் பள்ளிவாசல்களில் தர்ஹாக்களை வைத்துக் கொண்டு அந்த மரணித்த மனிதருக்கு கராமத்துக்கள் இருந்ததாகவும் எனவே, மரணித்த அந்நபரிடம் பிரார்த்தித்தால் தமது தேவைகள் நிறைவேறும் என அல்லாஹ்வின் பண்புகளை இவ்வுலகில் வாழ்ந்து மரணித்த ஒரு மனிதருக்கு வழங்கி அல்லாஹ்விற்கு அவனது பள்ளிவாசல்களிலேயே இணை கற்பிக்கின்றனர். எனவேதான், மேலுள்ள குர்ஆன் வசனத்தில்; இணை கற்பிப்பவர்கள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது என்று அல்லாஹ் கூறுகின்றான்.</div>
<div dir="ltr">
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அல்லாஹ்விற்கே இணை கற்பிக்கும் நிர்வாகிகள் அல்லாஹ்விற்கு தாம் இணை கற்பிப்பதையே பெரும் பாவமாகக் கருதாத நிலையில் பள்ளிவாசல் சுத்தத்தைப் பற்றியா கவனம் செலுத்தப்போகிறார்கள்?</div>
<div dir="ltr">
பெரும்பாலான பள்ளிவாசல்களில் இந்த நிலை இன்று காணப்படுகின்றது. பள்ளிவாசல்களினுள் டைல்ஸ் பிடித்து அழகான முறையில் அலங்காரங்களுடன் அமைத்து சுத்தமாக வைத்திருக்கின்றார்கள். ஆனால், சுற்றுப்புறச் சூழலும், கழிவறைகளும் ஒரு மனிதனுக்கு பள்ளிவாசலுக்கு வரும் எண்ணத்தையே வரவிடாமல் தடுக்கின்றுது.</div>
<div dir="ltr">
''...பெண்களுக்குக் கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன். ஞானமிக்கவன்.'' (அல்குர்ஆன் 2:228)</div>
<div dir="ltr">
மேலுள்ள வசனத்திலிருந்து ஆண்களுக்கு உரிமைகள் உள்ளது போல் பெண்களுக்கும் உரிமைகள் உள்ளது. என அல்லாஹ் தனது திருமறையிலேயே கூறுகின்றான். ஆனால், இன்று பெரும்பாலான பள்ளிவாசல்களின் நிர்வாகம் முஸ்லிம் பெண்களையே மறந்துவிட்டது. ஒரு சிறிய இடமாவது பெண்களுக்கு ஒதுக்கியதாகத் தெரியவில்லை. எல்லா பள்ளிவாசல்களையும் நான் இங்கு குறிப்பிடவில்லை. பெண்களுக்கு வந்து தொழுதுவிட்டு செல்வதற்கு இடம் ஒதுக்கியுள்ள சில பள்ளிவாசல் நிர்வாகங்களும் உள்ளன.</div>
<div dir="ltr">
அதற்கு மாற்றமாக தூர பிரயாணங்களில் ஈடுபடும்போது பெண்கள் சில பள்ளிவாசல்களில் இறங்கி தங்களுக்கத் தொழுவதற்கு இடம் கேட்கும்போது பெண்களிற்கான தொழும் இடம் இல்லை எனவும், வேறு ஒரு இடத்தைக் காட்டி அங்கு தொழுமாறும் அந்த இடத்தில் தூசு படிந்து தொழ முடியாத நிலையில் உள்ளதால் எல்லோரும் தொழும் இடத்தில் தொழக் கேட்கின்ற போது இது ஆண்கள் தொழும் இடம் என்று மறுப்பதும் கவலைக்குரிய விஷயம். இது போல் பெண்களுக்கு இஸ்லாத்திலுள்ள உரிமைகள் பற்றி பள்ளிவாசல் நிர்வாகம் பாரபட்சமாக இருக்கும் நிலைமையையும், பெண்களும் முஸ்லிம்கள் என்பதை மறந்த நிலைமையையும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெண்களுக்கு இந்த உரிமை அளித்ததை மறந்த நிலைமையையும், பெண்களுக்கு ஏராளமான உரிமை தந்த இஸ்லாத்தில் பெண்களது உரிமைகளை மறந்த நிலைமையையும்.அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? நிர்வாகிகளே சிந்திக்க வேண்டாமா?</div>
<div dir="ltr">
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள்.என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி: 900,873,5238)</div>
<div dir="ltr">
இன்று வெளியூருக்கு பிரயாணம் செய்யும் பலர் தம்முடைய வீட்டுப் பெண்கள் தொழுவதற்கு பள்ளிகளில் இடம் கேட்டால் அவர்களுக்கு இடம் கொடுக்கப்படுவதில்லை. இது நபியவர்களின் வார்த்தையை பகிரங்கமாக புரக்கணிப்பதாகும்.</div>
<div dir="ltr">
குறைந்த பட்சம் அந்தப் பெண்கள் தம்முடைய இயற்கைக் தேவைகளை நிறைவேற்றுவதற்கு கழிவறை வசதிகள் கூட செய்து தராதுள்ளனர். ஆண்களின் கழிவறைகளின் கட்டமைப்பு பெண்களுக்கு ஏற்ற வகையில் இல்லாததால் பெண்களுக்கென எல்லாப் பள்ளிவாசல்களிலும் கழிவறை குறைந்தது ஒன்றாவது கட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளிவாசல்கள் அவ்வவ்வூரிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரினதும் ஒரு பொது இடம் என்பதால் எல்லோரினதும் தேவைகளை நிவர்த்தி செய்யும் இடமாகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் இடமாகவும் இருக்க வேண்டும்.</div>
<div dir="ltr">
ஆனால், இன்று பள்ளிவாசல்கள் அல்லாஹ்விற்காக அல்லாமல் அப்பள்ளிவாசல்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்காகவே இயங்கிக் கொண்டிருக்கின்றன. நிர்வாகிகளே உணர்ந்து திருந்தாதவிடத்து இந்த நிலைமை நீடித்துக் கொண்டிருக்கும். அல்லாஹ்வை வணங்குவதற்காகக் கட்டப்பட்டிருக்கும் பள்ளிவாசல்களை தன் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக நிர்வகிக்கும் நிர்வாகிகள் இருக்கும் வரை பள்ளிவாசல்கள் முழுமையாக அல்லாஹ்வுக்காக கட்டுப்பட்;தாக கருதப்படாது.</div>
<div dir="ltr">
அன்பின் சகோதர சகோதரிகளே!</div>
<div dir="ltr">
அனைவரும் அல்லாஹ்விற்குக் கட்டுப்பட்டு அல்லாஹ்வின் வீட்டை அல்லாஹ்விற்கு விருப்பமான வழிகளில் மட்டும் நிர்வகித்து மக்களுக்குப் பயன்படும் விதத்தில் நிர்வகிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்</div>
<div dir="ltr">
</div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-61138184855982642752012-02-08T19:32:00.001-08:002012-02-08T22:04:07.194-08:00திருமணத்தில் நடைபெறும் வழிகேடுகளுக்கு அந்தந்த ஊர் மு(த்)தவல்லிகளே பொறுப்பு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="itp-share">
<div class="itp-share-fbl">
<like action="like" class=" fb_edge_widget_with_comment fb_iframe_widget" colorscheme="light" font="segoe ui" href="http://www.nidur.info/கட்டுரைகள்/சமூக-அக்கரை/4286-திருமணத்தில்-நடைபெறும்-வழிகேடுகளுக்கு-அந்தந்த-ஊர்-முதவல்லிகளே-பொறுப்பு" layout="button_count" send="1" show_faces="false" width="90"><iframe allowtransparency="allowtransparency" class="fb_ltr" frameborder="0" id="f602c437a7a425" name="f35de51616a718" scrolling="no" src="http://www.facebook.com/plugins/like.php?action=like&channel_url=https%3A%2F%2Fs-static.ak.fbcdn.net%2Fconnect%2Fxd_proxy.php%3Fversion%3D3%23cb%3Df2bcdc0d449cb22%26origin%3Dhttp%253A%252F%252Fwww.nidur.info%252Ff27b13dd2103fe2%26relation%3Dparent.parent%26transport%3Dpostmessage&colorscheme=light&extended_social_context=false&font=segoe%20ui&href=http%3A%2F%2Fwww.nidur.info%2F%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2F%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%2F4286-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&layout=button_count&locale=en_US&node_type=link&sdk=joey&send=true&show_faces=false&width=150" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; height: 21px; width: 150px;" title="Like this content on Facebook."></iframe></like></div>
</div>
<div style="clear: both;">
</div>
<i><img src="http://www.nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2045%20%205%2099.jpg" style="float: left;" /></i><br />
<div dir="ltr">
<strong><span style="background-color: #003366; color: white;"> திருமணத்தில் நடைபெறும் வழிகேடுகளுக்கு அந்தந்த ஊர் மு(த்)தவல்லிகளே பொறுப்பு! </span></strong></div>
<br /><div dir="ltr">
[ தீமை செய்வது மட்டுமல்ல தீமைக்கு சாட்சியாக இருப்பதும் குற்றமே என்பதை நாம் எப்படி மறந்தோம்?</div>
<div dir="ltr">
அதுவும் ஒட்டுமொத்த உலக சமுதாயம் அனைத்திற்கும் வழிகாட்ட வேண்டிய நாம் எவ்வாறு நம்முடைய இடத்தையே இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளோம்? இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதுமுண்டா?</div>
<div dir="ltr">
சமுதாயங்களிலேயே உயர்வான சமுதாயம் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம்?</div>
<div dir="ltr">
எழுத்தில் உள்ளதை செயலில் கொண்டுவர வக்கற்ற நமக்கு இதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது?</div>
<br /><div dir="ltr">
இனியாவது திருந்தி வாழ்ந்து நம் சமுதாய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது கலிமா சொன்ன ஒவ்வொருவரின் கடமையல்லவா? சிந்தியுங்கள் சகோதரர்களே, சிந்தியுங்கள்!]</div>
<div dir="ltr">
‘எவருக்கு மூன்று பெண்; மக்கள் அல்லது மூன்று சகோதரிகள், அல்லது இரண்டு பெண் மக்கள் அல்லது இரண்டு சகோதரிகள் இருந்து அவர்களை நன்முறையில் பராமரித்து அவர்களுக்குரிய கடமைகளில் அல்லாஹ்வை பயந்து நடந்தால் அவருக்கு சுவர்க்கம் கிடைக்கும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸயீத் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: திர்மிதீ)</div>
<br /><div dir="ltr">
‘எவர் தம் பெண் மக்களின் ஏதேனும் ஒரு காரியத்திற்குப் பொறுப்பேற்று மேலும் நன்முறையில் அவர்களைப் பராமரித்தால் அவர்கள் (பெண் மக்கள்) அவரை (பராமரித்தவரை) நரக நெருப்பை விட்டும் தடுக்கும் திரையாகி விடுவார்கள்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தெரிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி)</div>
<div dir="ltr">
எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற எண்ணக் கனவுகளை இதயத்தில் ஏற்றி வைத்துப் பார்த்துத் தான் இந்தப் பொன்மொழிகளைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்திருப்பதுபோல் தோன்றுகிறது.</div>
<div dir="ltr">
இன்றைய நிகழ்காலம் சமுதாயத்தை எப்படிக் காய் நகர்த்தி, இருப்பவரைக் கூட கடைக்கோடிக்கு இழுத்துச் செல்கிறது என்பது நாமறிந்த விஷயம் தான். வசதி இருப்பவன் பெண்பிள்ளையைப் பெற்றால் அவனும் ஓட்டாண்டியாக்கி விடுகிறது இன்றைய சமூகச் சூழல். பெற்றெடுத்த பெண் மக்காள் மட்டுமல்ல உடன் பிறந்த சகோதரிகளால் கூட சில சகோதரர்கள் பிச்சாதிபதிகளாகி விடுகிறார்கள். நலிந்த வயோதிகத் தந்தையின் பாரத்தை தன் தலையில் சுமந்து கொண்டு உடன் பிறந்த சகோதரிகளின் திருமண வாழ்க்கைக்காக கையேந்தி வரும் அண்ணன்மார்கள் ஆயிரமாயிரம பேர் தெருத்தெருவாக திரிகின்றனர்.</div>
<br /><div dir="ltr">
<strong><span style="background-color: #666699; color: white;"> பட்டதாரி யாசகர் : </span></strong></div>
<br /><div dir="ltr">
ஒரு முஸ்லிம் சகோதரர் வருடந்தோரும் ரமளான் காலத்தில் வசூலுக்கு வந்துவிடுவார். பள்ளிவாசலில் பயான் செய்வார். கிடைப்பதைப் பெற்றுக் கொள்வார். கடைவீதியிலும் கையேந்துவார். தனியாரிடமும் தன்னைப்பற்றி தெரிவித்துப் பெறுவார். வருடம் தவறினாலும் வருகை தவறாது.</div>
<div dir="ltr">
அவரது தாடி, தோற்றம், ஜுப்பாவைப்பார்த்து இவர் இமாம் - ஒரு ஆலிம் - மார்க்க மேதை என நினைத்து ஒரு ஊரின் இமாம் இவரை நெருங்கினார். அவரை நெருக்கமாக விசாரிக்கும்போது உண்மையை மறைக்க முடியாமல் தன்னைப்பற்றி எல்லாவற்றையும் கொட்டிவிட்டார்.</div>
<div dir="ltr">
‘என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் ஹஜரத்! நான் ஆலிமோ அறிஞரோ அல்ல! நான் ஒரு பட்டதாரி. ஊரிலே அரசுப்பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எனது தந்தை எனது இருபதாவது வயதில் வஃபாத்தாகி விட்டார். அப்போது எனக்கு இரண்டு அக்காவும் ஒரு தங்கைளும் இருந்தனர். எனது படிப்பின் ஆர்வத்தைக் கண்ட எங்கள் ஊரிலுள்ள ஒரு முதலாளி பட்டப்படிப்பு வரை படிக்க வைத்து எங்கள் ஊரிலேயே வேலையும் வாங்கிக் கொடுத்தார். ஒரு அக்காவுக்கு திருமண உதவியும் செய்தார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவரும் வஃபாத்தாகி விட்டார். அவரின் மகனை நம்பியிருந்தேன். தகப்பனார் போல் பிள்ளை இல்லை.</div>
<div dir="ltr">
நான் ஊரில் கண்ணியத்தோடு வார்ந்து கொண்டிருக்கிறேன். எனது அக்காவுக்காகவும் தங்கைக்காகவும் யாரையும் எதிர்பார்க்க முடியவில்லை. எனது வருமானம் குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும். அதை வைத்துக்கொண்டு எனது சகோதரிகளுக்கு என்னால் திருமணம் செய்துகொடுக்க முடியாது. எனவேதான் சமுதாயத்தை நம்பினேன். சமுதாயத்தில் நின்று கொண்டு அரசுப் பணியாளன் என்றால் உதவ முன்வர மாட்டார்கள். எனவே தான் இந்த உருவத்துக்குள் ஆகி விட்டேன். நான் ஒரு ‘ஆலிம் என்று தான் இரக்கப்பட்டு ஜகாத், ஸதகா கிடைக்கிறது. சமுதாயம் இரக்கப்படுகிறது!’ என்றார் கண்கள் கலங்கிட!</div>
<div dir="ltr">
உடன்பிறந்த சகோதரிகளின் காரியத்திற்கும் பொறுப்பேற்று நிற்கும் இதுபோன்ற சகோதரர்களின் தியாத்தை என்னவென்பது. இதுபோன்றோர் வாழும் புனிதர்கள் என்பதில் ஐயமில்லை அல்லவா?</div>
<br /><i></i><br /><div dir="ltr">
<strong><span style="background-color: #666699; color: white;"> சொத்தை இழக்கும் தந்தை : </span></strong></div>
<br /><div dir="ltr">
தென் மாவட்டத்திலுள்ள சங்கைமிகு ஒரு கிராமத்தில் திருமணம் நடந்தது. பரம்பரை வைத்தியக் குடும்பம். ஆண் வாரிசு எதுவும் இல்லை. நான்கு பெண் பிள்ளைகள் மட்டுமே வாரிசுச் செல்வங்கள். மூத்த குமருக்கு நிகாஹ் முடிந்துவிட்டது. இரண்டாவது பெண்ணுக்கு நிகாஹ் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இருபதுகளில் இரண்டு குமர்கள் பருவம் அடைந்து காத்திருக்கின்றனர்.</div>
<div dir="ltr">
இந்த இரண்டாவது குமருக்கும் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வாலிபனாகி நிற்கும் ஒரு கடைச் சிப்பந்திக்கும் தான் திருமணம். இருமணம் இணைந்து திருமணமேற்கும் நறுமணத் தம்பதிகளின் ஒப்பந்தப் பதிவுப்பேழை படிக்கப்பட்டது. அதில் முக்கியஸ்தர்களின் கையொப்பத்தோடு மணமகனுக்கு வழங்கப்பட்டிருக்கும் சீதனப் பட்டியலும் எழுதப்பட்டுப் படிக்கப்பட்டது.</div>
<div dir="ltr">
‘பெண்ணின் தாயும் தகப்பனும் குடியிருக்கும் இந்த வீட்டின் மேற்குப்புறப் பாதியை, மூத்த மகளுக்காக முன்பே சீதனமாகக் கொடுத்துவிட்டபடியால் இந்த வீட்டின் மீதமுள்ள கிழக்குப்புறப் பாதியை இந்த மணமகளாகிய இரண்டாம் மகளுக்கு சீதனமாகக் கொடுக்கப்படுகிறது. இரண்டாவது மகளும் அவளின் கணவரும் விரும்பும் வரை மணமகளைப் பெற்ற தாயும் தகப்பனும் இந்த வீட்டில் வசித்துக் கொள்ளலாம். அவர்களின் சம்மதம் இல்லாத பட்சத்தில் பெற்றோர்கள் வெளியேறிக்கொள்ள வேண்டும்’</div>
<div dir="ltr">
பதிவு ஏடு படிக்கப்பட்டிருக்கும்போது, மணமகளின் தகப்பனார் முகம், கவிழ்ந்து இடது கரத்தை தலை நெற்றியில் வைத்துத் தன்னை அறியமால் விழி மலர்ந்து கொண்டிருக்கிறார். திறந்திருக்கும் விழிகளிலிருந்து கண்ணீர் மடியில் வடிந்தன்.</div>
<div dir="ltr">
நான்கு பெண்களைப் பெற்ற அந்த தந்தை இரண்டாம் பெண்ணின் திருமணத்திலேயே இருக்கும் வீட்டை முழுமையாகப் பறிகொடுத்து நிற்கும் காட்சியைக் காணும்போது இதயமே நின்றுவிடும் போலத் தெரிந்தது. பெற்றெடுத்த பெண் பிள்ளைகளுக்காக கட்டிய வீட்டைவிட்டு வெளியேறும் நிலை. வீட்டுக்கு வந்த மருமகள் மனது வைத்தால் எந்த உரிமையும் இல்லாத ஜடமாகத் தனது பூர்வீக வீட்டில் நடமாடலாம். அவரின் இசைவு இல்லையென்றால் வாய் பொத்திக் கண் மூடி, கை கட்டி நடையைக் கட்டிவிட வேண்டியதுதான். (-முபல்லிகா ஏ.ஓ.நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர்)</div>
<br /><div dir="ltr">
<strong><span style="color: #666699;">மேற்காணும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அவலங்களை அநியாயங்களை களைவது எப்படி?</span></strong></div>
<div dir="ltr">
<span style="background-color: #666699;"><strong><span style="color: white;"> திருமணத்தில் நடைபெறும் வழிகேடுகளுக்கு அந்தந்த ஊர் மு(த்)தவல்லிகளே பொறுப்பு! </span></strong></span></div>
<br /><div dir="ltr">
இஸ்லாமியத் திருமணத்தின்போது நடைபெறும் அத்தனை வழிகேடான செயல்களுக்கும் சாட்சியாக இருப்பது யார்? இவை அத்தனைக்கும் பொறுப்பதாரி யார்? யார்? யார்? இதை முற்றிலுமாக களைய முடியாதா? இதற்கு மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என்று மட்டுமே காரணம் சொல்லப்படுகிறது. இது முக்கிய காரணங்களில் ஒன்று தான். ஆனால் இவர்களைப் போல் முக்கிய குற்றவாளியாக கருதத்தகுந்தவர்கள் பலர் உண்டு. அதில் முக்கியமானவர்கள் அந்தந்த ஊர் மு(த்)தவல்லியும், நாட்டாண்மையும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் தான்.</div>
<div dir="ltr">
ஒவ்வொரு ஊரின் பொறுப்பதாரிகளான இவர்கள் அனைவருமே நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு இணையாக புத்தும்புது உடையணிந்து பவ்வியமாக மணமேடையில் அமர்ந்து கொண்டு சாட்சிக் கையெழுத்து போடும் இவர்களும் முக்கிய குற்றவாளிகளே! ஏனெனில் இவர்களிடம் தான் அல்லாஹ் அந்தந்த ஊரின் பொறுப்பை வழங்கியிருக்கின்றான் எனும்போது இவர்கள்தான் அதற்கு பொறுப்புதாரி.</div>
<div dir="ltr">
இவர்களால் அதனை தடுத்து நிறத்த முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். கேட்டால் அவர் கோபித்துக் கொள்வார், இவர் கோபித்துக் கொள்வார்! அல்லாஹ் கோபித்துக்கொள்வானே, அதை எண்ணி அஞ்ச வேண்டாமா?</div>
<div dir="ltr">
வரதட்சணை வாங்கும் திருமணத்தில், இஸ்லாத்திற்கு புறம்பான செயல்பாடுகளுடன் நடைபெறும் திருமணத்தில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்ற ஒவ்வொரு ஊரின் மு(த்)தவல்லியும் நாட்டாண்மையும் சொல்லிப்பார்க்கட்டுமே! சொல்லிப்பார்கட்டுமே என்னஸ சொல்ல வேண்டும்! இல்லையெனில் மறுமையில் அவர்கள்கதி அதோ கதிதான்.</div>
<div dir="ltr">
ஊரை நிர்வாகம் செய்யக்கூடிய – அதிகாரத்திலுள்ள இவர்கள் எவ்வாறு இதுபோன்ற மார்க்கத்திற்குப் புறம்பான செயலை நடத்துவதோடு அதனை பதிவும் செய்கிறார்கள்?! நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் இந்த திருமணப்பதிவுப் புத்தகம் வாசிக்கப்படும்போது இவர்கள் அனைவருமே குற்றவாளியாக்கப்பட்டு தண்டணையிலிருந்து தப்ப முடியாது என்பதை அவர்கள் சிறிதுகூட எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லையே!</div>
<div dir="ltr">
இந்த ஒரு திருமணம் மட்டுமல்ல, இதுபோன்று நடத்தப்படும் ஒவ்வொரு திருமணத்தைப் பற்றியும் அவர்கள் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்கள் என்பதை அதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய ஆலிம்களும் மவுனம் சாதிப்பார்களானால் அவர்களும் இறை தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை அவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும். மறுமை மிகவும் நெறுக்கத்தில்தான் இருக்கிறது என்பதை மறந்திட வேண்டாம்.</div>
<div dir="ltr">
இஸ்லாத்தில் இல்லாத நூதனங்களை புகுத்திய குற்றம், அல்லாஹ்வும் அவனது திருத்தூதர் இட்ட கட்டளைகளுக்கும் மாற்றமாக நடக்கும் நடக்கும் இச்சம்பவங்களுக்கு துணைபோன குற்றம். அதிகாரமிருந்தும் அதை தடுக்காத குற்றம். இன்னும் அநீதி இழைக்கப்பட்ட அந்த மணப்பெண்ணின் துஆ அல்லாஹ்விடம் எவ்வித தடங்களுமின்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் மறுமையில் இவர்கள் நிலை என்ன?</div>
<div dir="ltr">
பதவி என்பது அலங்காரமல்ல. மிகப்பெரும் பொறுப்பு. சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமானால் அது அதிகாரத்தில் இருப்பவர்களாலேயே முடியும். முஸ்லிம் ஜமாஅத்தார்களைப் பொறுத்தவரை அதிகார வர்க்கம் என்பது மு(த்)தவல்லியும் நாட்டாண்மைகளுமே! ஆகவே சமுதாயத்தை நேர்வழியில் நடத்திச்செல்ல வேண்டிய முழு பொறுப்பும் அவர்களைச் சார்ந்ததே! பொறுப்புகளை அவர்கள் சரிவர நிறைவேற்றாமல் தட்டிக்கழிப்பார்களேயானால் என்ன விளைவுகளை அவர்கள் சந்திக்க வேண்டிவரும் என்பதை அல்லாஹ்வின் திருவேதத்தைப்பார்த்து அவர்கள் தெளிவு பெறட்டும்.</div>
<br /><div dir="ltr">
<span style="background-color: #666699;"><strong><span style="color: white;"> இத்தகைய சமூக அவலங்களை களையும் வழிகள் : </span></strong></span></div>
<br /><div dir="ltr">
திருமணத்திற்கு அனுமதி வழங்காதபட்சத்தில் குழப்பம் வரும் என்றிருக்குமானால் திருமணத்திற்கு அனுமதி வழங்கினாலும் அந்தந்த ஊர் நிர்வாகத்தில் இருப்பவர்கள் எவரும் அந்த திருமணத்தில் கலந்து கொள்ளக் கூடாது. அதன் வாயிலாக இது வரதட்சணை வாங்கி நடத்தப்படும் திருமணம் என்பதை ஊர் மக்களுக்கு மறைமுகமாக அறிவிப்பு செய்தது போலாகிவிடுகிறது. சமுதாயத்தில் கவுரத்தை இழக்க பெரும்பான்மையோர் விரும்ப மாட்டார்கள். இன்ஷா அல்லாஹ், இது நல்ல ரிஸல்ட்டைக் கொடுக்கும்.</div>
<div dir="ltr">
உண்ணும் உணவு ஹலாலாக இல்லாதபட்சத்தில் அவர்களின் ‘துஆ’ அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை என்பதை எல்லோரும் - அதுவும் குறிப்பாக தொழுகையாளிகள் எப்படி மறந்தார்கள்?</div>
<div dir="ltr">
வரதட்சணைப்பெற்று நடத்தப்படும் திருமணத்தில் பரிமாறப்படும் உணவை திருமணம் நடத்தி வைக்கும் ‘இமாம்; சாஹிப்’ எக்காரணத்தை முன்னிட்டும் உண்ணக்கூடாது. ஏனெனில் ஒட்டுமொத்த சமுதாயத்திற்காகவும் இறைவனிடம் ‘துஆ’ செய்ய வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய அவர்கள், இவர்கள் வழங்கக்கூடிய ‘தூய்மையற்ற’ உணவை உண்பதன் காரணமாக அவர்களுடைய ‘துஆ’ அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளடாமல் திருப்பியனுப்பப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டால் அது இந்த சமூகத்திற்கு அவர்கள் இழைக்கும் மாபெரும் துரோகமாகும்.</div>
<div dir="ltr">
இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் போன்ற, இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் போன்ற மாபெரும் அறிஞர்களின் துணிவு இக்கால உலமாக்களிடம் இல்லாமல் போனதே இன்றைய சமூக அவலங்கள் பலவற்றிற்குக் காரணமாக இருக்கிறது என்பதை எவர்தான் மறுக்க முடியும்?</div>
<br /><div dir="ltr">
<span style="color: blue;">தீமை செய்வது மட்டுமல்ல தீமைக்கு சாட்சியாக இருப்பதும் குற்றமே என்பதை நாம் எப்படி மறந்தோம்?</span></div>
<br /><div dir="ltr">
அதுவும் ஒட்டுமொத்த உலக சமுதாயம் அனைத்திற்கும் வழிகாட்ட வேண்டிய நாம் எவ்வாறு நம்முடைய இடத்தையே இவ்வளவு அசுத்தமாக வைத்துள்ளோம்? இதைவிட வெட்கக்கேடு வேறு ஏதுமுண்டா? சமுதாயங்களிலேயே உயர்வான சமுதாயம் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம்? எழுத்தில் உள்ளதை செயலில் கொண்டுவர வக்கற்ற நமக்கு இதைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது? இனியாவது திருந்தி வாழ்ந்து நம் சமுதாய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது கலிமா சொன்ன ஒவ்வொருவரின் கடமையல்லவா? சிந்தியுங்கள் சகோதரர்களே, சிந்தியுங்கள்! சிந்திக்காதவரை தெளிவு கிடைக்காது. மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்போது நமக்கு எவரும் துணை புரிய மாட்டார்கள். நாம் தான் பதில் சொல்லியாக வேண்டும்.</div>
<div dir="ltr">
வெறுமனே வாழ்ந்துவிட்டு மறைவதற்கல்ல இந்த பிறவி! திருமறையில் அல்லாஹ் தெளிவாகக்கூறிவிட்டான், மரணத்தையும் வாழ்வையும் அல்லாஹ் படைத்திருப்பது உங்களில் எவர் நல்லவர், எவர் தீயவர் என்பதை அறிவதற்காகவே! அதுமட்டுமல்ல, அல்லாஹ்வின் பார்வையில் கொசுவின் இறக்கைக்கு கூட சமமில்லாத இந்த உலக வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத அற்புதமான சுகங்களை அள்ளித் தரக்கூடிய மறுமையின் சுவன வாழ்வை இழப்பானேன்!</div>
<div dir="ltr">
எல்லாம் வல்ல அல்லாஹ் இறையச்சமுடையவர்களையும், இறைசட்டத்தை பின்பற்றக்கூடிய நிர்வாகத்தையும் ஒவ்வொரு முஸ்லிம் மஹல்லாவுக்கும் வழங்கி இந்த தீனுல் இஸ்லாத்தை செழித்தோங்கச் செய்வானாக. ஆமீன். </div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-66395999382841712002012-02-08T03:47:00.001-08:002012-02-08T03:47:54.587-08:00ஆரோக்கியமும் உடல் நலமும்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="http://www.nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2044%20%209%202.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" closure_uid_ezyj53="3" src="http://www.nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2044%20%209%202.jpg" /></a><br />
<div dir="ltr">
உங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உங்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைவது அவசியம். இயற்கையோடு இணைந்து வாழ்வது ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிக முக்கியம். செக்ஸ் வாழ்க்கையும் </div>
<a href="" name="more"></a>இயற்கையோடு இணைந்த ஒன்றுதான்.<br /><br />
<div dir="ltr">
செக்ஸ் என்பது ஆரோக்கியமான விஷயம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து உண்பதைப் போலவே, ஆரோக்கியமான செக்ஸ் நடவடிக்கைகள் தேர்ந்தெடுத்துப் பழகிக்கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் தங்களுடைய செக்ஸ் தேவைகளை மனம்விட்டுப் பேசிக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இதில் கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. மனம் விட்டுப் பேசி தேவைகளை பூர்த்தி செய்கிறபோது தாம்பத்யம் ஆரோக்கியம் பெறுகிறது.</div>
<div dir="ltr">
செக்ஸ் பற்றி பேசுவதோ எழுதுவதோ தீண்டத்தகாத விஷயம் என்ற பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அது ஆரோக்கியமான விஷயம், ஆரோக்கியத்திற்குத் தேவையான விஷயம் என்பதை புரிந்து வைத்திருப்பவர்கள் மிக சிலரே! மனித இனவிருத்திக்கும், உணர்ச்சிப் பூர்வமான வாழ்க்கை அமைதிக்கும் தேவையான ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்துகொள்ள தயங்குவதே தவறான அணுகுமுறையாகும்.</div>
<img src="http://www.nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2044%20%209%2062.jpg" style="float: left;" /><br />
<div dir="ltr">
செக்ஸ் என்பது உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட ஒன்றாக இருக்கிறது. தவிர, உடல் இயக்கத்திற்கு அடிப்படையாக உள்ள நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, உடலிலுள்ள மற்றொரு முக்கியமான ஹார்மோன் இயக்கமும் செக்ஸ் வாழ்க்கையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதாக இருக்கிறது. எனவே, ஆரோக்கியவாழ்க்கை வாழ விரும்புகின்ற ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, செக்ஸ் உறவுகளில் ஆரோக்கியமான போக்கினை கடைப்பிடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது ஆகும்.</div>
<br />
<div dir="ltr">
ஆரோக்கியத்திற்கும், செக்ஸ் உணர்ச்சி தேவை பூர்த்திக்கும் என்ன சம்பந்தம் என்பதை பார்க்கலாம். பருவமடைந்த பிறகுதான் செக்ஸ் உணர்ச்சியினை வெளிப்படையாக நாம் உணர்கிறோம். ஆனால் அந்த உணர்ச்சி குழந்தைப்பிராயத்திலேயே மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.குழந்தைகளின் பல்வேறு நடவடிக்கைகளில் இதை பார்க்க முடியும்.</div>
<div dir="ltr">
குறிப்பிட்ட ஒரு பருவத்தில் இந்த உணர்ச்சியை வெளிப்படையாக நாம் உணர்வதற்கக் காரணம் என்ன? இயற்கை, இனவிருத்தி வேலையை நாம் தொடங்க வேண்டும் என்பதற்காகவே இந்த உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. அதைப் பூர்த்தி செய்து வாழ்கின்றபோதுதான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையினை நாம் வாழ்வதாக அர்த்தம். பசி எடுத்தால் சாப்பிடுகிறோம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துகிறோம். அதைப்போலவே செக்ஸ் என்கிற உடற்பசி ஏற்பட்டால் அந்த தேவை பூர்த்தியாவது அவசியம். எல்லா உணர்ச்சி தேவைகளையும் போலவே செக்ஸ் உணர்ச்சி தேவைகளும் இயற்கையானதுதான்.</div>
<div dir="ltr">
பசிக்கு உணவுன்னல், தாகத்திற்கு தண்ணீர் குடித்தல் போன்றவை தனிநபராக செய்துவிடக்கூடிய காரியங்களாகும். ஆனால் செக்ஸ் தேவை பூர்த்தி என்பது ஆண் பெண் ஆகிய இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். எனவேதான் இயற்கை ரொம்பவும் சாதுர்யமாக ஒரு குறிப்பிட்ட பருவத்தில் செக்ஸ் உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. இது இறைவனின் அற்புதமான ஏற்பாடு என்றே சொல்லலாம்.</div>
<img src="http://www.nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2044%20%209%2062.jpg" style="float: left;" /><br />
<div dir="ltr">
ஆண் - பெண் கூட்டுறவுதான் செக்ஸ உணர்ச்சி தேவையின இருவரிடமும் பூர்த்தி செய்கிறது. அதனால் தான் குறிப்பிட்ட பருவத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து திருமணம் முடித்து நல்லறமான இல்லறம் எனும் தாம்பத்ய வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மனித வாழ்வில் இது ஒரு சுவாரசியமான விஷயம் என்றே சொல்ல வேண்டும்.</div>
<br />
<div dir="ltr">
ஆணின் தேவையினைப் பெண்ணும், பெண்ணின் தேவையின ஆணும் பூர்த்தி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இது பூர்த்தியாகும்போது தான் இருவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடிகிறது. எனவே, ஆணின் தேவையினை பெண்ணும், பெண்ணின் தேவையினை ஆணும் உணர்ந்து தாம்பத்ய சுகத்தில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் ஒருவரின் ஆரோக்கியத்தை இன்னொருவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமிது.</div>
<div dir="ltr">
ஆணின் ஆரோக்கியத்தை பெண்ணும், பெண்ணும் பெண்ணின் ஆரோக்கியத்தை ஆணும் காப்பாற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதனாலேயே தாம்பத்ய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவரின் செக்ஸ் தேவைகளை இன்னொருவர் புரிந்துகொண்டு வாழ்வது அவசியமாகிறது.</div>
<div dir="ltr">
செக்ஸ் தேவைகள் பூர்த்தியாகாதபோது மன ஆரோக்கியம் முதலில் கெட்டுப்போகிறது. உணர்ச்சிப் பாதிப்புகள்தான் உடல் ஆரோக்கியம் கெடுவதற்கு முக்கிய காரணம். செக்ஸ் தேவைகள் பூர்த்தியாகாதபோது நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாகிறது. ஹார்மோன்களின் செயல்பாடுகளில் கோளாறு ஏற்படுகிறது. உணர்ச்சி தேவைகள் நிறைவேறாமல் போவதால், நிறைவேறாத ஆசைகள் ஆழ்மன பதிவுகளாகி தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பிக்கிறது. மன அளவிலும், உடல் அளவிலும் பல வகையான பாதிப்புகள் தோன்றுகின்றன.</div>
<div dir="ltr">
சிலர் என்று சொல்வதைவிட பலர் தங்களிடம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு செக்ஸ் தேவை பூர்த்தியாகாததுதான் காரணம் என்பதை உணராதவர்களாகவே இருக்கிறார்கள். தவிர இதுபோன்ற விஷயங்களை ஆரோக்கியத்தின் ஒரு அம்சமாக கருதுவதில்லை. அதை ஒரு கடமையாக மட்டுமே ஏற்று செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். அதன் பின்னே உள்ள உணர்ச்சி தேவைகளை எண்ணிப் பார்ப்பதில்லை. அற்புதமான தாம்பத்ய வாழ்க்கையில் கூட ஓர் இயந்திரமான செயல்பாடு போல ஆக்கிக் கொண்டு விடுகிறார்கள்.</div>
<div dir="ltr">
தாம்பத்ய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் வேறு பல காரணங்களால் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும், மன இறுக்கத்திற்கும் ஆளானாலும், முழுமையான, மனமொத்த செக்ஸ் உணர்வு கொள்கிற போது மன இறுக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். செக்ஸ் உணர்வு சரியான தன்மையில் நிகழாதபோது மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கம் ரத்த அழுத்தம், இருதய கோளாறு, நரம்புத் தளர்ச்சி, குடல்புண் போன்ற பல்வேறு நோய்களுக்;கு காரணமாகிவிடுகிறது.</div>
<img src="http://www.nidur.info/images/-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2044%20%209%2062.jpg" style="float: left;" /><br />
<blockquote class="tr_bq">
<div dir="ltr" style="color: red;">
<b>முழுமையான செக்ஸ் உணர்வின்போது உடலிலுள்ள அளைத்து உணர்ச்சிகளும் ஆரோக்கியமான சமநிலைக்கு வந்துவிடுகின்றன. இதனால் இறுக்கம் நீங்கி உடல் ஆரோக்கிய நிலையினைப் பெறுகிறது. இதனால்தான் இருதய நோயாளிகளும் கூட மிதமான செக்ஸ உணர்வு கொள்வதன் மூலம் அந்த நோயின் கடுமையின குறைத்துக்கொள்ள முடியும் என மருத்துவ நிபுணர்கள் அபிப்ராயப்படுகிறார்கள்.</b></div>
</blockquote>
<br />
<div dir="ltr">
இதுமட்டுமின்றி பலவிதமான மனநோய்களுக்கும் செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படாமல் போவதே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனதில் ஏற்படும் குறைபாடுகள் உணர்ச்சி மோதல்களாக வெளிப்படலாம். உடல் ஆரோக்கிக் குறைவாக வெளிப்படலாம். எவ்வகையான வெளிப்பாடாயினும், வாழ்க்கையை அது பாதிக்கவே செய்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு செக்ஸ் நிறைவு தேவை என்பதை குறைத்து மதிப்பீடுவதற்கில்லை.</div>
<div dir="ltr">
‘செக்ஸ் என்பது செக்ஸ் உறுப்புக்களில் இல்லை, மனதில்தான் இருக்கிறது’ என்று செக்ஸ் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஆரோக்கியமான செக்ஸ் உணர்ச்சிக்கு மனமே காரணமாகிறது. உங்கள் மனைவியை நீங்கள் நேசிக்காமல் அவருடன் முழுமையான செக்ஸ் உறவு கொள்வது சாத்தியமில்லை. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ விரும்புகிற அனைவரும் செக்ஸ் உறவில் சிறப்பான கவனம் செலுத்துவது அவசியம். இதை பலர் தவற விடுவதால்தான் குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகளுக்கும், மனச்சோர்வுகளுக்கும் சில சமயங்களில் காரணம் தெரியாமல் தடுமாறுகிறோம்.</div>
<div dir="ltr">
நமது ஆரோக்கியத்தை செம்மைப்படுத்துகின்ற சக்தி படைத்தது செக்ஸ் உணர்ச்சி. சிந்தனையைக் கூர்மையாக்கி வேகமாக செயல்படுகின்ற சக்தியும் அதற்குண்டு. தாம்பத்ய வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு முழுமையான செக்ஸ் உணர்வு இன்றியமையாதது என்பதை புரிந்து கொள்வோம். தாம்பத்யத்தை அர்த்தமுள்ளதாக்குவோம்.</div>
<div dir="ltr">
-பி.எஸ். ஆச்சார்யா</div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-79880930699945903202012-02-08T03:45:00.001-08:002012-02-08T03:45:33.606-08:00பா.ஜ.க. லீலை அம்பலம்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<img alt="Karnataka ministers filmed watching porn in Assembly" class="attachment-post_size wp-post-image" height="170" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/02/Karnataka-ministers-filmed-watching-porn-in-Assembly-270x170.jpg" title="Karnataka ministers filmed watching porn in Assembly" width="270" /> <br />
<div style="text-align: justify;">
பெங்களூர்:பாரதீய கலாச்சாரம், பண்பாடு என வாய்க்கிழிய பேசும் சங்க்பரிவார கூட்டத்தின் ஒழுக்கச் சீரழிவு அடிக்கடி அம்பலமாகி வருகிறது. கலவரம் அல்லது இனப் படுகொலைகளை நிகழ்த்தும் வேளையில் சங்க்பரிவாரத்தின் பாலியல் வக்கிரத்தின் உச்சக்கட்ட கோர முகத்தை நாம் பார்த்திருக்கிறோம். அதைப் போலவே பொதுவாழ்விலும் அவர்களின் வேடம் அடிக்கடி கலைந்து வருகிறது.</div>
<div style="text-align: justify;">
இந்நிலையில் இந்திய சட்டப்பேரவை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தலைகுனிவான சம்பவம் கர்நாடகா சட்டப்பேரவையில் நடந்தது. இரண்டு பாஜக அமைச்சர்கள் சட்டமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே மொபைல் போனில் ஆபாசப்படம் பார்த்துள்ளனர்!</div>
<div style="text-align: justify;">
இதனால் ஆளும் பாஜக.விற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு அமைச்சர் லஷ்மண் சவாடி, மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் சி.சி. பாட்டீல் ஆகிய இருவரும் மொபைலில் ஆபாசப் படம் பார்த்ததாக உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று வீடியோ ஒளிப்பதிவுடன் செய்தி வெளியிட்டது பரபரப்பாகியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
எதிர்கட்சித் தலைவரான சித்தராமையா இவர்கள் இருவரையும் அவைக்குள்ளேயே இனி அனுமதிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
புதுவருடப் பிறப்பின் போது பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பாகிஸ்தான் தேசியக் கொடி சங்க்பரிவார்களால் ஏற்றப்பட்டது குறித்த சூடான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இந்த அமைச்சர்கள் மொபைல் வீடியோவில் ஆபாசம் படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
இவர்களின் உறுப்பினர் பதவியை பறிக்கவேண்டும் என எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்வர் சதானந்தா கவுடா கூறுகையில், “நடந்தது உண்மையென்றால் அவைத் தலைவர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார். அவைத் தலைவர் போபையா, தான் இது குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
வடக்கு கர்நாடகா மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரண்டு அமைச்சர்களும் இந்த நிகழ்வு குறித்து பதில் கூறாமல் நழுவிவிட்டனர்.</div>
<div style="text-align: justify;">
முன்னாள் முதல்வரும், ஜே.டி.எஸ். கட்சி தலைவருமான குமாரசாமி இது குறித்துக் கூறுஅகையில், “பாஜகவினர் மக்கள் இந்துக் கலாச்சாரத்தைப் பேணி காப்பது பற்றி வாய் கிழிய பேசி வருகிறது, ஆனால் அவர்கள் மனங்களிலும் செயல்களிலும் இவ்வளவு அசிங்கங்கள் இருக்கிறது பாருங்கள். கர்நாடகா சட்டசபை வரலாற்றிலேயே இச்சம்பவம் கறுத்த அத்தியாயமாகும்.” என்று கூறியுள்ளார்.</div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-26653488344861767032012-02-07T19:46:00.001-08:002012-02-07T19:46:46.977-08:00ஹிஜ்ரத்தும் அதன் நினைவுகளும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<img alt="Post image for ஹிஜ்ரத்தும் அதன் நினைவுகளும்" class="post_image alignright remove_bottom_margin" height="183" src="" width="275" /> நாம் ஹிஜ்ரி 1433 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியையும், அந் நிகழ்ச்சியின் போது, சில கட்டங்களில் , நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த நல்லியல்புகளையும் காண்போம்.</div>
<div style="text-align: justify;">
இஸ்லாமியருக்கென தனியொரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுந்தது. நபித் தோழர்கள், அதை எந்தக் காலகட்டத்திலிருந்து துவக்குவது என்று ஆலோசித்தனர். முக்கியமான பல நிகழ்ச்சிகள் நடந்திருப்பினும், அவற்றில் நபி(ஸல்) அவர்கள், முதன் முதலாக, மக்காவை விட்டு, வெளியேறிய நிகழ்ச்சியையே, இஸ்லாமிய ஆண்டின் துவக்கக் காலமாகக் காலக்கட்டமாகக் கொள்ளலாமெனத் தீர்மானித்தனர்.</div>
<div style="text-align: justify;">
இஸ்லாமிய வரலாற்றில் , பல முக்கிய போர்கள் நிகழ்ந்துள்ளன. பல உடன்படிக்கைகள் நடந்துள்ளன. இவற்றிலொன்றை நினைவு கூர்ந்து, அதையே இஸ்லாமிய ஆண்டிற்குப் பெயராகவும், துவக்க கால கட்டமாகவும் வைத்திருக்கலாம். ஆனால், நபித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்றத்தையே (ஹிஜ்ரத்தையே) நமது ஆண்டின் துவக்க காலமாகவும், பெயராகவும் வைக்கத் தீர்மானித்தனர்.</div>
<div style="text-align: justify;">
நபி(ஸல்) அவர்கள், தோழர் அபூபக்கர்(ரழி) ஆகிய இருவர் மட்டுமே, மக்காவை விட்டு வெளியேறினர். மதீனாவுக்கு வந்த பின்பு தான், பத்ரு, உஹது மற்றும் பல தற்காப்புப் போர்கள் நடந்தன. இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. பல உயிர்த் தியாகங்கள், சிறப்புமிக்க உடன்படிக்கைகள் நிகழ்ந்தன. இறுதியாக சுமார் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் மக்கா நகர் சென்று, அங்கும் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
இவ்வனைத்து நிகழ்ச்சிகளுக்கும் துவக்கமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்ற நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி நடந்திராவிடில், மேற்காணும் நிகழ்ச்சிகளுக்கு இடமேது? அன்று நபி(ஸல்) அவர்களின் உயிருக்கே ஆபத்து வந்த போது, உயிர், உடமை உறவு அனைத்தையும் துறந்து , பிறந்த மண்ணையும் விட்டு, வெளியேறிய தியாகத்திற்கும், செயலுக்கும் முன்பாக, வேறெந்தச் செயலையும், வேறெவர் தியாகத்தையும், அருமை நபித் தோழர்கள், உயர்வாகக் கருதவில்லை.</div>
<div style="text-align: justify;">
அம்மாநபியின் தியாக, புனித வெளியேற்றமே இஸ்லாமிய மறு மலர்ச்சிக்காகவும், அதன் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாகவும் அமைந்தது, அத்தகைய ஹிஜ்ரத் நிகழ்ச்சியை இஸ்லாமிய ஆண்டுக்கு துவக்க காலமாகவும், ஹிஜ்ரத் என்ற சொல்லையே ஹிஜ்ரி ஆண்டின் பெயராகவும் வைத்தனர். இவ்வெளியேற்ற நிகழ்ச்சியின் சில கட்டங்களில் நபி(ஸல்) அவர்களின் நற்பண்பையும், நம்பிக்கை, உறுதியையும், இந்த ஹிஜ்ரி புத்தாண்டில் நினைவு கூர்வோம்.</div>
<div style="text-align: justify;">
நபி(ஸல்) அவர்களின் நேர்மையெனும் நற்பண்பு:-</div>
<div style="text-align: justify;">
நபி(ஸல்) அவர்களின் இல்லத்தை மக்கத்து காபிர்கள் முற்றுகையிட்டு, அவர்களைக் கொல்ல வாளேந்தி நிற்கின்றனர். வீட்டின் உள்ளே இருப்பவர்களின் நிலை எவ்வளவு பதட்டமாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இறைவனது கட்டளைக் கிணங்க வெளியேறும் அந்த பதட்டமான, இக்கட்டான நிலையிலும், நபி(ஸல்) அவர்கள் அலி(ரழி) அவர்களை அழைக்கிறார்கள். தாம் பிறரிடமிருந்து பெற்று, பாதுகாத்து வரும் அமானிதப் பொருட்களின் விபரத்தைக் கூறி அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
எத்தகைய ஆபத்தான மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் தமது நேர்மை நிலையைப் பொறுப்புக்களை ஒப்படைக்கும் வகையில் கடைப்பிடித்திருக்கிறார்கள். மக்கா நகரில் தரம் அங்கிருந்த போது மட்டுமின்றி, தாம் வெளியேறிய பின்னரும் அஸ்ஸாதிக், அல் அமீன் எனும் தமது அருந்தகுதிக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் செய்து காட்டியதையுணர்ந்து அவ்வுன்னத நடைமுறையை நமது வாழ்வில் கடைபிடித் தொழுக வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
ஆனால் இன்று அமானிதப் பொருளை மோசடி செய்வதும், அமானித நிலையில் தமது பொறுப்பிலுள்ள அநாதைகள், விதவைகள் முதலியோரின் சொத்துக்களை விழுங்குவதும், பிறருக்குக் கடன் பட்டதை, தீர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வின்றி, தமக்கு வியாபாரத்தில் ஏற்பட்டதோர் கஷ்டத்தைக் காரணம் காட்டி கொடுத்தவரின் பொருட்களை கபளீகரம் செய்துவிடும் ஏமாற்றுச் செயல்களையும் நாம் காண முடிகிறது.</div>
<div style="text-align: justify;">
இவ்வாறு அமானிதப் பொருட்களை பேணிக் காக்காமல் இருக்கும் பொறுப்பில்லாத தன்மையை, செயலை வல்ல அல்லாஹ் குர்ஆனில் எச்சரிப்பதைப் பார்ப்போம்.</div>
<div style="text-align: justify;">
“(விசுவாசிகளே! நிச்சயமாக நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும்” என அல்லாஹ் கட்டளையிடுகிறான்.(4:58)</div>
<div style="text-align: justify;">
“தவிர நீங்கள் (செய்வது அக்கிரமம் என) அறிந்து கொண்டே உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.” (8 : 27)</div>
<div style="text-align: justify;">
“நீங்கள் அநாதைகளின் பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்,(அவற்றிலுள்ள) நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் (சேர்ந்து) விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது மாபெரும் பாவமாகும்.” ( 4:2)</div>
<div style="text-align: justify;">
இன்னும் எவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களையும், வாக்குறுதிகளையும் பேணி, சாட்சியத்தில் தவறிழைக்காமலும், தொழுகையைப் பேணியும் வருகிறார்களோ, இத்தகையோர் தாம் சுவனபதியில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள். (70:32-35)</div>
<div style="text-align: justify;">
அல்லாஹ்வின் வல்லமையும் , அவனது தூதர் நபி(ஸல்) அவர்களின் ஈமான் உறுதியும்</div>
<div style="text-align: justify;">
நபி(ஸல்) அவர்கள் தமது இல்லத்திலிருந்து வெளியேறி விட்டதை உணர்ந்து கொண்டவுடன், அந்த மக்கா காபிர்கள், அவர்கள் சென்ற பாதையைப் பின் தொடர்கின்றனர். நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரழி) அவர்களும் மக்காவின் அருகிலுள்ள ஒரு குகையில் மறைந்திருக்கின்றனர். குகையின் மேற்புறத்தில் நடமாடும் காபிர்கள் தற்செயலாகக் குனிந்தாலும் இருவரும் தென்பட்டு விடும் அமைப்பில் மிக அபாய நிலையில் இருவரும் உள்ளே அமர்ந்திருந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
தோழர் அபூபக்கர்(ரழி) அவர்கள் நபி அவர்களே! நாம் இப்போது இருவர் மட்டுமே இவ்விடத்திலிருக்கிறோம், அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறதே என கலக்கமுற்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வல்லமையால், தனது தூதர் நபி(ஸல்) அவர்களையும், அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களையும் மிக அற்புதமாகக் காப்பாற்றிய நிலையை வெகு அழகாகச் சொல்லிக் காட்டுகிறான்.</div>
<div style="text-align: justify;">
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அவருக்கு யாதொரு இழப்பும் இல்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கிறான். குகையில் (அவனது நபி), இருவரில் ஒருவராக இருந்தபோது தமது தோழரிடம் “கவலைப்படாதீர் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.” என்று கூறினார் (அப்போது) அவர் மீது அல்லாஹ் தம் சாந்தியை இறக்கி வைத்தான். மேலும் நீங்கள் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். (ஏனெனில்) அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும். அல்லாஹ் யாவற்றையும் மிகைப்போனும், ஞானமிக்கோனுமாவான். (9:40)</div>
<div style="text-align: justify;">
நபி(ஸல்) அவர்கள் இத்தகைய பேராபத்தான நிலையிலும் தமது நிலை தடுமாறி விடாது, வல்ல அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர்களாக, அவன் ஒருவனே அன்றி தமக்கு பாதுகாவலர் வேறு யாருமில்லை எனும் நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்தவர்களாக, அருமை நண்பர் அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களுக்கு பயப்படாதீர்! அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்ல நாயன் நலமுடன் இருக்கும் பொழுது நாம் கவலைப்படுவானேன்? என்று அல்லாஹ்வைக் கூறி ஆறுதல் செய்ததை அனைவரும் உணர்ந்து படிப்பினை பெறுவோமாக.</div>
<div style="text-align: justify;">
ஆனால் இன்றைக்கு மக்கள் தமக்கேற்படும் துன்பம் துயரங்களை அகற்ற, வல்லமைமிக்க அல்லாஹ்வின் அபார சக்திகளை மறந்துவிட்டு, அவனது படைப்பினங்களிடம் பாதுகாப்புத் தேடியலையும் பரிதாப நிலையைப் பார்க்கிறோம். அவ்வாறு செய்வது பெருங்குற்றமான இணை வைத்தலில் சேர்க்கும் என்பதையும், இணைவைத்தல் ஒரு போதும் மன்னிக்கபடுவதில்லை என்பதையும் அவர்கள் உணர்வதில்லை.</div>
<div style="text-align: justify;">
இதோ வல்ல அல்லாஹ் தனது சிறிதும் ஐயமில்லாத சிறப்புமிகு வேதத்தில் அறிவிக்கின்றான்.</div>
<div style="text-align: justify;">
“இணை வைத்தல் மன்னிப்பில்லாக் குற்றம்”</div>
<div style="text-align: justify;">
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை அறவே மன்னிக்க மாட்டான்; அதல்லாதவற்றை தான் நாடியோருக்கு மன்னிப்பான், யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்கள். (4 : 48)</div>
<div style="text-align: justify;">
உதவியும், பாதுகாப்பும் :-</div>
<div style="text-align: justify;">
நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சி வானங்களிலும், பூமியிலும் உள்ளது. அவனைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனோ துணை செய்பவனோ வேறு எவருமில்லை. இதை நீங்கள் அறியவில்லையா? (2 : 107)</div>
<div style="text-align: justify;">
எனினும், நீங்கள் அவனையே அழைப்பீர்கள், அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ, அத்துன்பத்தை தான் நாடினால் நீக்கி விடுவான். ( 6 : 41)</div>
<div style="text-align: justify;">
(நபியே!) நீர் கூறும் அல்லாஹ்வையன்றி நீங்கள் (பாதுகாவலர் என) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களை உங்கள் கஷ்டங்களை நீக்க அழைத்துப் பாருங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவர்கள் உங்களது யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவோ, அல்லது திருப்பி விடவோ சக்தி அற்றவர்கள் (என்பதை உணர்வீர்கள்) (17 : 56)</div>
<div style="text-align: justify;">
நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது போன்று, அவர்களின் வாழ்க்கை முறையும் மனித சமுதாயத்திற்கு ஒரு வழி காட்டலாக அமைந்திருப்பதை நாம் அறிந்திருந்தும் 1408 ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட நமது சமுதாயத்தில் உண்மையான இஸ்லாமியத் தன்மை உருவாக்கியுள்ளதா? அதன் தூய வாழ்வு துவங்கியிருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்த்து இப்புத்தாண்டில் நமது வாழ்வை இஸ்லாமிய நெறிகளின் பால் செலுத்தி சீர்படும் எண்ணத்துடன் அதை வரவேற்பதில் தான் உண்மையான புத்தாண்டின் மகிழ்வு அமைந்திருக்கிறது. வல்ல நாயன் நல்லதோர் திருப்புமுனையை நமது வாழ்விலும் நல்கி, நலம் பல பெற அருள் புரிவானாக! ஆமீன்.</div>
<div style="text-align: justify;">
<em><strong><span style="color: grey; font-size: xx-small;">இப்னு ஷேக்</span></strong></em></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-82810433048799666552012-02-07T19:45:00.000-08:002012-02-07T19:45:05.850-08:00மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?”<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<img alt="Post image for மரணத்தைத் தடுக்க மார்க்கம் உண்டா?”" class="post_image alignleft remove_bottom_margin" height="194" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTDQLpCX_78_KkPfjZGXtSFgq-RSXJyQA-61CRLNztpMOQtsycF" width="259" /> பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி உலகம் தோன்றிய நாளிலிருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்து போனார்கள். இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகமே இல்லை.</div>
ஏக இறைவனை ஏற்றுக் கொண்டோரும், ஏராளமான தெய்வங்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருப்போரும், இறைவனையே ஏற்க மறுத்தோரும் ‘மண்ணில் பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம்” என்பதில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கண் முன்னே காண்பதை நம்புவதற்கு அறிவும் தேவையில்லை, ஆராய்ச்சியும் தேவையில்லை.<br />
<div style="text-align: justify;">
‘மரணத்தைத் தடுக்க ஏதேனும் மார்க்கம் உண்டா?” என்று ஆராய்ச்சி செய்தவர்களும் கூட ஒரு நாள் மரணித்துப் போனார்கள். குறைந்த பட்சம் தங்களுக்கு ஏற்பட்ட மரணத்தைத் தள்ளிப் போடக் கூட அவர்களால் இயலாமற்போனது. நாம் அனைவரும் ஒரு நாள் இறப்பது உறுதி. இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் எப்போது இறப்போம்? எப்படி இறப்போம்? எந்த இடத்தில் இறப்போம்? அந்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.</div>
<blockquote>
<div style="text-align: justify;">
<strong>…தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (திருக்குர்ஆன் 31:34)</strong></div>
<div style="text-align: justify;">
<strong>நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே! (திருக்குர்ஆன் 4:78)</strong></div>
</blockquote>
<div style="text-align: justify;">
மரணம் எங்கும், எப்பொழுதும், எப்படியும் ஏற்படலாம். வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டால் மறுபடியும் வீடு வந்து சேருவது நிச்சயமல்ல. வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றால் சொந்த ஊருக்குத் திரும்பி வருவது நிச்சயமல்ல. எனவே வீட்டை விட்டு வெளியில் புறப்படும்போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி (பொருள்: இறைவனின் பெயரால்…(புறப்படுகிறேன்) இறைவன் மீதே நம்பிக்கை வைத்தேன்) என்று சொல்லிக் கொண்டு புறப்பட வேண்டும். ஒருபோதும் போயிராத ஒரு இடத்துக்கு ஒருவர் எதிர்பாரா விதமாகப் போக நேரலாம். அந்த இடத்தில் அவர் மரணமடையலாம். ‘இறப்பதற்காகவே இவர்; இந்த இடத்துக்கு வந்தாரோ” என்று கூடச் சிலர் சொல்வதுண்டு.</div>
<blockquote>
<div style="text-align: justify;">
<strong>ஒருவர் எந்த இடத்தில் மரணிக்க வேண்டும் என்று அல்லாஹ் தீர்மானித்து விட்டானோ அந்த இடத்துக்கு அவர் போக ஒரு தேவையை ஏற்படுத்துவான்.என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ அஸ்ஸா (ரலி) ஆதாரம்: திர்மிதி (2237)</strong></div>
<div style="text-align: justify;">
<strong>அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும்போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறைவைக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன் 6:61)</strong></div>
<strong>(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: “ஸலாமுன் அலைக்கும்” (“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள். (திருக்குர்ஆன் 16:32)</strong></blockquote>
<div style="text-align: justify;">
ஆகிய வசனங்களிலும் இன்னும் பல்வேறு வசனங்களிலும் உயிரைக் கைப்பற்றுபவர்கள் பலர் என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.</div>
<blockquote>
<div style="text-align: justify;">
<strong>உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக (திருக்குர்ஆன் 32:11)</strong></div>
</blockquote>
<div style="text-align: justify;">
என்னும் வசனம் தெளிவாகவே ஒவ்வொருவருக்கும் உயிரைக் கைப்பற்ற ஒரு வானவர் நியமிக்கப் பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. உலகில் பிறந்த கோடானுகோடி மக்களுக்கும் தனித்தனி வானவரா? என்று சிலர் கேட்கலாம். இந்தக் கேள்வி அர்த்தமற்றது. அல்லாஹ்வின் வல்லமையை குறைத்து மதிப்பிடுவதாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக) கோடானு கோடி மக்களுக்கும் கோடானு கோடி வானவரை நியமிப்பது அல்லாஹ்வுக்கு இயலாத காரியமல்லவே!</div>
<blockquote>
<div style="text-align: justify;">
<strong>உயிரை எடுக்கும் விதம் நற்செயல்கள் புரிந்து நல்லவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவர் மகிழ்ச்சி அடையும் விதத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார். எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி ‘அஞ்சாதீர்கள்! கவலைப் படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” எனக் கூறுவார்கள். (திருக்குர்ஆன் 41:30)</strong></div>
</blockquote>
இறைவனை நிராகரித்து தீய செயல்கள் புரிந்து தீயவராக வாழ்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவரை பயமுறுத்தும் விதத்தில் அவருக்காக நியமிக்கப்பட்ட வானவர் அவரிடம் வருவார்.<br />
<blockquote>
<div style="text-align: justify;">
<strong>அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்). (திருக் குர்ஆன் 6:93)</strong></div>
</blockquote>
<div style="text-align: justify;">
இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் மரணிக்கும் போது அந்த இறுதி நேரத்தில் அவர்களுக்கு உண்மை உணர்த்தப்படும்.</div>
<blockquote>
<div style="text-align: justify;">
<strong>நமது தூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும்போது ‘அல்லாஹ்வை விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே என்று கேட்பார்கள் ‘அவர்கள் எங்களை விட்டும் மறைந்து விட்டனர் என்று கூறுவார்கள். தாம் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவர்கள். (திருக்குர்ஆன் 7:37) </strong></div>
<strong>நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:28)</strong></blockquote>
<div style="text-align: justify;">
எனவே ஒவோருவரும் தனக்கும் மரணம் எந்த வினாடியிலும் ஏற்படலாம் என்பதை மனதில் நிறுத்தி படைத்த இறைவனை அஞ்சி வாழ்வதும் அவன் வழி காட்டலின் படியும் நடப்போமாக.</div>
<div style="text-align: justify;">
<span style="color: silver;">A.அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா</span></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-52228242100414498132012-02-05T22:29:00.001-08:002012-02-05T22:29:44.234-08:00புகைப்பழக்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<img alt="Post image for புகைப்பழக்கம்" class="post_image alignright remove_bottom_margin" height="194" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSORBCw_sTMvQ_9Bs-DJ_5i_6MA33JeDB4e-TfZMDoJ383Z3DHs" width="259" /> நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;"> சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் þருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் இருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு ‘சமூக விரோதி’ புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;"> இறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;"> இஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;"> <strong>நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.</strong> (அல்குர்ஆன் 4:29)</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;"> இ<strong>ன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள். </strong> (அல்குர்ஆன் 2:195)</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;"> <strong>உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள்.</strong> (அல்குர்ஆன் 7:31)</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;"> மேலே கண்ட இறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா? </span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;"> மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;"> புகைப்பிடிப்பவர்களிடம் அதன் தீமைகளை எடுத்துரைத்து அப்பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டினால் சாதாரணமாக அவர்கள் கூறுவது “புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியாமலில்லை; உடல் பாதிக்கப்படுவது உணராமலுமில்லை; ஆனால் பாழாய்ப்போன வழக்கத்தை விட முடியவில்லையே” என்பதுதான். புகைப்பிடிக்கும் அறிஞர்களும் கூட இதையே கூறுவது அவர்கள் கற்ற கல்விக்கும் பெற்ற அறிவுக்கும் அழகல்ல.</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx; font-size: xx-small;">அப்துஸ்ஸமது சென்னை</span></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-802936267172225172012-02-05T22:27:00.001-08:002012-02-05T22:27:57.082-08:00மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; margin-left: 1em; margin-right: 1em; text-align: justify;">
<a href="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTcDDCOTYGV6Yd4XUYbLUhB3paHhLpNwUcafrjOBBLutvjpNi0LYw" imageanchor="1" style="clear: right; cssfloat: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="Post image for மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்!" border="0" class="post_image alignright remove_bottom_margin" height="194" src="http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTcDDCOTYGV6Yd4XUYbLUhB3paHhLpNwUcafrjOBBLutvjpNi0LYw" width="259" /></a>இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களை அறிந்து, அதன் மேலான போதனையை எற்றுச் செயல்படும் உண்மை முஸ்லிம் கருணையாளராக இருப்பார். அவரது இதயத்தில் கருணை பொங்கி வழியும். பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுவது வானத்திலுள்ளவனின் கருணைக்குக் காரணமாக அமையும் என்பதையும் அறிவார்.</div>
<br />
<br />
<blockquote>
<div style="text-align: justify;">
<strong> நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)</strong></div>
</blockquote>
<div style="text-align: justify;">
முஸ்லிமின் இதயத்தில் கருணை விசாலமாக இருக்க வேண்டும். அதை தனது குடும்பம், மனைவி, மக்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் சமூகத்தின் அனைத்து மனிதர்களுக்கும் கருணையை விசாலப்படுத்த வேண்டும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் அனைத்து மக்களிடமும் கருணையுடன் நடந்து கொள்வதை ஈமானின் நிபந்தனைகளில் ஒன்றாகக் கூறினார்கள்.</div>
<div style="text-align: justify;">
அபூ மூஸப் அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:</div>
<blockquote>
<div style="text-align: justify;">
<strong> “நீங்கள் ஒருவருக்கொருவர் கருணையுடன் நடந்து கொள்ளாதவரை ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும், தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் கருணையோடுதான் நடந்து கொள்கிறோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “கருணை என்பது நீங்கள் உங்கள் தோழரிடம் மட்டும் கருணையுடன் நடந்து கொள்வதல்ல. எனினும் அது மக்களிடமும் கருணை காட்டுவதாகும். எல்லோருக்கும் பொதுவான கருணையாகும்” என்று கூறினார்கள். (முஃஜமுத் தப்ரானி)</strong></div>
</blockquote>
<div style="text-align: justify;">
இந்தக் கருணை, முஸ்லிமான தனிமனிதரின் இதயத்தில் பொங்கி எழுந்து உலக மக்கள் அனைவரையும் தழுவிக்கொள்ளும். ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் இஸ்லாம் இந்த நேசத்தை உருவாக்கி, இறுதியில் முஸ்லிம் சமுதாயத்தையே இரக்கமுள்ள சமுதாயமாக மாற்றுகிறது. பின்பு என்றென்றும் இந்த சமுதாயத்தில் தூய்மையான அன்பு, சுயநலமின்றி பிறர்நலம் பேணுதல், அழமான இரக்க சிந்தனை ஆகியவைகளின் அலைகள் ஒயாது அடித்துகொண்டே இருக்கும்.</div>
<div style="text-align: justify;">
நபி (ஸல்) அவர்கள் கருணை காட்டுவதில் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடன் அது இரண்டறக் கலந்துவிட்டது. அவர்களது மனம் கருணையைப் பொழிந்தது. எந்தளவுக்கென்றால் அவர்கள் தொழுகையில் குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்கள். “குழந்தையின் அழுகையால் தாய்க்கு சிரமமேற்படுமே’ என நினைத்த நபி (ஸல்) அவர்களின் இதயத்தில் கருணை சுரந்து, தொழுகையை சுருக்கிக் கொண்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் தொழவைக்க ஆரம்பிக்கிறேன், அதை நீளமாக்க விரும்புகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். நான் குழந்தையின் அழுகையால் அதன் தாய்க்கு எற்படும் சிரமத்தை எண்ணி எனது தொழுகையை சுருக்கிக் கொள்கிறேன்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)</div>
<blockquote>
<div style="text-align: justify;">
<strong>ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)</strong></div>
<div style="text-align: justify;">
<strong> நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) “எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் “எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)</strong></div>
</blockquote>
<div style="text-align: justify;">
உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை முஸ்லிம்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல “குழந்தைகளை முத்தமிடமாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டார்கள். அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: “உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.” அனஸ்(ரலி) ஸஹீஹுல் புகாரி</div>
<div style="text-align: justify;">
ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.</div>
<div style="text-align: justify;">
(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.</div>
<div style="text-align: justify;">
நபி (ஸல்) அவர்கள் கருணையின் வட்டத்தை மனிதர்களுடன் சுருக்கிக் கொள்ளாமல் அதனுள் விலங்கினங்களையும் இணைத்துக் கொண்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்றபோது கடுமையான தாகம் எற்பட்டது. ஒரு கிணற்றைக் கண்டு அதனுள் இறங்கி தண்ணீர் அருந்திவிட்டு வெளியேறினான். அப்போது அங்கு ஒரு நாய் தாகத்தால் நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருந்தது. அம்மனிதன் “எனக்கு ஏற்பட்ட தாகத்தைப் போன்றே இந்த நாய்க்கும் ஏற்பட்டுவிட்டது’ என்று நினைத்தவனாக கிணற்றினுள் இறங்கி தோலாலான தனது காலுறையில் நீரை நிரப்பிக் கொண்டு அதை தனது வாயில் கவ்வியபடி மேலே வந்து நாய்க்குத் தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனின் நற்செயலுக்க பகரமாக அவனை மன்னித்து விட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் “விலங்குகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உயிருள்ள ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் நற்கூலி உண்டு.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)</div>
<blockquote>
<div style="text-align: justify;">
<strong>நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு பூனையின் விஷயத்தில் ஒரு பெண் வேதனையளிக்கப்பட்டாள். அவள் அதை அடைத்து வைத்துவிட்டாள். அது பசியால் செத்துவிட்டது. அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அப்போது (மலக்குகள்) கூறினார்கள், நீ அதற்கு உணவளிக்காமல், தண்ணீர் புகட்டாமல் அதை அடைத்துவிட்டாய். அதை நீ வெளியே விட்டிருந்தால் பூமியிலுள்ள பூச்சிகளை சாப்பிட்டிருக்கும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)</strong></div>
</blockquote>
<div style="text-align: justify;">
நபி (ஸல்) அவர்கள் ஒர் இடத்தில் தங்கியபோது ஒரு பறவை நபி (ஸல்) அவர்களின் தலையின்மேல் பறந்து கொண்டிருந்தது. ஒருவர் தனது முட்டையை எடுத்து அநீதமிழைத்தது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டது போன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் “உங்களில் இந்தப் பறவையின் முட்டையை எடுத்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அந்த முட்டையை எடுத்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “அதன் மீது கருணைகூர்ந்து அதை திருப்பிக் கொடுத்துவிடு” என்றார்கள். (முஃஜமுத் தப்ரானி)</div>
<div style="text-align: justify;">
இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இதயங்களில் விசாலமான கருணைச் சிந்தனையை விதைத்துவிட எண்ணினார்கள். அப்போது அவர்கள் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதை தன் இயல்பாகக் கொள்வார்கள். விலங்கின் மீதே கருணை காட்டும் பண்பைப் பெற்றவர்கள் ஒருபோதும் மனிதனான தனது சகோதரனிடம் கருணையற்று கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
நபி (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கும் விலங்கினங்களுக்கும் கருணை காட்டவேண்டுமென கட்டளையிட்டார்கள். முஸ்லிம்கள் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள். அந்தக் கருணை முழு உலக முஸ்லிம்களையும் உள்ளடக்கி சமுதாயங்களையும் தேசங்களையும் சூழ்ந்துகொள்ள வேண்டும். பூமியில் கருணைப் பண்பு பரவலாகிவிடும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வின் கருணை பொழிகிறது.</div>
<div style="text-align: justify;">
<span style="color: #888888;">முன்மாதிரி முஸ்லிம்</span></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-47311710742211997492012-02-05T22:26:00.000-08:002012-02-05T22:26:03.073-08:00ரபீஉல் அவ்வல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="font-family: TheneeUniTx;"> <img alt="Post image for ரபீஉல் அவ்வல்" class="post_image alignright remove_bottom_margin" height="169" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcR4yI7y-wU3m1evohdAunaH7aMlTV6qaghjNL0ep7--13mtDzKYSQ" width="297" /> </span>ரபீஉல் அவ்வல் மாதம் முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி <span style="color: black;">صلى الله عليه وسلم</span> அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நபி <span style="color: black;">صلى الله عليه وسلم</span> அவர்களின் மறைவிற்கும் 600 ஆண்டுகள் கழித்தே மக்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டவையாகும்.</div>
<div style="text-align: justify;">
மற்ற மதத்தவர்கள் எப்படி தங்கள் வேதங்களையும் மதச்சிறப்புகளையும் வேதாந்தமாகவும் வெற்று முழக்கங்களாகவும் ஆக்கி விட்டரனரோ அதே போல் முஸ்லிம்களும் இஸ்லாத்தின் தூய வாழ்க்கை நெறி முறைகளையும் வெற்று முழக்கங்களாகவும், பஜனை பாடுவதாகவும் ஆக்கிவிட்டார்கள் என்பதை இந்த மீலாது விழாக்களும் மவ்லூது சபைகளும் தெள்ளத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன. மாற்று மதத்தினரை அடி பிசகாமல் அப்படியே பின்பற்றி நடக்க ஆரம்பித்து விட்டனர் முஸ்லிம்களும்.</div>
<div style="text-align: justify;">
நபி <span style="color: black;">صلى الله عليه وسلم</span> அவர்கள் இந்த சமுதாயத்தின் வழிகேட்டைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
“நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் நீங்களும் அதனுள் நுழைவீர்கள்” என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்) “அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு, வேறு யார் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-இல்ம், புகாரி-இஃதிஸாம்.</div>
<div style="text-align: justify;">
முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும் இந்த மீலாது விழாக்களில் மாற்று மதத்தினரையும் அழைத்து அவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், நபி <span style="color: black;">صلى الله عليه وسلم</span> அவர்களைப் பற்றியும் ஏற்றிப் போற்றிப் பேசுவதை பெருமையாக எண்ணும் துரதிஷ்ட நிலையும் இன்று நாடு முழுதும் பரவிவிட்டது. நாங்கள் போடுவது வெற்றுக் கோஷங்கள்தான் -வீண் முழக்கங்கள்தான் என்பதை இது கொண்டு உறுதிபடுத்துகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
உள்ளும் புறமும் ஒருங்கே சீராகச் செயல்படும் உண்மையாளர்கள் ஒரு போதும் இவ்வாறு நடக்க முடியாது; பேச முடியாது. மேடைப் பேச்சு, கற்பனைப் பேச்சு, நயவஞ்சகப் பேச்சு என்பதுபோல் பீலாது மேடைகளையும் ஆக்கி வருகிறது இந்த முஸ்லிம் சமுதாயம். இது வேதனைக்குரிய விஷயமா இல்லையா?</div>
<div style="text-align: justify;">
அல்லாஹ்வும் அவனது ரஸூலும் காட்டித்தராது, மனித கற்பனைகளைக் கொண்டும், யூகங்களைக் கொண்டும் நல்லவைகயாகக் கருதப்பட்டு செயல்படுத்தும் காரியங்கள் அனைத்தும் இறுதியில் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவையாக அமையுமே அல்லாமல் சமுதாயத்திற்குப் பலன் தரும் செயல்களாக ஒரு போதும் அமையாது.</div>
<div style="text-align: justify;">
உண்மையில் நபி <span style="color: black;">صلى الله عليه وسلم</span> அவர்கள் மீது உறுதியான அன்புள்ளவர்கள், அவர்களை அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட உண்மைத் தூதர் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இப்படிப்பட்ட வெற்றுச் சடங்குகளில் ஈடுபடமாட்டார்கள். ரபீஉல் அவ்வல் மாதம் மட்டும் மேடைகளை அமைத்துக் கற்பனைக் கவிதைகளான மவ்லூதுகளை ஓதுபவர்களாகவும் மீலாது மேடைகள் அமைத்து நுனி நாவில் புகழ் பாடுபவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
நபி <span style="color: black;">صلى الله عليه وسلم</span> அவர்களுக்குப் பிறகு மனிதர்களால் உருவாக்கப்பட்டவற்றை மார்க்கமாக ஒரு போதும் எடுத்துச் செயல்படுத்தமாட்டார்கள். மாறாக வருடம் 365 நாட்களும், நபி <span style="color: black;">صلى الله عليه وسلم</span> அவர்களைத் தமது வழிகாட்டியாக மனப்பூர்வமாக ஏற்று அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி, குர்ஆனைக் கொண்டும் மட்டும் நிலை நாட்டப்பட்டுள்ள காரியங்களை மட்டும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட உண்மை முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ அல்லாஹ்வின் அருள் கிட்டுமாக!.. thanks to..read islam</div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-30389239139324238472012-02-05T22:21:00.000-08:002012-02-05T22:21:49.921-08:00பெரம்பலூர் மாவட்ட மக்களின் புது ஹீரோ தாரேஸ் அஹமது.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span id="sasText" style="left: -9999px; position: fixed; top: 0px;"></span><br />
<div style="float: right; overflow: hidden; padding-top: 10px;">
<div class="socbuttons" style="float: left;">
<a fb_rendered="true" href="http://www.facebook.com/sharer.php?u=http%3A%2F%2Fwww.satyamargam.com%2F1889&t=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81!%20%7C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&src=sp" name="fb_share" share_url="http://www.satyamargam.com/1889" style="text-decoration: none;" type="button"><span class="FBConnectButton FBConnectButton_Small" style="cursor: pointer;"><span class="FBConnectButton_Text">Share</span></span></a> </div>
<div style="float: left; height: 20px; margin-left: 10px; width: 75px;">
<iframe allowtransparency="allowtransparency" frameborder="0" scrolling="no" src="http://www.facebook.com/plugins/like.php?locale=en_US&href=http%3A%2F%2Fwww.satyamargam.com%2F1889&layout=button_count&show_faces=true&action=like&colorscheme=light&font=&height=20" style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; height: 20px; overflow: hidden; width: 75px;"></iframe></div>
<div style="float: left; margin-left: 10px; margin-right: 0px; width: 100px;">
<iframe allowtransparency="allowtransparency" class="twitter-share-button twitter-count-horizontal" frameborder="0" scrolling="no" src="http://platform.twitter.com/widgets/tweet_button.1326407570.html#_=1328509027358&_version=2&count=horizontal&enableNewSizing=false&id=twitter-widget-0&lang=en&original_referer=http%3A%2F%2Fwww.satyamargam.com%2F1889&size=m&text=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20-%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81!%20%7C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&url=http%3A%2F%2Fwww.satyamargam.com%2F1889" style="height: 20px; width: 110px;" title="Twitter Tweet Button"></iframe></div>
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; float: left; margin-left: 10px; width: 60px !important;">
<div id="___plusone_0" style="background: none transparent scroll repeat 0% 0%; border-bottom-style: none; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; cssfloat: none; display: inline-block; float: none; font-size: 1px; height: 20px; line-height: normal; margin: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-indent: 0px; vertical-align: baseline; width: 90px;">
<iframe allowtransparency="allowtransparency" frameborder="0" id="I1_1328509029386" marginheight="0" marginwidth="0" name="I1_1328509029386" scrolling="no" src="https://plusone.google.com/_/+1/fastbutton?url=http%3A%2F%2Fwww.satyamargam.com%2F1889&size=medium&count=true&annotation=&hl=en&jsh=m%3B%2F_%2Fapps-static%2F_%2Fjs%2Fgapi%2F__features__%2Frt%3Dj%2Fver%3Dc4HND9yJipY.en_GB.%2Fsv%3D1%2Fam%3D!uXA1SJUHioGIFdxJYA%2Fd%3D1%2F#id=I1_1328509029386&parent=http%3A%2F%2Fwww.satyamargam.com&rpctoken=620478548&_methods=onPlusOne%2C_ready%2C_close%2C_open%2C_resizeMe%2C_renderstart" style="border-bottom-style: none; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; height: 20px; left: 0px; margin: 0px; position: static; top: 0px; visibility: visible; width: 90px;" tabindex="-1" title="+1" width="100%"></iframe></div>
</div>
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none; float: left; margin-left: 10px;">
<span class="IN-widget" style="display: inline-block; line-height: 1; text-align: center; vertical-align: baseline;"><span style="display: inline-block !important; font-size: 1px !important; margin: 0px; padding-bottom: 0px !important; padding-left: 0px !important; padding-right: 0px !important; padding-top: 0px !important; text-indent: 0px !important; vertical-align: baseline !important;"><span id="li_ui_li_gen_1328509027702_0"><a href="javascript:void(0);" id="li_ui_li_gen_1328509027702_0-link"><span id="li_ui_li_gen_1328509027702_0-logo">in</span><span id="li_ui_li_gen_1328509027702_0-title"><span id="li_ui_li_gen_1328509027702_0-mark"></span><span id="li_ui_li_gen_1328509027702_0-title-text">Share</span></span></a></span></span><span style="display: inline-block !important; font-size: 1px !important; margin: 0px; padding-bottom: 0px !important; padding-left: 0px !important; padding-right: 0px !important; padding-top: 0px !important; text-indent: 0px !important; vertical-align: baseline !important;"><span class="IN-right IN-hidden" id="li_ui_li_gen_1328509027717_1-container"><span class="IN-right" id="li_ui_li_gen_1328509027717_1"><span class="IN-right" id="li_ui_li_gen_1328509027717_1-inner"><span class="IN-right" id="li_ui_li_gen_1328509027717_1-content"><strong><span style="color: #04558b; font-size: x-small;">0</span></strong></span></span></span></span></span></span> </div>
<div style="clear: both;">
</div>
<style>
.cpr a{color:#d6d6d6; font-size:8px;}
</style><div class="cpr">
</div>
</div>
<div style="clear: both;">
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;"><img align="right" border="0" src="http://www.satyamargam.com/images/stories/news12/daresh-ahmed.jpg" /><span style="font-size: x-small;">பெரம்பலூர் மாவட்ட மக்களின் புது ஹீரோ தாரேஸ் அஹமது. அதிரடியான மாவட்ட ஆட்சியர். ஒருநாள் பேருந்தில் மக்களோடு மக்களாகப் பயணித்துக் கொண்டே அவர்களுடைய பிரச்னைகளை விசாரிப்பார். இன்னொருநாள் மாறுவேடத்தில் திரை அரங்குகளுக்குச் சென்று, டிக்கெட்டுக்குச் சரியான தொகைதான் வசூலிக்கிறார்களா என்று பார்ப்பார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அலுவலகத்துக்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் அதிரடி விசிட் அடிப்பார். </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;">பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹமதின் செல்பேசி எண் இருக்கும். குடிநீர்ப் பிரச்னையில் தொடங்கி சாதிச் சண்டைகள் வரை எங்கே எது நடந்தாலும் ஒரே ஒரு அழைப்பில் பிரச்னையை முடித்துக் கொள்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள். </span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;"><br /><span style="font-size: x-small;"><img align="left" border="0" height="300" src="http://www.satyamargam.com/images/stories/news12/anbagam.jpg" width="310" />"நான் மருத்துவம் படிச்சவன். மக்களுக்கு எல்லா வகையிலும் உதவ இதுதான் சரியான வழின்னு தெரிஞ்சிகிட்டுதான் ஐ.ஏ.எஸ் முடிச்சேன். விவசாயம்தான் நமக்கு முக்கியம்கிறது என்னோட பாலிஸி. அதனால்தான், அடிக்கடி விவசாயிகளைத் தேடி வயல்களுக்கே போறேன். மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டிலும் முதல்வர்கிட்டே விவசாயிகளுக்காகத்தான் பேசினேன். இப்பக்கூட 'ஒருங்கிணைந்த விற்பனை நிலையம்' திறக்கப் போறோம். மக்களைத் தேடிப் போறதுதான் இந்த வேலையோட அடிப்படை. அப்படிப் பார்த்தால், நான் என் வேலையை மட்டும்தான் செய்றேன்" என்று அடக்கமாகப் பேசும் தாரேஸ் அஹம்மதுவின் பணியைப் பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி இருப்பதுதான் பெரம்பலூரில் இப்போதைய ஹாட் டாபிக்!</span></span></div>
<br />
<table align="right" bgcolor="#b3ecff" border="1" id="table1" style="border-collapse: collapse; height: 230px; width: 503px;"><tbody>
<tr><td dir="ltr" height="111" width="530"><table border="1" cellpadding="0" cellspacing="0" dir="ltr" id="AutoNumber1" style="border-collapse: collapse; width: 100%;"><tbody>
<tr><td bgcolor="#ffcc00" dir="ltr" width="100%"><div align="center" dir="ltr" style="margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="font-size: x-small;"><span style="background-color: #ffcc00; font-weight: 700;"><span style="font-size: x-small;">மக்கள் சேவைகளுள் சில:</span></span></span></div>
</td></tr>
</tbody></table>
<ul type="square">
<li dir="ltr"><div align="justify" dir="ltr" style="margin: 6px 4px;">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;">பதவி ஏற்ற ஐந்து மாதங்களில் "மக்களைத் தேடி வருவாய்த்துறை" என்கிற திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் சுற்றி மக்களிடம் இருந்து 45 ஆயிரம் மனுக்களைப் பெற்றுள்ளார் தாரேஸ் அஹமது.</span></span></div>
</li>
<li dir="ltr"><div align="justify" dir="ltr" style="margin: 6px 4px;">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;">அதில் 75 சதவிகித மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாம்.</span></span></div>
</li>
<li dir="ltr"><div align="justify" dir="ltr" style="margin: 6px 4px;">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;">இது தவிர, கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தி 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்குக் கல்விக் கடனும் வழங்கி உள்ளார்!</span></span></div>
</li>
</ul>
</td></tr>
</tbody></table>
<br />
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;">நன்றி: </span><a href="http://www.vikatan.com/article.php?aid=14197&sid=384&mid=1&uid=536576 மக்களின் நண்பன்!.." target="_blank"><span style="font-size: x-small;">ஆனந்த விகடன்</span></a></span></div>
<div style="text-align: center;">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;">oOo</span></span></div>
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;"></span></span><br />
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;">இவை போக, பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிமடம் எனும் ஊரில் அமைந்துள்ள Rural Education & Action Development (</span><a href="http://www.readindia.in/" target="_blank"><span style="font-size: x-small;">READ</span></a><span style="font-size: x-small;">) எனும் மன நலம் குன்றிய மழலையருக்கான பயிற்சி மையத்தைக் கடந்த 23.6.2011இல் திறந்து வைத்து, இன்றும் அதன் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறார் தாரேஸ் அஹ்மது.</span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;"><br /><span style="font-size: x-small;"></span></span></div>
<div>
<table bgcolor="#ffffcc" border="1" id="table1" style="border-collapse: collapse; width: 100%;"><tbody>
<tr><td><div align="justify">
<span style="font-size: x-small;"><strong><span style="font-size: x-small;">மூட நம்பிக்கை: தெளிவாக்கிய தாரேஸ் அஹமது!</span></strong></span></div>
<div align="justify">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;">'ஒவ்வொரு அமாவாசைக்கும் பாம்பு சட்டையை உரிப்பது போலவே, எங்கள் ஊரில் சிறுவன் ராஜதுரையின் உடம்பிலும் தோல் உரிகிறது’ எனும் தகவல் ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) வரவே, பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரத்தை அடுத்த வெங்கலம் கிராமத்தில் ஆஜரானோம். <br /><br />ராஜதுரையின் வீட்டைக் கை காட்டிய உள்ளூர்வாசிகள், குடும்பத் தகராறு காரணமாக அவனுடைய அம்மா கோகிலா, சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இருப்பதாகவும், அப்பா அசோக்குமார் மறுமணம் செய்துகொண்டு தனியாக வசிப்பதாகவும் கூறினார்கள். கூலிவேலை செய்து பேரனைக் காப்பாற்றி வரும் பாட்டி சூடாமணியிடம் பேசினோம்.</span></span> <span style="font-size: x-small;"><br /><br /><span style="font-size: x-small;">''நாங்க குடும்பத்தோட டெல்லியில கூலி வேலை செஞ்சிக்கிட்டு இருந்தோம். அங்கதான் இவன் பொறந்து வளர்ந்தான். கைக்குழந்தையா இருந்தப்பவே இவனுக்குத் தோல் உரிய ஆரம்பிச்சது. டெல்லியில பனி அதிகமா இருக்கிறதால, தோல் உரியுதுன்னு அசட்டையா இருந்துட்டோம். பிறகு, அங்க வேலையில்லாம ஊரோட வந்துட்டோம். இப்பவும் அமாவாசை வந்தா, இவனோட உடம்புல தோல் உரிய ஆரம்பிக்கும். அன்னையில இருந்து ஆறேழு நாள் பட்டை பட்டையா பாம்பு சட்டையை உரிப்பது போலவே, தோல் உரிஞ்சிக்கிட்டு வரும். ரத்தம் கசியும். அந்த நேரத்துல வெதுவெதுப்பா சுடுதண்ணியில குளுப்பாட்டணும். இல்லைன்னா வலியில துடிச்சிடுவான். இவனுக்கு என்ன நோய்னு டாக்டர்களுக்கும் தெரியலை. அமாவாசையில இருந்து 10 நாள் வரைக்கும் இவனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம வீட்டோடே வச்சிருப்பேன். அமாவாசை வந்தாலே பயமா இருக்கு...'' என்றார் ஆதரவற்ற அந்த மூதாட்டி.</span></span> <span style="font-size: x-small;"><br /><br /><img align="right" border="0" src="http://www.satyamargam.com/images/stories/news12/daresh-ahmad-3.jpg" /><span style="font-size: x-small;"> பாளம் பாளமாய் உடல்முழுக்க தோல் வெடித்துக் கிடக்க, தன் சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ராஜதுரையிடம் பேச்சுக் கொடுத்தோம். ''மாமா நான் ரெண்டாவது படிக்கிறேன். எனக்குப் படிக்கப் பிடிக்கும். ஆனா உடம்பு அரிக்குது... தூங்க முடியலை'' என்றான் மழலை மொழியில்.</span></span> <span style="font-size: x-small;"><br /><br /><span style="font-size: x-small;">சிறுவன் ராஜதுரையை, மாவட்ட ஆட்சியர் </span><a href="http://www.satyamargam.com/1889"><span style="font-size: x-small;">தாரேஸ் அகமது</span></a><span style="font-size: x-small;">விடம் அழைத்துச் சொன்றோம். அடிப்படையில் மருத்துவர் என்பதால் ராஜதுரையைப் பரிசோதித்த பிறகு நம்மிடம் பேசிய கலெக்டர், ''இந்த நோயை '</span><a href="http://en.wikipedia.org/wiki/Cold_agglutinin_disease"><span style="font-size: x-small;">ஆட்டோஇம்மியூன் டிஸார்டர் எகைன் சிண்ட்ரோம்</span></a><span style="font-size: x-small;">’ என்பார்கள். கருத்தரிப்பில் ஏற்படுகிற ஜீன்களின் குறைபாடு அல்லது மரபுவழியாக இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. பனிக்காலங்களில் அதிகமாக தோல் உரியும். முழுதாகக் குணப்படுத்த இயலாவிட்டாலும் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். இவனுக்குச் சிறப்பு மருத்துவம் கொடுக்க சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பாடு செய்கிறேன். இவனை, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்கவும் ஏற்பாடு செய்கிறேன்'' என்று உறுதியளித்தார்.</span></span> <span style="font-size: x-small;"><br /><br /><span style="font-size: x-small;">அந்த ஏழைகளின் சிரிப்பில் தெரிந்தது, நிஜ ஆனந்தம்.</span></span></div>
<div align="justify">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;">நன்றி: </span><a href="http://www.vikatan.com/article.php?aid=15842&sid=434&mid=2&"><span style="font-size: x-small;">ஜுனியர் விகடன்</span></a></span></div>
</td></tr>
</tbody></table>
</div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-46900235894971829982012-02-05T22:16:00.000-08:002012-02-05T22:16:24.786-08:00மீலாது விழா – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span id="sasText" style="left: -9999px; position: fixed; top: 0px;"><span style="font-family: Times New Roman;"> </span> </span></span></span><br />
<table class="contentpaneopen"><tbody>
<tr><td class="contentheading" width="100%"></td><td align="right" class="buttonheading" width="100%"></td><td align="right" class="buttonheading" width="100%"></td></tr>
</tbody></table>
<table class="contentpaneopen"><tbody>
<tr><td></td></tr>
<tr><td class="createdate" valign="top"></td></tr>
<tr><td valign="top"><div style="clear: both;">
</div>
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><img align="left" alt="மஸ்ஜிதுந் நபவீ" border="0" src="http://www.satyamargam.com/images/stories/news09/masjid-nabawi.jpg" title="மஸ்ஜிதுந் நபவீ" /><span style="color: #003366;"><span style="font-size: medium;"><span style="font-size: medium;">ஆ</span></span></span><span style="font-size: x-small;">ண்டுதோறும் ஹிஜ்ரி மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வலின் 12ஆவது நாளை, "ஈதே மீலாத்" என்ற பெயரில் முஸ்லிம்களில் அதிகமானோர் மிகவும் முக்கியத்துவம் அளித்துக் கொண்டாடி வருகின்றனர். </span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;">இந்நாட்களுக்கு முஸ்லிம் சமூகம் அளிக்கும் முக்கியத்துவத்தினைக் கருத்தில் எடுத்து, மாற்றாரும் இந்நாட்களை இஸ்லாத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தும் வருகின்றனர். அதற்கும் ஒருபடி மேலாக இந்திய அரசால் அந்நாள், இஸ்லாமிய அரசு விடுமுறையாகவே அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.</span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும் இந்த நாளின் பின்னணி என்ன?, இது நபிவழியில் அனுமதிக்கப்பட்டதா?, இதனைக் கடைபிடிப்பது ஸுன்னத்தா? பித்அத்தா? போன்ற பல ஆய்வுக் கட்டுரைகள் அவ்வப்போது வெளிவந்து மக்களை விழிப்புணர்ச்சியூட்டி வருவதும், வாத-பிரதி வாதங்களுடன் இது சரிகாணப்படுவதையும், மறுக்கப்படுவதையும் பரவலாக இந்திய அளவில் காண முடிகிறது.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">அதேபோன்று இந்தியாவிலிருந்து அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கும் இதைப்பற்றிப் பேசுவதும், இங்கிருந்து சென்ற சிலர் அங்கும் மீலாது கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கூடும் நிலையும் உள்ளது. அரபு நாடுகளில் "மீலாது" என்ற பெயரில் விடுமுறையோ கொண்டாட்டங்களோ, சிறப்பு நிகழ்ச்சிகளோ நடைபெறுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் பிறந்த மக்காவிலோ, புலம்பெயர்ந்த மதீனாவிலோகூட இந்நாள்வரை மீலாது என்ற பெயரில் ஏதும் விசேஷ விடுமுறையோ, நிகழ்ச்சிகளோ இல்லையென்பதும் கவனிக்கப்படவேண்டிய உண்மையாகும்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாட்களை மட்டுமே காட்டிச் சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில், மக்களிடம் ஒட்டியிருந்த முந்தைய எல்லா அனாச்சாரக் கொண்டாட்டங்களையும் ஒழித்து, ரமலான் மாதத்தை ஒட்டி "ஈதுல் பிஃத்ர்" எனும் ஈகைப் பெருநாளையும் ஹஜ்ஜை ஒட்டிய "ஈதுல் அழ்ஹா" எனும் தியாகத் திருநாளையும் முஸ்லிம்களுக்கான விழாநாள்கள் என வரையறுத்தார்கள். நபி(ஸல்) அவர்களால் இஸ்லாமியப் பண்டிகை தினங்களாக அடையாளப் படுத்தப்பட்டு இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பண்டிகை தினங்கள் இரண்டு மட்டுமே. இதனை இன்றும் அரபு நாடுகளில் அதிகப்படுத்தாமல் கடைபிடிக்கப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">ஈதே மீலாத் என்ற மீலாது எனும் விழா நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத, அவர்கள் அங்கீகாரம் பெறாத ஒரு செயல் என்பதே தெளிவு. ஆயினும் ஈதே மீலாத் என்பதன் பொருள், இது பின்பற்றப்படுவதன் பின்னணி, மற்றும் மார்க்கத்தில் அதன் நிலை போன்றவற்றை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">ஈத் என்றால் பெருநாள்-பண்டிகை என்று பொருள். மீலாத் என்றால் பிறப்பு என்று பொருள். ஆக, ஈதே மீலாத் என்றால், பிறந்த நாள் பண்டிகை(பெருநாள்) என்று பொருள். நபி(ஸல்) அவர்களின் பிறப்பைக் கொண்டாடும் முகமாக அவர்கள் பிறந்ததாகக் கருதப்படும் ரபியுல் அவ்வல் 12ஆம் நாளை ஈதே மீலாத் என முஸ்லிம்கள் கொண்டாடி வருகின்றனர்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">இன்று ஆங்கிலக் காலண்டரில் பல்வேறு பிற மதக் கடவுளர்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள்களின் பட்டியலோடு 'மீலாது நபி'யும் இடம் பிடித்துள்ளது.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">"நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு வைத்துள்ளவர்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தவறு ஒன்றும் இல்லையே" என்ற ஒரு கருத்தும், "நபி(ஸல்) அவர்களை நேசிப்பவர்கள் கண்டிப்பாக மீலாது விழா கொண்டாடியே ஆக வேண்டும்" என்ற ஒரு கருத்தும் இன்று பொதுவாக மக்கள் மனதில் பதிந்து கிடப்பதைக் காண முடிகிறது.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">மார்க்கத்தில் இவ்வாறு ஒரு தினத்தை விஷேசமாகக் கொண்டாடுவதற்கு அனுமதி உள்ளதா? என்பதைப் பார்க்கும்முன் இந்நாட்களில் "மீலாதுக் கொண்டாட்டம்" என்ற பெயரில் நாட்டில் நடக்கும் விஷயங்களை முதலில் பட்டியலிடுவது அவசியமாகும்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">மீலாதுக் கொண்டாட்டத்தில் மௌலிது ஓதுதல், பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊர்வலம் செல்லுதல் போன்றவை நடைமுறையில் உள்ளவற்றுள் முக்கியமானவையாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள் மற்றும் பிற மதத்தினரின் ஊர்வலங்களில் நடக்கும் அனாச்சாரங்களை மிஞ்சும் விதத்தில் மீலாது விழா ஊர்வலங்கள் நடத்தப்படுவதும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பங்களும், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டன.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">ஊர்வலங்களின்போது மார்க்கம் அனுமதிக்காத விதத்தில் உச்சதொனியில் தக்பீர் முழங்குவதோடு, பிற மதத்தினரைச் சீண்டும் விதத்தில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">மார்க்கம் அனுமதித்த விதத்தில் பொது நிகழ்ச்சிகள் மூலம் பிற மதத் தலைவர்கள், பிரமுகர்கள் முதல் அனைவருக்கும் இஸ்லாத்தினையும் இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைப்பது தவறு அல்ல. அதே நேரத்தில் நபி(ஸல்) அவர்களால் காட்டித் தரப்படாத ஒரு நாளில் அதுவும் அதை பெருநாளாகக் கருதி செயல்படுத்துவது அல்லாஹுக்கோ அல்லாஹ்வின் அருமைத் தூதர் - முஸ்லிம்களின் உயிருக்கும் மேலான அண்ணல் - நபி(ஸல்) அவர்களுக்கோ உகந்த செயலாக முடியுமா? என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">மீலாது விழா அல்லாஹ்வுக்கு உகந்ததோ, நன்மைகளை விளைவிக்கக் கூடியதோ என்றால் அதை மார்க்கத்தை நமக்குக் காட்டித்தர வந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்க மாட்டார்களா? அவ்வாறு அவர்கள் காட்டித் தராத ஒரு நன்மையான(?) காரியத்தை இன்று முஸ்லிம்கள் செய்கின்றனர் எனில் அதனை காட்டித் தர நபி(ஸல்) அவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்(நவூது பில்லாஹ்) என்பது அல்லவா பொருள்? அல்லாஹ் பாதுகாப்பானாக.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;">த</span></span><span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;">ம</span></span></span><span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">து இறுதிப்பேருரையின் பொழுது அரஃபா மைதானத்தில் வைத்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்: <br /><br /><strong><span style="color: teal;"><em><span class="q">"கவனியுங்கள்! எனது தூதுத்துவப்பணியை உங்களுக்கு அறிவித்து விட்டேனா?" எனக் கேட்டபோது, "ஆம் அல்லாஹ்வின் தூதரே!" என ஒட்டு மொத்த நபித்தோழர்களும் பதில் கூறினர் (<a href="http://chittarkottai.com/bukhari/tamil/numbersearch.php?bnumber=7078" target="_blank">புகாரி</a>).</span></em></span></strong></span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">இதனை சாட்சிப்படுத்திய நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளுக்கு பதிலாக வல்ல ரஹ்மான், </span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;"><span class="q"><em><span style="color: blue;"><strong>"இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்காகப் பூரணப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான (பொது) மார்க்கமாகவும் பொருந்திக் கொண்டேன்." (5:3) </strong></span></em></span>என்று தனது திருமறையில் வசனத்தை இறக்கி பதிலளித்தான்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span class="q"><em><span style="font-size: x-small;"></span></em></span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">இது தெளிவாக, மார்க்கம் முழுமைபடுத்தப்பட்டு விட்டதை அறிவிக்கும் பொழுது, அவற்றில் அல்லாத புதிதாக ஒரு நன்மையைத் தரக்கூடிய செயலாக சேர்க்கும் எந்த ஒரு செயலும் நரகத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்பதை நன்றாக முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">மேலும் இவை மறுமையில் நஷ்டத்தை விளைவிக்கும்; அதே வேளையில் மீலாது விழாக்களின்போது நடத்தப்படும் ஊர்வலங்கள், இம்மையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகமாக்குகின்றன. மேலும் மற்றவர்கள் மத்தியில் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்பும் இஸ்லாத்தைக் குறித்துத் தவறான கருத்தும் ஏற்படுவதற்குக் காரணியாக மீலாதுக் கொண்டாட்டங்கள் அமைகின்றன.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">மீலாது விழாக்களை வருடந்தோறும் நடத்தும் சிலர் அதற்கென சில காரணங்களை அடுக்குவதற்கும் தவறுவதில்லை. அதில் மிக முக்கியமானது, "நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம், மகிமைப் படுத்துகின்றோம்" என்பதாகும்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">ஒருவரை உண்மையில் நேசிப்பது என்பது, அவரை பின்பற்றுவதன் மூலமும் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் அவரின் கொள்கைகளை பரப்புவதன் மூலமுமே சாத்தியமாகும். அல்லாமல் தங்களது வாழ்வில் அவர் கூறிய எந்த விஷயத்தையும் பின்பற்றாமல் அவர் காட்டித் தந்த வழிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுவது மகிமைப்படுத்துவது ஆகாது; அவரின் புகழுக்கு அது களங்கம் விளைவிப்பதாக அமையும்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">இன்றும் அதுதான் நடைமுறையில் காணமுடிகின்றது. மீலாது விழா என்ற பெயரில் சிலர் செய்யும் அனாச்சாரங்கள், தவறுகள் மற்றவர்களை பாதிப்பதாக அமைவதோடு முஸ்லிமல்லாதோர் இதுதான் இஸ்லாம் எனக் கருதி இஸ்லாத்தையும் நபி(ஸல்) அவர்களையும் தூற்றும் நிலைக்கு செல்லும் நிலை உருவாகி உள்ளதை நாம் மறுக்க முடியாது. இதற்கும் விழாக் கொண்டாடுவோர் பதில் கூறக் கடமைப் பட்டுள்ளனர்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">இவ்விடத்தில் மற்றுமொரு விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். மீலாது விழாக்கள் என்ற பெயரில் நடத்தப்படும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத செயல்களின் மூலம் பல பிரதிபலன்களை அடைந்த பலர் அதனை எவ்விதத்திலாவது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட செயல் என்பதாக நிறுவ முயல்கின்றனர். அதற்கு யூசுஃப் அல்கர்ளாவி அவர்கள் அளித்த ஒரு பதிலைத் தங்களுக்கு ஏற்றவாறு திரித்து மின்மடலாற்குழுமங்களில் பரிமாறிக்கொள்வதைச் சான்றாகக் காணலாம்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">மீலாது விழாக்களைக் குறித்து கேட்கப்பட்ட ஓர் கேள்விக்கு, "இன்று முஸ்லிம்களிடையே மறக்கடிக்கப்பட்டு வரும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்கள், அவர்களின் உறுதி, சஹாபாக்களின் பற்று போன்றவை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு நினைவுறுத்தப்பட வேண்டும்" என்று 21ஆம் நூற்றாண்டின் சிறந்த மார்க்க அறிஞராக உலக மார்க்க அறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட டாக்டர். யூசுஃப் அல் கர்ளாவி அவர்களின் பதிலை மௌலிது ஓதவும், மீலாது விழாக்கள் கொண்டாடவும் ஆதாரமாகப் பரப்புகின்றனர்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">ஆனால் அவரது பதிலிலேயே, "சுன்னத் வல் ஜமாஅத் மற்றும் ஷியாக்களில் சிலர் இந்நாட்களில் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு செயல்களைச் செய்கின்றனர். அவை இஸ்லாத்தில் எவ்விதத்திலும் அங்கீகரிக்கப்படாது" என்றும் தெளிவாகக் கூறியுள்ளதை வசதியாக இருட்டடிப்புச் செய்து விட்டு, தங்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் எடுத்துப் பரப்பித் திரிகின்றனர். எனவே இவற்றையும் முஸ்லிம்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக் குறிப்பிட்டு நபி மொழிகளில் காணக்கிடைக்கும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தினால் இன்றைய நாட்களில் மீலாத் பெயரில் நடக்கும் அனாச்சாரங்கள் அனைத்தும் கற்பனையானவை என்றும் அந்நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதும் தெளிவாகும்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">நபி(ஸல்) அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அதுபற்றி நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வினவிய போது: <strong><span style="color: teal;"><em><span class="q">"அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். </span></em></span></strong><span style="color: teal;"><em><span class="q"><span style="color: black;">(முஸ்லிம்).</span></span></em></span></span></span></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span class="q"><span style="font-size: x-small;"></span></span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">மார்க்கத்தில் நபி(ஸல்) அவர்களின் பிறந்தநாளாக உறுதியாகப் பதிவு செய்யப்பட்ட ஒரே ஆதாரம் திங்கள் கிழமை என்பது மட்டுமே. இந்நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று வல்ல ரஹ்மானுக்கு நன்றி செலுத்திக் காட்டியுள்ளார்கள். உண்மையிலேயே எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மீது உயிரை வைத்திருப்பவர்கள் செய்ய வேண்டியது, திங்கள் கிழமைகளில் நோன்பு நோற்பதாகும். இதுவே அவர்களை மகிமைப் படுத்துவதையும் அவர்களின் மீது அன்பு வைத்திருப்பதையும் வெளிப்படுத்தும்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">ஏமாற்றுபவன், பொய் பேசுபவன், பிறருக்குத் தீங்கிழைப்பவன், அநீதி இழைப்பவன், பிறரை தரக்குரைவாகக் கருதுபவன், ஏற்றத்தாழ்வு கற்பிப்பவன், மது அருந்துபவன், சூதாடுபவன், விபச்சாரம் செய்பவன், புறம் பேசுபவன், வட்டி வாங்குபவன், அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடக்காதவன், வீண் விரயம் செய்பவன், பித்அத் புரிபவன், பிரிவினையை ஏற்படுத்துபவன், நபிவழியைப் புறக்கணிப்பவன் ... என்று யாரையெல்லாம் அடையாளம் காட்டி அவர்கள் நம்மைச் சார்ந்தவனல்லன் என்றும் இன்னும் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்களோ அத்தகைய தீயபழக்க வழக்கங்களை விடுத்து வாழ்வதே உண்மையில் நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதும் மகிமைப்படுத்துவதும் ஆகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">நபி(ஸல்) அவர்களை முறையாகப் பின்பற்றி வாழ முனைவதே அவர்களை கண்ணியப்படுத்துவதும் அதுவே இறை பொருத்தத்திற்கு வழிவகுக்கக் கூடியதுமாகும் என்பதை உள்ளத்தில் பதித்து வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!</span></span></span></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<br /></div>
<div style="margin: 0cm 0cm 0pt; text-align: justify;">
<span style="color: navy;"><strong><em><span style="font-size: x-small;"><span style="font-family: arial, helvetica, sans-serif;"><span style="font-size: x-small;">ஆக்கம்: இப்னு முஹம்மத்(ஹனீஃப்)</span></span></span></em></strong></span></div>
</td></tr>
</tbody></table>
<br />
<div id="credit">
<br />
thanks to <a href="http://www.satyamargam.com/">http://www.satyamargam.com/</a></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-6743633404977079792012-02-01T00:03:00.001-08:002012-02-01T03:48:47.664-08:00நல்ல நோட்டா... கள்ள நோட்டா என்பதை மக்கள் தெரிந்துகொள்வது எப்படி?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<img src="http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ilakkiyam/24.1.12/money.jpg" /><br />
<br />
<span style="font-size: 10pt;"> <span style="font-size: 14pt;">ச</span>மீபத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை கைது செய்திருக்கிறது போலீஸ். அப்படியென்றால் நம் கையில் வைத்திருக்கும் எந்த </span><span style="font-size: 10pt;">நோட்டு</span><span style="font-size: 10pt;">ம்</span><span style="font-size: 10pt;"> </span><span style="font-size: 10pt;">கள்ளநோட்டாக இருக்கலாம். எப்படி தெரிந்துகொள்வது? நாம் பயன்படுத்தும் பணத்துக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சென்னையிலுள்ள ரிசர்வ் பேங்க் இந்தியாவின் (Reserve Bank of India) தலைமை அலுவலக கருவூல பகுதி அலுவலர்களிடம் கேட்டபோது, “நல்லநோட்டு...தனிச்சிறப்பு வாய்ந்த காகிதமும் நன்கு கூழாக்கப்பட்ட பருத்தியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த நோட்டுகளை எண்ணும்போது 'பட பட'வென சத்தம் உண்டாகும். ஆனால், கள்ளநோட்டில் தரம் குறைந்த காகிதம் பயன்படுத்தப்படுவதால் தடிமனையும் தரத்தையும் வைத்து கண்டுபிடிக்கலாம். இரண்டாவது... புற ஊதா விளக்கு ஒளியில் (அல்ட்ரா வைலட் லைட் எனப்படும் விளக்குகள் தனியாகவே இருக்கின்றன!) நன்றாக ஜொலிக்கும் மையினால் (fluorescent Ink) நல்லநோட்டு அச்சடிக்கப்படுகிறது. பணத்தில் உள்ள நம்பர்களுக்கு இடையேயான இடைவெளி ஒரே சீராக இருக்கும். மேலும், சிவப்பு நிறத்தில் பெரிதாக பளிச்சென்று தடிமனாக இருக்கும். 1000 ரூபாய் நோட்டில் மட்டும் வலது மேல் பாகத்தில் கருநீல நிறத்திலும், இடது புறத்தின் கீழ்ப்பகுதியில் சிவப்புநிறத்திலும் அச்சடிக்கப்படுகிறது. </span><br />
<div style="text-align: center;">
<span style="font-size: 10pt;"><img src="http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ilakkiyam/24.1.12/01.jpg" /></span><br />
<img src="http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ilakkiyam/24.1.12/02.jpg" /><br />
<span style="font-size: 10pt;"></span></div>
<span style="font-size: 10pt;"><br />ஆனால், கள்ளநோட்டில் பெரும்பாலும், வரிசை எண்கள் ஒரே சீராக இல்லாமல்...எண்களில் சைஸ் சிறியதாகவும்...இடைவெளி விட்டும் இருக்கலாம். மேலும், கள்ளநோட்டுகள் புற ஊதா விளக்கொளியில் (அல்ட்ரா வைலட் லேம்ப்) ஜொலிக்காது. மூன்றாவது...500....1000 ரூபாய் நோட்டுகளில் மத்தியில் மதிப்பு இலக்கம் பச்சை நிறத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். சற்றே சாய்த்துப்பார்த்தால் அந்த பச்சை நிறம் நீல நிறமாக மாறித்தெரியும். கள்ளநோட்டில் பச்சைநிறம் நீலநிறமாக தெரிய வாய்ப்பில்லை. நான்காவது...மகாத்மா காந்தி படத்திற்கு இடதுபுறம் இருக்கும் 100, 500,1000 ரூபாய் நோட்டுகளில் பாதுக்காப்பு இழை சாளரம் சாளரமாகத் தெரியும். மேலும்...வெளியே பாதி தெரிந்தும், உள்ளே பாதி பொதிந்தும் இருக்கும். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாகத் தெரியும். பாரத் என்று ஹிந்தியிலும், RBI (RESERVE BANK OF INDIA-வின் சுருக்கம்!) என்று ஆங்கிலத்திலும் மாறி மாறி அச்சடிக்கப்படிருக்கும். 1000 ரூபாய் நோட்டில் கூடுதலாக... 1000 என்ற இலக்க எண்ணும் அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும். 2005 க்கு பின்பு அச்சடிக்கப்பட்ட நோட்டுகளில் பச்சையாக தெரியும் இழை வெவேறு கோணங்களில், பார்க்கும்போது நீல நிறமாக தெரியும். அல்ட்ரா வைலட் வெளிச்சத்தில் முன்பக்க எழுத்துக்களும் சேர்த்து மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். ஆனால், கள்ளநோட்டிலோ வெள்ளி நிற பெயிண்ட் ஒட்டப்பட்டிருக்கலாம். வெளிச்சத்தில் தூக்கிப்பார்த்தால் ஒரே கோடாக தெரியாது. பாதுகாப்பு இழை போன்ற ஒன்றை ஒட்டியிருப்பார்கள். கறுப்புக்கோடு வரைந்திருப்பார்கள். </span><br />
<div style="text-align: center;">
<span style="font-size: 10pt;"><img src="http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ilakkiyam/24.1.12/03.jpg" /></span><br />
<img src="http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ilakkiyam/24.1.12/04.jpg" /><br />
<span style="font-size: 10pt;"></span></div>
<span style="font-size: 10pt;"><br />பாதுகாப்பு இழையில் நிறம் மாறும் தன்மை இருக்காது. இதெல்லாம் மிக உன்னிப்பாக கவனித்துப்பார்த்தால் தெரியும். ஐந்தாவது...ஒளி ஒதுக்க முறையில் மகாத்மா காந்தியின் உருவம் சினிமா ஸ்லைடுபோல் தத்ரூபமாக தெரியும். நகல் (செராக்ஸ்) எடுக்கமுடியாத பல்திசைகோடுகளும் இருப்பதை மகாத்மாகாந்தியின் உருவத்தை வெளிச்சத்தில் பார்த்தால் தெரியும். காகித தயாரிப்பு நிலையிலேயே, நீர்குறியீடும் (வாட்டர்மார்க்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கள்ள நோட்டிலோ உண்மையான நோட்டை காப்பியெடுக்கும் முயற்சியில் மகாத்மா காந்தியின் படம் தெளிவாக இல்லாமல்...கார்ட்டூன் படம்போல் இருக்கலாம். வெளிச்சத்தில் பணத்தை தூக்கிப்பார்த்தால் இந்த வித்தியாசத்தை தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதையெல்லாம்...குறைந்த பணத்தை கையில் வைத்திருக்கும்போது நாம் தெரிந்துகொள்ளவேண்டியது. ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்துக் கொண்டுபோகும்போது வங்கிகள் அதற்கான தரமான மெஷின்களை வைத்து கள்ளநோட்டா நல்லநோட்டா என்று கண்டறிய வேண்டும். மேலும், வங்கிப் பணியாளர்களும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்” என்கிறார்கள் ஆலோசனையாக.<br /><br style="color: magenta; font-weight: bold;" /><span style="color: magenta; font-weight: bold;">-</span></span><span style="color: magenta; font-size: 10pt; font-weight: bold;">ம.மனோ</span></div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-3133804564879522152012-01-30T19:59:00.001-08:002012-01-30T19:59:10.319-08:00பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE01_pYikxD4lDrQTIY6stZi-ZKIDelja9RQfW8i7VxrhxMg3pFqxa143qM17WggH0mUnK6qPERv0xqyxclJW5VYI-dikn0cFVVoeWLkMG54xeZ4Ouyd9rKjzwzGd3HdimhTcDKn7a_Hs/s1600/75%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" closure_uid_asgd8c="3" height="320" kba="true" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE01_pYikxD4lDrQTIY6stZi-ZKIDelja9RQfW8i7VxrhxMg3pFqxa143qM17WggH0mUnK6qPERv0xqyxclJW5VYI-dikn0cFVVoeWLkMG54xeZ4Ouyd9rKjzwzGd3HdimhTcDKn7a_Hs/s320/75%255B1%255D.jpg" width="288" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது பெண் சிசுக் கொலை பெண் வீட்டுக்காரன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகின்றது. அதனால் இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<strong><span style="color: blue;">தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகப் புரட்சி</span></strong></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல் வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை அல்லது தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெண் வீட்டில் விருந்து வைத்தே தீருவோம்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு காலத்தில் பெண் வீட்டிலிருந்து வாரி வழித்து சுருட்டி சுரண்டிக் கொண்டிருந்த வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் படை இன்று வேண்டாம் வரதட்சணை வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன் தான் பெண் பேசிய வீட்டில் பெண் வீட்டு விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை விருந்து வைத்தே தீருவேன்; இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று மிரட்டியுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம் பெண்ணின் தந்தை விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடுமாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக் கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<strong><span style="color: blue;">புறக்கணிப்பு</span></strong></div>
<div style="text-align: justify;">
இன்று தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்; அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால் பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை சாபக் கேட்டை சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்; வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத் அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால் இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<strong><span style="color: blue;">இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?</span></strong></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<strong>நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 5:2)</strong></div>
<div style="text-align: justify;">
<strong><br /></strong></div>
<div style="text-align: justify;">
<strong>உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்</strong> <strong>என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.</strong></div>
<div style="text-align: right;">
<strong>அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) </strong></div>
<div style="text-align: right;">
<strong>நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)</strong></div>
<div style="text-align: right;">
<strong><br /></strong></div>
<div style="text-align: justify;">
இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால் இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<strong><span style="color: blue;">சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்</span></strong></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகின்றது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கின்றது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர்; அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது; மேனி புல்லரிக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில் அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால் உதவி செய்ய முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல லட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வர மாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<strong><span style="color: blue;">அன்பளிப்பின் அடிப்படை</span></strong></div>
<div style="text-align: justify;">
<strong><br /><span style="color: blue;"></span></strong></div>
<div style="text-align: justify;">
<strong>அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்! என்று கூறினார்கள்.</strong></div>
<div style="text-align: right;">
<strong>அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)</strong></div>
<div style="text-align: right;">
<strong>நூல்: புகாரி 6636</strong></div>
<div style="text-align: right;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத் வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது. சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து அந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள் வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை. அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளூரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில் பெண் அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளூரிலேயே மாப்பிள்ளை பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் இன்று அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் கொள்கையுள்ள பெண் வேண்டும் என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற சமூக நிர்ப்பந்தம் உருவாகி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகின்றது. இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே இதைக் கவனத்தில் கொண்டு ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம் முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள்இவிருந்துச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து ஒரு விருந்து வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக் கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும் பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு பாவத்திற்குத் துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: right;">
<strong>நன்றி</strong></div>
<div style="text-align: right;">
<strong>RASMINMISC.TK</strong></div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-53250010417466017702012-01-30T19:53:00.000-08:002012-01-30T19:53:43.242-08:00உயர்த்தி கட்டப்பட்ட கப்ர்கள் இடிக்கப்பட்டதை ஆதரித்த ஷாஃபி இமாம்! கப்ர்களை கட்டி அழகு பார்க்கும் ஷாஃபி மத்ஹபினர்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiks2IjqrEzcS7IM8BTSrDXmW4OGdodN_Ztnwepm1j816U4GcidrAbW7jo3-e3P4q1AYo93q2HtZz-94asicA8Hfv0tP5rYH-bSyuudr_9BJVK_TVJodqkJ-7jTzRRC1mLt8WGLXrW7gbk/s1600/kabr.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-align: justify;"><img border="0" closure_uid_hfpqlv="3" height="260" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiks2IjqrEzcS7IM8BTSrDXmW4OGdodN_Ztnwepm1j816U4GcidrAbW7jo3-e3P4q1AYo93q2HtZz-94asicA8Hfv0tP5rYH-bSyuudr_9BJVK_TVJodqkJ-7jTzRRC1mLt8WGLXrW7gbk/s320/kabr.jpg" width="320" /></a><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கப்ருகள் தரைக்கு மேல் ஒரு ஜான் அல்லது அது போன்ற அளவிற்கு உயர்த்தப்படுவதைத் தான் நான் விரும்புகிறேன். அது கட்டப்படாமல் இருப்பதையும் பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது (கட்டுவதும் பூசுவதும்) அலங்காரத்திற்கும் பெருமைக்கும் ஒப்பாக உள்ளது. மரணம் இதற்கு உரியதல்ல. முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களின் கப்ருகள் பூசப்பட்டதாக நான் காணவில்லை. மக்கமா நகரில் அதிகாரிகள் அங்கு கட்டப்பட்ட கப்ருகளை இடித்ததைப் பார்த்தேன். இதை மார்க்க அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை. இவ்வாறு ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
(இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்த நூல்: அல் உம்மு, பாகம்: 1 பக்கம்: 277)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
ஷாஃபி மத்ஹபினர் என்று சொல்லுபவர்கள் நிறைந்து வாழும் நமது ஊரில் பள்ளிக்குள் கப்ரும் தர்ஹாக்களும் இன்றும் இருப்பது எப்படி? இன்னுமா தயக்கம்? இமாம்களையே அல்லது மற்றவர்களையே பின்பற்றுவதை விட்டுவிட்டு, குர்ஆனையும் ஹதீசையும் பின்பற்ற முன்வாருங்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கப்ர் வணக்கத்தை பற்றி நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ்களுக்கு செயல்வடிவம் கொடுங்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>உயர்த்தி கட்டப்பட்ட கபர்களை இடிக்க கட்டளையிட்ட நபி (ஸல்) அவர்கள்:</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
‘உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி)</div>
<div style="text-align: justify;">
நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<b>நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரலி) அவர்களுக்கு உயர்த்தி கட்டப்பட்ட கப்ர்களை தரைமட்டமாக்க கட்டளையிட்ட அலி (ரலி) அவர்கள்:</b></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div>
<div style="text-align: justify;">
அலி பின் அபுதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எந்த வேலைக்காக என்னை அனுப்பினார்களோ அந்த வேலைக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த வேலை என்னவென்றால்) எந்த உருவச்சிலையையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர். (தரையை விட) உயர்ந்துள்ள எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதீர் என்று கூறினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ அவர்கள்<br />நூல்: முஸ்லிம் 1764</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div>
<div style="text-align: justify;">
<b>கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் தடுத்த நபி (ஸல்) அவர்கள்:</b></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) </div>
</div>
<div>
<div style="text-align: justify;">
நூல்: முஸ்லிம் 1610</div>
</div>
</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<b>கப்ர் வணங்கிகளுக்கு சாபம்:</b></div>
</div>
<div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) </div>
</div>
<div>
<div style="text-align: justify;">
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816</div>
</div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<b>கப்ரை வணங்குபவர்கள் மோசமான படைப்பினங்கள்:</b></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். </div>
</div>
<div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<div>
<div style="text-align: justify;">
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) </div>
</div>
<div>
<div style="text-align: justify;">
நூல்: புகாரி 427, 434, 1341, 3873</div>
</div>
</div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5155750001030776496.post-20732269963462997922012-01-30T19:46:00.001-08:002012-01-30T19:46:59.536-08:00பள்ளிவாசல் நிர்வாகிகளே, மௌலூது பள்ளிவாசல்களில் பாடப்படுவதை தடை செய்யுங்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்….)</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br />அன்புக்குரிய பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த மடல் தூய இஸ்லாமிய சிந்தனையுடனும், பூரண உடல் நலத்துடனும் உங்களை சந்திக்கட்டுமாக!</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரில் சில பள்ளிவாசல்களில் மவ்லூதுகள் என்ற பெயரில் பல பாடல்கள் ஓதப்பட்டு வருகின்றன. ஆனால், இறைவனது திருப்தியைப்பெறும் நோக்கத்தில் ஓதப்படும் மவ்லூதுகளினால் இறைவனது கோபப்பார்வைதான் ஏற்படுகின்றது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில்) அவனைவிடுத்து வேறுயாரையும் அழைக்காதீர்கள்” (அல்குர்-ஆன் 72:18) என்ற அல்லாஹ்வுடைய கட்டளையை புறந்தள்ளும் விதமாகத்தான் நபிகள் நாயகத்தை அழைத்து பாடப்படும் மவ்லூது வரிகள் அமைந்துள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நபிகள் நாயகம் அவர்களை இறைவனுடைய நிலைக்கு உயர்த்தும் பாடல்வரிகளும் இதில் ஏராளமாக உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கிவிட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். (அல்குர்ஆன் 5:72). எனவே இத்தகைய மாபாதக இணைவைக்கும் காரியத்தை விட்டு நாம் விலகவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும், இத்தகைய இணைவைப்பு காரியங்களை ஏகத்துவ மையமாக திகழ வேண்டிய பள்ளிவாசல்களில் ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள் இத்தகைய இணைகற்பிக்கும் மாபாதக செயல்களை உங்களது பொறுப்பில் பள்ளிவாசல்களில் செய்ய அனுமதியளிப்பீர்களேயானால் அல்லாஹ் இது குறித்து உங்களிடம் விசாரிப்பான். ஏனெனில், நபிகளார் கூறிக்காட்டியுள்ளார்கள்:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். ஒவ்வொருவரும் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்”. (ஆதாரம்: புகாரி: 893)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே, இணைவைக்கும் பெரும்பாவத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும் மவ்லூது, மற்றும் இது போன்ற பாவங்களான தர்கா, தட்டு, தகடு, தாயத்து, போன்ற இணைவைப்பு செயல்களையும், மற்றும் நம்மை வழிகெடுக்கும் பித்அத்களையும் (மார்கத்தின் பெயரால் புதிதாக புகுத்தப்படும் அனாச்சாரங்களையும்) உங்களது பொறுப்பின் கீழ் இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் அனுமதிக்காமல் தடைசெய்யும் படி உரிமையுடன் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். இத்தகைய செயல்களை இனிமேலும் நீங்கள் அனுமதித்தால் உங்களது பொறுப்பின் கீழுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வழிகெடுத்த பாவத்தையும் நீங்கள் சேர்த்து சுமக்க நேரிடும் என்பதையும் உங்களுக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.</div>
</div>Unknownnoreply@blogger.com