தாராபுரத்தில் ஒரே பரபரப்பு !!
02.01.2012 அன்று தாராபுரம் உப்புத்துறைபாளையத்தில், இறைச்சிக்காக அறுக்க கொண்டு வநத ஆட்டினுடைய வயிற்றில் மனித பெண் வடிவிலான ஆட்டுக்குட்டி பிறந்தது.
இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று தாராபுரத்தில் உள்ள அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கி இருக்கின்றனர். ஆனால் இதை பார்க்க கூடிய முஸ்லீம்கள் இதிலிருந்து படிப்பினைதான் பெற வேண்டும்.
ஆம் அது என்னவென்றால் மறுமை நாளினுடைய அடையாளமாக ஒரு அதிசய பிராணி ஒன்று தோன்றும் அது மனிதர்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி பேசும் என்று இறைவன் தனது திருமறை குர்ஆனில்.
அவர்களுக்கு எதிரான (நமது) கட்டளை நிகழும் போது பூமியிலிருந்து ஓர் உயிரினதை வெளிப்படுத்துவோம் . நமது வசனங்களை மனிதர்கள் உறுதி கொள்ளாமல் இருந்தது பற்றி அது பேசும்((27:82
என்று கூறுகிறான் என்னதான் இறைவன் மீது ஒரு முஸ்லீம் நம்பிக்கை வைத்திருந்தாலும் பிராணி பேசும் என்பதை நூறு சதவிதம் ஏற்றும் ஏற்காதவர்களாகதான் உள்ளனர் அதற்கு ஒரு உதாரணம் தான் இந்த ஆட்டுக்குட்டி.
ஆட்டினுடைய வயற்றில் மனித பெண் வடிவ ஆட்டுக்குட்டியை பிறக்க வைத்த இறைவன் நிச்சயமாக ஒரு அதிசய பிராணியை வெளிப்படுத்தி பேச வைப்பான் என்று நம்புவதே ஒரு முஸ்லீமின் பண்பாக இருக்க வேண்டும்.